இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1986: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 76: | Line 76: | ||
* [http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1986 இலக்கியச் சிந்தனையின் 1986-ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகள்] | * [http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1986 இலக்கியச் சிந்தனையின் 1986-ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகள்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 05:55, 31 January 2023
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1986
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | நினைவுச் சின்னம் | மும்தாஜ் யாசீன் | கல்கி |
பிப்ரவரி | ஓர் உண்ணாவிரதத்தின் கதை | பூதுகன் | தீபம் |
மார்ச் | சவண்டிக் கொத்தன் | கி.வே. ரமணி | கணையாழி |
ஏப்ரல் | ஆகாசக் கனவுகள் | ஆ. சந்திரபோஸ் | இதயம் சிறுகதை களஞ்சியம் |
மே | ஒரு இளைய பாரதம் கைகட்டி நிற்கிறது | ஸரஸாம்பிகா | ஆனந்த விகடன் |
ஜூன் | மழை ஓய்ந்தது | இரா சோமசுந்தரம் | கணையாழி |
ஜூலை | முள் | பாவண்ணன் | கணையாழி |
ஆகஸ்ட் | ஒளிந்திருந்த வயோதிகம் | அழகாபுரி அழகப்பன் | குங்குமம் |
செப்டம்பர் | மதிப்பு மிகுந்த மலர் | வல்லிக்கண்ணன் | அரும்பு |
அக்டோபர் | பாஷை | ஜெயந்தன் | அமுதசுரபி |
நவம்பர் | மண்குடம் | மாதவராஜ் | செம்மலர் |
டிசம்பர் | மட்டம் தட்டாதே நண்பா ! | பார்கவி | சாவி |
1986-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1986-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, பாவண்ணன் எழுதிய ‘முள்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆ. மாதவன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை ஸ்ரீ. பி.எஸ் தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page