under review

பா.மதிவாணன்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Corrected section header text)
Line 30: Line 30:
*தமிழ் இனி 2000 - மாநாட்டுக் கட்டுரைகள்  (இணைப் பதிப்பாசிரியர்)
*தமிழ் இனி 2000 - மாநாட்டுக் கட்டுரைகள்  (இணைப் பதிப்பாசிரியர்)


==உசாத்துணை==
== உசாத்துணை ==
*[https://mathipuu.blogspot.com/?m=1 மதிப்பூ ( mathipuu.blogspot.com)]
*[https://mathipuu.blogspot.com/?m=1 மதிப்பூ ( mathipuu.blogspot.com)]



Revision as of 09:07, 19 December 2022

பா.மதிவாணன்
பா.மதிவாணன்

பா.மதிவாணன் (பிறப்பு:ஜூலை 25, 1957) தமிழ் இலக்கிய ஆய்வாளர். கல்வியாளர். ஆய்வுத்தொகைகளையும் வெளியிட்டிருக்கிறார். புகழ்பெற்ற இலக்கண அறிஞர் ச.பாலசுந்தரத்தின் மகன்.

பிறப்பு,கல்வி

பா.மதிவாணன் புகழ்பெற்ற இலக்கண அறிஞர் ச.பாலசுந்தரம் -பங்கயவல்லி இணையரின் மகனாக ஜூலை 25, 1957-ல் பிறந்தார். தமிழிலக்கியத்தில் 1980-ல் முதுகலைப் பட்டம் பெற்று, 1983-ல் ஆய்வுநிறைஞர் பட்டமும், 1989-ல் முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்விப்பணி

முனைவர் பா. மதிவாணனின் ஆய்வுத்தலைப்புகள்.

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைகளில் காணும்சமுதாய உணர்வு ( ஆய்வியல் நிறைஞர்),
  • தெ.ச.சொக்கலிங்கத்தின் 'காந்தி’ இதழ் -ஓர் ஆய்வு (முனைவர்)   
  • நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சியில் 'நிகழ் ' இதழின் வகிபாகம், ஜூன் 2008 (பல்கலைக்கழக நல்கை ஆணை நிதியுதவியுடன் நிறைவு செய்த ஆய்வுத் திட்டம்) 
  • சங்க இலக்கியப் பண்டைய உரையாசிரியர்கள் தரும்   இலக்கணக் குறிப்புகள், அக்டோபர், 2016 (செம்மொழித்  தமிழாய்வு நடுவண் நிறுவன நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட ஆய்வுத்திட்டம்)

பா.மதிவாணன் நெறியாள்கையில் பதினைந்துபேர் முனைவர்ப் பட்ட ஆய்வு செய்துள்ளனர்.

தனிவாழ்க்கை

பா.மதிவாணன் கரந்தை, தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியில் (தஞ்சாவூர்) ஜனவரி 9, 1984 முதல் ஜூலை 23, 2008 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் தமிழியல்துறை பேராசிரியராக ஜுலை 24, 2008 முதல் பணியாற்றி ஜூன் 30, 2018-ல் ஓய்வுபெற்றார்.

மதிவாணனின் மனைவி பெயர் திலகவதி. அருள், அரசு என இரு மகன்கள்.

இலக்கியப்பணிகள்

பா.மதிவாணன் பழந்தமிழிலக்கியம் மற்றும் நவீன இலக்கியம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருக்கிறார். டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு பா.மதிவாணனின் முனைவர் பட்ட ஆய்வேடான (1989-ல் அளிக்கப்பட்டது) டி.எஸ். சொக்கலிங்கம்:அரசியல்,இதழியல் (1998) அவரது நூற்றாண்டில் வெளியிடப்பட்டது.

புறநானூற்றுக்குச்  சுஜாதா எழுதிய உரையில் பரவலாக விரவிக் கிடந்த தடுமாற்றங்கள் தவறுகளையும் அறியாமை புரியாமைகளையும் சுட்டிப் பழம்பனுவல்களுக்கு உரை காணும் முறைமையை முன்வைக்கும் நூல் சங்க இலக்கிய உரைகளும் கறைகளும் (2006) ச.பாலசுந்தரத்தின் தொல்காப்பிய ஆராய்ச்சிக்  காண்டிகையுரையில் அவர் முற்றிலும் புதியனவாகக் கொண்ட பாடங்களின் வன்மைமென்மைகளை விளக்கும்  நூல் தொல்காப்பியம் பால பாடம்(2014). கோவை ஞானி நடத்திய நிகழ் இதழ் பற்றி ஆய்வு செய்துள்ளார்.

ஊடகம்

தொலைக்காட்சித் தொடர்: அன்றாட வாழ்வில் இலக்கணம், மக்கள் தொலைக்காட்சி,சென்னை   (50 பகுதிகள் 2007-08 )

இலக்கிய இடம்

பா.மதிவாணன் மரபிலக்கியம், நவீன இலக்கியம் இரண்டு களங்களிலும் ஆய்வுசெய்யும் கல்வித்துறையாளர்களில் ஒருவர். தமிழிலக்கண அறிமுகம், பழந்ததமிழ் ஆய்வு சார்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். தமிழ் இதழியல் வளர்ச்சி, தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழல் பற்றியும் ஆய்வுசெய்துள்ளார். இவை ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை அவருக்கு அளிக்கின்றன.

நூல்கள்

  • டி.எஸ். சொக்கலிங்கம்:அரசியல்,இதழியல் (1998) (இணையநூலகம்)
  • அடிவானம் நோக்கிச் சில அடிகள் (2000)
  • சங்க இலக்கிய உரைகளும் கறைகளும் (2006)
  • தொல்காப்பியம் பால.பாடம்(2014)
  • தமிழ் இனி 2000 - மாநாட்டுக் கட்டுரைகள்  (இணைப் பதிப்பாசிரியர்)

உசாத்துணை



✅Finalised Page