கழார்க் கீரன் எயிற்றியார்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
கழார்க் கீரன் எயிற்றியார், [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்ககாலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவரது 8 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. | கழார்க் கீரன் எயிற்றியார், [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்ககாலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவரது 8 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. | ||
== பெயர்க் காரணம் == | == பெயர்க் காரணம் == | ||
கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர். கழார்க் கீரன் எயிற்றியார் அந்த ஊரை சேர்ந்தவராக இருக்கலாம். கழாரில் வாழ்ந்த மற்றொரு புலவர் [[கழார்க் கழார்க் எயிற்றியனார்]]. | கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர். கழார்க் கீரன் எயிற்றியார் அந்த ஊரை சேர்ந்தவராக இருக்கலாம். கழாரில் வாழ்ந்த மற்றொரு புலவர் [[கழார்க் கழார்க் எயிற்றியனார்|கழார்க் கீரன் எயிற்றியனார்]]. | ||
== பாடல்கள் == | == பாடல்கள் == | ||
கழார்க் கீரன் எயிற்றியார் இயற்றிய எட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ள சங்கத் தொகை நூல்களின் விவரம்; | கழார்க் கீரன் எயிற்றியார் இயற்றிய எட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ள சங்கத் தொகை நூல்களின் விவரம்; | ||
Line 8: | Line 8: | ||
*[[நற்றிணை]]- 281, 312 | *[[நற்றிணை]]- 281, 312 | ||
===== அகநானூறு 163 ===== | ===== அகநானூறு 163 ===== | ||
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, | <poem> | ||
''விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, | |||
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், | ''தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், | ||
''எமியம் ஆக, துனி உளம் கூர, | |||
எமியம் ஆக, துனி உளம் கூர, | ''சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, | ||
''பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி | |||
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, | ''விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது | ||
''களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை | |||
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி | ''முளரி கரியும் முன்பனிப் பானாள், | ||
''குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! | |||
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது | ''எனக்கே வந்தனை போறி! புனற் கால் | ||
''அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, | |||
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை | ''கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது | ||
''இனையை ஆகிச் செல்மதி; | |||
முளரி கரியும் முன்பனிப் பானாள், | ''வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே! | ||
''எளிய பொருள்; | |||
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! | </poem> | ||
எனக்கே வந்தனை போறி! புனற் கால் | |||
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, | |||
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது | |||
இனையை ஆகிச் செல்மதி; | |||
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே! | |||
எளிய பொருள்; | |||
பலவகையாய மலர்களும் குழைந்திட, வானின் கண்முழங்கிக் கூடிய, குளிர்ந்த மேகம் சொரிந்துபோன குறைந்த பெயலைக் கொண்ட கூதிரின் கடை நாளில், மனத்தே வெறுப்பு மிக, யாம் தமியேமாகப் பிரிந்துசென்ற தலைவரை எண்ணி, எஞ்சியசிலவாய வளைகளும் கழன்று போக, பெரிய ஆர்வம் கொண்ட உள்ளத்தோடு அவர் மீண்டுவரும் திசையை நோக்கி(வருந்தி) , இறத்தற்கேதுவாய துன்பத்தோடு கூடியிருத்தலின் அளிக்கத்தக்காள் இவள் என்று நினையாது; யானை (நீரைப்பருக) உயிர்ப்பது போலும் இடம் மறைய வீசும் பனித்துளியால், தாமரைமலர் கரிந்திடும் முன்பனிக்காலத்துப் பாதியிரவில், மலையையும் நடுங்கச் செய்வதுபோன்ற குளிரைக்கொண்ட வாடைக்காற்றே, நீ என்பாலே நலிய வந்தனைபோல்கின்றாய்; நீர் ஓடுகாலியிடத்துள்ள நுண்மணலாலாய மேடு கரைந்திடல்போல, கொடியராய அத்தலைவர் சென்ற திசையில், அயராது இன்ன தன்மையினை ஆகிச்செல்வாயாக; (செல்லின்) பொருளீட்டும் தொழிலிற் பெருவேட்கை யுடையார் என்னை நினைத்து வருதலும் உண்டு. | பலவகையாய மலர்களும் குழைந்திட, வானின் கண்முழங்கிக் கூடிய, குளிர்ந்த மேகம் சொரிந்துபோன குறைந்த பெயலைக் கொண்ட கூதிரின் கடை நாளில், மனத்தே வெறுப்பு மிக, யாம் தமியேமாகப் பிரிந்துசென்ற தலைவரை எண்ணி, எஞ்சியசிலவாய வளைகளும் கழன்று போக, பெரிய ஆர்வம் கொண்ட உள்ளத்தோடு அவர் மீண்டுவரும் திசையை நோக்கி(வருந்தி) , இறத்தற்கேதுவாய துன்பத்தோடு கூடியிருத்தலின் அளிக்கத்தக்காள் இவள் என்று நினையாது; யானை (நீரைப்பருக) உயிர்ப்பது போலும் இடம் மறைய வீசும் பனித்துளியால், தாமரைமலர் கரிந்திடும் முன்பனிக்காலத்துப் பாதியிரவில், மலையையும் நடுங்கச் செய்வதுபோன்ற குளிரைக்கொண்ட வாடைக்காற்றே, நீ என்பாலே நலிய வந்தனைபோல்கின்றாய்; நீர் ஓடுகாலியிடத்துள்ள நுண்மணலாலாய மேடு கரைந்திடல்போல, கொடியராய அத்தலைவர் சென்ற திசையில், அயராது இன்ன தன்மையினை ஆகிச்செல்வாயாக; (செல்லின்) பொருளீட்டும் தொழிலிற் பெருவேட்கை யுடையார் என்னை நினைத்து வருதலும் உண்டு. | ||
===== அகநானூறு 217 ===== | =====அகநானூறு 217===== | ||
பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, | <poem> | ||
''பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,'' | |||
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, | ''எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,'' | ||
''துவலை தூவல் கழிய, அகல் வயல்'' | |||
துவலை தூவல் கழிய, அகல் வயல் | ''நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்'' | ||
''கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,'' | |||
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் | ''பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை'' | ||
''நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய'' | |||
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, | ''தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,'' | ||
''கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,'' | |||
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை | ''ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,'' | ||
''புலம்தொறும் குருகினம் நரல, கல்லென'' | |||
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய | ''அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,'' | ||
''அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,'' | |||
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, | ''எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்'' | ||
''செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;'' | |||
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, | ''நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த'' | ||
''பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,'' | |||
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, | ''இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,'' | ||
''எயிறு தீப் பிறப்பத் திருகி,'' | |||
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென | ''நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.'' | ||
</poem> | |||
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, | பொருள்; | ||
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, | |||
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் | |||
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; | |||
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த | |||
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, | |||
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, | |||
எயிறு தீப் பிறப்பத் திருகி, | |||
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. | |||
தோழி! பெய்து பின் திசைகளை வெளியாக்கிய பொங்கிய வெண்மேகம், கடையப்பெற்ற பஞ்சானது மென்மையுற்றாற் போன்ற, சிறியதுளியைத் தூவுதலையும் ஒழிய, அகன்ற வயலிலுள்ள நீண்ட தண்டினையுடைய கரும்பின் திரண்ட காம்புடைய பெரிய பூக்கள், கோடை காலத்துப் பூளைப் பூப்போல வாடைக்காற் றால் அசைந்திட, பசிய இலை நெருங்கிய புதல்தோறும் பகன்றையானது, நீலம் ஊட்டப்பெற்ற தோலினது நிறம் மறையும்படி பதித்த, கிடுகிற் பதித்த வட்டக் கண்ணாடி போல, வெள்ளியனவாக மலர, கொழுத்த இலையினையுடைய அவரையின் வளவிய அரும்புகள் விரிய, முறையாக முற்றிய தோன்றியின் ஒள்ளிய பூக்கள் பிணிப்புவிட, புலங்கள் தோறும் பறவைகளின் கூட்டம் கல்லென்று ஒலிக்க, தம் தலைவரைப் பிரிந்து தங்கிய மகளிர் அழகிழந்து நடுங்க, பனிப்பருவம் வந்துவிட்டது (ஆதலால்); இப் பருவம் பொருள் வயிற் பிரிவார்க்கு ஏற்ற தொன்றென எண்ணி, எத்தனை சிறந்த பொருளைப் பெறுவதாயினும் பிரியாதீர் என்று, எங்கட்குத் துணையாகவுள்ள நுமக்குச் செப்புவேன், என்று நீ நம் தலைவர்க்குக் கூறுவும்; அருள் செய்யாத காதலர், நம்மைப் பிரிந்து செல்வரேல், நாம், (அவர்) நமது நலத்தினை நுகர்ந்து கைவிட்ட பாழ் பட்ட மேனியைக் கண்டு,நோய் வருத்த, மதுகை இற்று உடையும் நெஞ்சத்துடன், அவர் புணர்தலை விரும்பி, கடிய பனியால் வருந்தி, பற்களைத் தீயுண்டாகக் கடித்து, நடுங்குவேம் | தோழி! பெய்து பின் திசைகளை வெளியாக்கிய பொங்கிய வெண்மேகம், கடையப்பெற்ற பஞ்சானது மென்மையுற்றாற் போன்ற, சிறியதுளியைத் தூவுதலையும் ஒழிய, அகன்ற வயலிலுள்ள நீண்ட தண்டினையுடைய கரும்பின் திரண்ட காம்புடைய பெரிய பூக்கள், கோடை காலத்துப் பூளைப் பூப்போல வாடைக்காற் றால் அசைந்திட, பசிய இலை நெருங்கிய புதல்தோறும் பகன்றையானது, நீலம் ஊட்டப்பெற்ற தோலினது நிறம் மறையும்படி பதித்த, கிடுகிற் பதித்த வட்டக் கண்ணாடி போல, வெள்ளியனவாக மலர, கொழுத்த இலையினையுடைய அவரையின் வளவிய அரும்புகள் விரிய, முறையாக முற்றிய தோன்றியின் ஒள்ளிய பூக்கள் பிணிப்புவிட, புலங்கள் தோறும் பறவைகளின் கூட்டம் கல்லென்று ஒலிக்க, தம் தலைவரைப் பிரிந்து தங்கிய மகளிர் அழகிழந்து நடுங்க, பனிப்பருவம் வந்துவிட்டது (ஆதலால்); இப் பருவம் பொருள் வயிற் பிரிவார்க்கு ஏற்ற தொன்றென எண்ணி, எத்தனை சிறந்த பொருளைப் பெறுவதாயினும் பிரியாதீர் என்று, எங்கட்குத் துணையாகவுள்ள நுமக்குச் செப்புவேன், என்று நீ நம் தலைவர்க்குக் கூறுவும்; அருள் செய்யாத காதலர், நம்மைப் பிரிந்து செல்வரேல், நாம், (அவர்) நமது நலத்தினை நுகர்ந்து கைவிட்ட பாழ் பட்ட மேனியைக் கண்டு,நோய் வருத்த, மதுகை இற்று உடையும் நெஞ்சத்துடன், அவர் புணர்தலை விரும்பி, கடிய பனியால் வருந்தி, பற்களைத் தீயுண்டாகக் கடித்து, நடுங்குவேம் | ||
===== அகநானூறு 235 ===== | =====அகநானூறு 235===== | ||
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து | <poem> | ||
''அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து'' | |||
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், | ''உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,'' | ||
''சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?'' | |||
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? | ''பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,'' | ||
''விண்டு முன்னிய கொண்டல் மா மழை'' | |||
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, | ''மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,'' | ||
''வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி'' | |||
விண்டு முன்னிய கொண்டல் மா மழை | ''சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,'' | ||
''சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ'' | |||
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, | ''விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,'' | ||
''களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்'' | |||
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி | ''கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ'' | ||
''மாரி அம் குருகின் ஈரிய குரங்க,'' | |||
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, | ''நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,'' | ||
''பனி கடி கொண்ட பண்பு இல் வாடை'' | |||
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ | ''மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,'' | ||
''நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு'' | |||
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, | ''தொல் நலம் சிதையச் சாஅய்,'' | ||
''என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.'' | |||
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் | </poem> | ||
பொருள்: | |||
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ | |||
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, | |||
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, | |||
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை | |||
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, | |||
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு | |||
தொல் நலம் சிதையச் சாஅய், | |||
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. | |||
நம் தலைவர், பொருள் தேடுதலையே விரும்பி நம்மை நினைந்திலரோ, நினைந்தும், செய்யும் வினையின் மிகுதியால், உசாவுதலை மறந்துவிட்டனரே? பயன் தரும் நிலங்கள் நெகிழப் பெய்து, பின் பெய்தலை வெறுத்து, மலையைச் சேர்ந்த கொண்ட லாகிய கரியமேகம், மீண்டும் இரவில் தங்குதலுற்றுப் பொங்கித் துளிக்க, வாடைக்காற்றால் உயர்ந்த அழகிய இதழினையுடைய செங்காந்தள், சுடரினைக் கொண்ட அகல்போலச் சுருங்கிய அரும்பு விரிய, சுரிந்த அரும்பினையுடைய முசுண்டையின் கட்டவிழ்ந்த பெரிய பூ, வானை அழகுறுத்தும் மீன்களைப்போலப் பசிய புதர்களை அழகுறுத்த, நண்டு தனது மண் வளையுட் செறிந்திட, அகன்ற வயலில் கிளைத்து விரிந்த கரும்பினது திரண்ட காம்பினையுடைய பெரிய பூ, மழையில் நனைந்த நாரையைப்போல ஈரம் கொண்டனவாய் வளைந்திருக்க, மிக்க கடிய சினத்தினால் அச்சத்தை உண்டாக்கி, பனி தங்கிய நற்பண்பில்லாத வாடைக் காற்றானது, மயங்குதலை யுடைய மாலைப் பொழுதுடன் கூடி இரக்கமின்றி நலிந்திட; நுதற் கண்ணே தங்குதல் கொண்ட அயலோரால் அறியப்படும் பசலையுடன், பழைய மேனி நலம்கெட மெலிந்து, என்ன நிலையினளாயினளோ இரங்கத்தக்காள் என்று உசாவி யறியாராதலின்; | நம் தலைவர், பொருள் தேடுதலையே விரும்பி நம்மை நினைந்திலரோ, நினைந்தும், செய்யும் வினையின் மிகுதியால், உசாவுதலை மறந்துவிட்டனரே? பயன் தரும் நிலங்கள் நெகிழப் பெய்து, பின் பெய்தலை வெறுத்து, மலையைச் சேர்ந்த கொண்ட லாகிய கரியமேகம், மீண்டும் இரவில் தங்குதலுற்றுப் பொங்கித் துளிக்க, வாடைக்காற்றால் உயர்ந்த அழகிய இதழினையுடைய செங்காந்தள், சுடரினைக் கொண்ட அகல்போலச் சுருங்கிய அரும்பு விரிய, சுரிந்த அரும்பினையுடைய முசுண்டையின் கட்டவிழ்ந்த பெரிய பூ, வானை அழகுறுத்தும் மீன்களைப்போலப் பசிய புதர்களை அழகுறுத்த, நண்டு தனது மண் வளையுட் செறிந்திட, அகன்ற வயலில் கிளைத்து விரிந்த கரும்பினது திரண்ட காம்பினையுடைய பெரிய பூ, மழையில் நனைந்த நாரையைப்போல ஈரம் கொண்டனவாய் வளைந்திருக்க, மிக்க கடிய சினத்தினால் அச்சத்தை உண்டாக்கி, பனி தங்கிய நற்பண்பில்லாத வாடைக் காற்றானது, மயங்குதலை யுடைய மாலைப் பொழுதுடன் கூடி இரக்கமின்றி நலிந்திட; நுதற் கண்ணே தங்குதல் கொண்ட அயலோரால் அறியப்படும் பசலையுடன், பழைய மேனி நலம்கெட மெலிந்து, என்ன நிலையினளாயினளோ இரங்கத்தக்காள் என்று உசாவி யறியாராதலின்; | ||
===== அகநானூறு 294 ===== | =====அகநானூறு 294===== | ||
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, | <poem> | ||
''மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,'' | |||
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் | ''துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்'' | ||
''புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,'' | |||
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, | ''காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்'' | ||
''நீர் வார் கண்ணின் கருவிளை மலர,'' | |||
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் | ''துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை'' | ||
''நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்'' | |||
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, | ''இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,'' | ||
''அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்'' | |||
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை | ''கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,'' | ||
''சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,'' | |||
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் | ''காய் சின வேந்தன் பாசறை நீடி,'' | ||
''நம் நோய் அறியா அறனிலாளர்'' | |||
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, | ''இந் நிலை களைய வருகுவர்கொல்?' என'' | ||
''ஆனாது எறிதரும் வாடையொடு'' | |||
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் | ''நோனேன் தோழி! என் தனிமையானே.'' | ||
</poem> | |||
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, | பொருள்: | ||
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், | |||
'காய் சின வேந்தன் பாசறை நீடி, | |||
நம் நோய் அறியா அறனிலாளர் | |||
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என | |||
ஆனாது எறிதரும் வாடையொடு | |||
நோனேன் தோழி! என் தனிமையானே. | |||
மிகவும் இருண்ட மேகமானது, வானில் அதிர்ந்து முழங்கி; குதித்தலாகிய பெய்தலைச் செய்து கழிந்த பின்பு, புகையைப் போலப் புள்ளியாய நுண்ணிய பனித் துளிகள், பூக்களின் உள்ளே நிறையவும்; தம் காதலரைப் பிரிந்துள்ள செயலற்ற மகளிரது; நீர் ஒழுகும் கண்களைப்போலக் காக்கணம் பூ மலரவும்; பஞ்சு போன்ற தலையினையுடைய பூவினையுடையதும் புதர்களிற் படர்வதுமான ஈங்கையது, நெய்யில் தோய்த்தெடுத்தாற் போன்ற நீரால் நனைந்த அழகிய தளிர்கள், இருபிளவாகிய ஈரல் போல, ஈரமுடையனவாய் அசைந்திட; அவரையின் அழகிய பூக்கள் எங்கும் செறிய, அகன்ற வயலிடத்தே கதிர்கள் நீண்ட காய்த்த நெல் கண்ணிற்கு இனிமையுறத் தலை வளைந்திட; வண்டுகள் கிளைகளில் அசையாநிற்கும் முன் பனிக்காலத்து நள்ளிரவில்; சின மிக்க அரசனது பாசறைக்கண்ணே நெடிது மேவி, நமது துன்பினை அறியாத அறன் இல்லாத தலைவர், நமது இத்துயர் நிலையினை நீக்க வருவரோ என்று எண்ணி; அமையாது வீசும் வாடைக்காற்றால், எனது தனிமையை, யான் போகின்றேன். | மிகவும் இருண்ட மேகமானது, வானில் அதிர்ந்து முழங்கி; குதித்தலாகிய பெய்தலைச் செய்து கழிந்த பின்பு, புகையைப் போலப் புள்ளியாய நுண்ணிய பனித் துளிகள், பூக்களின் உள்ளே நிறையவும்; தம் காதலரைப் பிரிந்துள்ள செயலற்ற மகளிரது; நீர் ஒழுகும் கண்களைப்போலக் காக்கணம் பூ மலரவும்; பஞ்சு போன்ற தலையினையுடைய பூவினையுடையதும் புதர்களிற் படர்வதுமான ஈங்கையது, நெய்யில் தோய்த்தெடுத்தாற் போன்ற நீரால் நனைந்த அழகிய தளிர்கள், இருபிளவாகிய ஈரல் போல, ஈரமுடையனவாய் அசைந்திட; அவரையின் அழகிய பூக்கள் எங்கும் செறிய, அகன்ற வயலிடத்தே கதிர்கள் நீண்ட காய்த்த நெல் கண்ணிற்கு இனிமையுறத் தலை வளைந்திட; வண்டுகள் கிளைகளில் அசையாநிற்கும் முன் பனிக்காலத்து நள்ளிரவில்; சின மிக்க அரசனது பாசறைக்கண்ணே நெடிது மேவி, நமது துன்பினை அறியாத அறன் இல்லாத தலைவர், நமது இத்துயர் நிலையினை நீக்க வருவரோ என்று எண்ணி; அமையாது வீசும் வாடைக்காற்றால், எனது தனிமையை, யான் போகின்றேன். | ||
===== குறந்தொகை 35 ===== | =====குறந்தொகை 35===== | ||
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு | <poem> | ||
''நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு'' | |||
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன | ''சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன'' | ||
''கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ'' | |||
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ | ''நுண்ணுறை யழிதுளி தலைஇய'' | ||
''தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.'' | |||
நுண்ணுறை யழிதுளி தலைஇய | </poem> | ||
பொருள்: | |||
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. | |||
தோழி! தலைவர் பிரிந்த நாளில் உடம்பட்டு கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி நுண்ணிய மழை பொழிந்து அழிந்த துளி பொருந்திய தண்ணிய வருதலை உடைய வாடைக் காற்றை உடைய கூதிர்க் காலத்தும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழுதலால் எம்முடைய கண்கள் நிச்சயமாக நாணம் இல்லாதன. | தோழி! தலைவர் பிரிந்த நாளில் உடம்பட்டு கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி நுண்ணிய மழை பொழிந்து அழிந்த துளி பொருந்திய தண்ணிய வருதலை உடைய வாடைக் காற்றை உடைய கூதிர்க் காலத்தும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழுதலால் எம்முடைய கண்கள் நிச்சயமாக நாணம் இல்லாதன. | ||
===== குறந்தொகை 261 ===== | =====குறந்தொகை 261===== | ||
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய | <poem> | ||
''பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய'' | |||
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள் | ''சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்'' | ||
''சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்'' | |||
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் | ''நள்ளென் யாமத் தையெனக் கரையும்'' | ||
''அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்'' | |||
நள்ளென் யாமத் தையெனக் கரையும் | ''துஞ்சா வாழி தோழி காவலர்'' | ||
''கணக்காய் வகையின் வருந்தியென்'' | |||
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண் | ''நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.'' | ||
</poem> | |||
துஞ்சா வாழி தோழி காவலர் | பொருள்: | ||
கணக்காய் வகையின் வருந்தியென் | |||
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. | |||
தோழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக பழைய மழை பொழிந்ததாக செவ்வி அழிந்து ஒழுகிய உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில் சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்ணை உடைய எருமை இருள் செறிந்த நடு இரவின் கண் ஐயென்று ஒலிக்கும் அச்சம் உண்டாகின்ற காலத்திலும் என்னுடைய கண்கள் தூங்காவாயின. | தோழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக பழைய மழை பொழிந்ததாக செவ்வி அழிந்து ஒழுகிய உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில் சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்ணை உடைய எருமை இருள் செறிந்த நடு இரவின் கண் ஐயென்று ஒலிக்கும் அச்சம் உண்டாகின்ற காலத்திலும் என்னுடைய கண்கள் தூங்காவாயின. | ||
===== நற்றிணை 281 ===== | =====நற்றிணை 281===== | ||
மாசு இல் மரத்த பலி உண் காக்கை | <poem> | ||
''மாசு இல் மரத்த பலி உண் காக்கை'' | |||
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, | ''வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,'' | ||
''வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்'' | |||
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் | ''நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்'' | ||
''அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்'' | |||
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் | ''விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,'' | ||
''மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,'' | |||
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் | ''தாம் நம் உழையராகவும், நாம் நம்'' | ||
''பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,'' | |||
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, | ''துஞ்சாம் ஆகலும் அறிவோர்1'' | ||
''அன்பிலர்- தோழி!- நம் காதலோரே.'' | |||
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், | </poem> | ||
பொருள்; | |||
தாம் நம் உழையராகவும், நாம் நம் | |||
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, | |||
துஞ்சாம் ஆகலும் அறிவோர்1 | |||
அன்பிலர்- தோழி!- நம் காதலோரே. | |||
தோழீ! நம் காதலர்; மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடு பலியை உண்ணுங் காக்கை; காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வெல்லுகின்ற போரையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற; நல்ல பலவகையாக மிகுந்த பலிக்கொடையொடு போடப்படுகின்ற சொல்லிலடங்காத சோற்றுத் திரளுடனே; அழகிய பலவாகிய புதிய ஊனொடு கலந்து இடப்படுகின்ற பெரிய சோற்றைத் தின்னக் கருதியனவாயிருக்குமாறு; மழைபொருந்திப் பெய்தலையுற்ற மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்தில்; அவர்தாம் நம்மிடத்து முயங்கியிருப்பாராகவும்; நாம் நமக்குண்டாகிய குளிரின் கடுமையால் மிகப்பெரிதும் வருத்தமுற்று; தூங்காதிருந்ததையும் அறிந்தவர் இப்பொழுது நம்மைக் கைவிட்டு அகன்றனர் கண்டாய்; ஆதலின் அவர் நம்மீது சிறிதும் அன்பே இல்லாதவர் அல்லரோ? | தோழீ! நம் காதலர்; மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடு பலியை உண்ணுங் காக்கை; காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வெல்லுகின்ற போரையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற; நல்ல பலவகையாக மிகுந்த பலிக்கொடையொடு போடப்படுகின்ற சொல்லிலடங்காத சோற்றுத் திரளுடனே; அழகிய பலவாகிய புதிய ஊனொடு கலந்து இடப்படுகின்ற பெரிய சோற்றைத் தின்னக் கருதியனவாயிருக்குமாறு; மழைபொருந்திப் பெய்தலையுற்ற மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்தில்; அவர்தாம் நம்மிடத்து முயங்கியிருப்பாராகவும்; நாம் நமக்குண்டாகிய குளிரின் கடுமையால் மிகப்பெரிதும் வருத்தமுற்று; தூங்காதிருந்ததையும் அறிந்தவர் இப்பொழுது நம்மைக் கைவிட்டு அகன்றனர் கண்டாய்; ஆதலின் அவர் நம்மீது சிறிதும் அன்பே இல்லாதவர் அல்லரோ? | ||
===== நற்றிணை 312 ===== | =====நற்றிணை 312===== | ||
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- | <poem> | ||
''நோகோ யானே, நோம் என் நெஞ்சே-'' | |||
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, | ''பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,'' | ||
''சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,'' | |||
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, | ''பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,'' | ||
''மாரி நின்ற, மையல் அற்சிரம்-'' | |||
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, | ''யாம் தன் உழையம் ஆகவும், தானே,'' | ||
''எதிர்த்த தித்தி முற்றா முலையள்,'' | |||
மாரி நின்ற, மையல் அற்சிரம்- | ''கோடைத் திங்களும் பனிப்போள்-'' | ||
''வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?''' | |||
யாம் தன் உழையம் ஆகவும், தானே, | </poem> | ||
பொருள்; | |||
எதிர்த்த தித்தி முற்றா முலையள், | |||
கோடைத் திங்களும் பனிப்போள்- | |||
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' | |||
பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்ததாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று; | பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்ததாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று; | ||
== உசாத்துணை == | ==உசாத்துணை== | ||
*மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் | |||
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் | |||
* [https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்] [[Category:Tamil Content]] | *[https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்] | ||
[[Category:Tamil Content]] | |||
{{first review completed}} | {{first review completed}} |
Revision as of 21:17, 30 October 2022
கழார்க் கீரன் எயிற்றியார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது 8 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
பெயர்க் காரணம்
கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர். கழார்க் கீரன் எயிற்றியார் அந்த ஊரை சேர்ந்தவராக இருக்கலாம். கழாரில் வாழ்ந்த மற்றொரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியனார்.
பாடல்கள்
கழார்க் கீரன் எயிற்றியார் இயற்றிய எட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ள சங்கத் தொகை நூல்களின் விவரம்;
- அகநானூறு- 163, 217, 235, 294
- குறுந்தொகை- 35, 261
- நற்றிணை- 281, 312
அகநானூறு 163
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
எமியம் ஆக, துனி உளம் கூர,
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி! புனற் கால்
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!
எளிய பொருள்;
பலவகையாய மலர்களும் குழைந்திட, வானின் கண்முழங்கிக் கூடிய, குளிர்ந்த மேகம் சொரிந்துபோன குறைந்த பெயலைக் கொண்ட கூதிரின் கடை நாளில், மனத்தே வெறுப்பு மிக, யாம் தமியேமாகப் பிரிந்துசென்ற தலைவரை எண்ணி, எஞ்சியசிலவாய வளைகளும் கழன்று போக, பெரிய ஆர்வம் கொண்ட உள்ளத்தோடு அவர் மீண்டுவரும் திசையை நோக்கி(வருந்தி) , இறத்தற்கேதுவாய துன்பத்தோடு கூடியிருத்தலின் அளிக்கத்தக்காள் இவள் என்று நினையாது; யானை (நீரைப்பருக) உயிர்ப்பது போலும் இடம் மறைய வீசும் பனித்துளியால், தாமரைமலர் கரிந்திடும் முன்பனிக்காலத்துப் பாதியிரவில், மலையையும் நடுங்கச் செய்வதுபோன்ற குளிரைக்கொண்ட வாடைக்காற்றே, நீ என்பாலே நலிய வந்தனைபோல்கின்றாய்; நீர் ஓடுகாலியிடத்துள்ள நுண்மணலாலாய மேடு கரைந்திடல்போல, கொடியராய அத்தலைவர் சென்ற திசையில், அயராது இன்ன தன்மையினை ஆகிச்செல்வாயாக; (செல்லின்) பொருளீட்டும் தொழிலிற் பெருவேட்கை யுடையார் என்னை நினைத்து வருதலும் உண்டு.
அகநானூறு 217
பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
துவலை தூவல் கழிய, அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறு தீப் பிறப்பத் திருகி,
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.
பொருள்;
தோழி! பெய்து பின் திசைகளை வெளியாக்கிய பொங்கிய வெண்மேகம், கடையப்பெற்ற பஞ்சானது மென்மையுற்றாற் போன்ற, சிறியதுளியைத் தூவுதலையும் ஒழிய, அகன்ற வயலிலுள்ள நீண்ட தண்டினையுடைய கரும்பின் திரண்ட காம்புடைய பெரிய பூக்கள், கோடை காலத்துப் பூளைப் பூப்போல வாடைக்காற் றால் அசைந்திட, பசிய இலை நெருங்கிய புதல்தோறும் பகன்றையானது, நீலம் ஊட்டப்பெற்ற தோலினது நிறம் மறையும்படி பதித்த, கிடுகிற் பதித்த வட்டக் கண்ணாடி போல, வெள்ளியனவாக மலர, கொழுத்த இலையினையுடைய அவரையின் வளவிய அரும்புகள் விரிய, முறையாக முற்றிய தோன்றியின் ஒள்ளிய பூக்கள் பிணிப்புவிட, புலங்கள் தோறும் பறவைகளின் கூட்டம் கல்லென்று ஒலிக்க, தம் தலைவரைப் பிரிந்து தங்கிய மகளிர் அழகிழந்து நடுங்க, பனிப்பருவம் வந்துவிட்டது (ஆதலால்); இப் பருவம் பொருள் வயிற் பிரிவார்க்கு ஏற்ற தொன்றென எண்ணி, எத்தனை சிறந்த பொருளைப் பெறுவதாயினும் பிரியாதீர் என்று, எங்கட்குத் துணையாகவுள்ள நுமக்குச் செப்புவேன், என்று நீ நம் தலைவர்க்குக் கூறுவும்; அருள் செய்யாத காதலர், நம்மைப் பிரிந்து செல்வரேல், நாம், (அவர்) நமது நலத்தினை நுகர்ந்து கைவிட்ட பாழ் பட்ட மேனியைக் கண்டு,நோய் வருத்த, மதுகை இற்று உடையும் நெஞ்சத்துடன், அவர் புணர்தலை விரும்பி, கடிய பனியால் வருந்தி, பற்களைத் தீயுண்டாகக் கடித்து, நடுங்குவேம்
அகநானூறு 235
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்,
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.
பொருள்:
நம் தலைவர், பொருள் தேடுதலையே விரும்பி நம்மை நினைந்திலரோ, நினைந்தும், செய்யும் வினையின் மிகுதியால், உசாவுதலை மறந்துவிட்டனரே? பயன் தரும் நிலங்கள் நெகிழப் பெய்து, பின் பெய்தலை வெறுத்து, மலையைச் சேர்ந்த கொண்ட லாகிய கரியமேகம், மீண்டும் இரவில் தங்குதலுற்றுப் பொங்கித் துளிக்க, வாடைக்காற்றால் உயர்ந்த அழகிய இதழினையுடைய செங்காந்தள், சுடரினைக் கொண்ட அகல்போலச் சுருங்கிய அரும்பு விரிய, சுரிந்த அரும்பினையுடைய முசுண்டையின் கட்டவிழ்ந்த பெரிய பூ, வானை அழகுறுத்தும் மீன்களைப்போலப் பசிய புதர்களை அழகுறுத்த, நண்டு தனது மண் வளையுட் செறிந்திட, அகன்ற வயலில் கிளைத்து விரிந்த கரும்பினது திரண்ட காம்பினையுடைய பெரிய பூ, மழையில் நனைந்த நாரையைப்போல ஈரம் கொண்டனவாய் வளைந்திருக்க, மிக்க கடிய சினத்தினால் அச்சத்தை உண்டாக்கி, பனி தங்கிய நற்பண்பில்லாத வாடைக் காற்றானது, மயங்குதலை யுடைய மாலைப் பொழுதுடன் கூடி இரக்கமின்றி நலிந்திட; நுதற் கண்ணே தங்குதல் கொண்ட அயலோரால் அறியப்படும் பசலையுடன், பழைய மேனி நலம்கெட மெலிந்து, என்ன நிலையினளாயினளோ இரங்கத்தக்காள் என்று உசாவி யறியாராதலின்;
அகநானூறு 294
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமையானே.
பொருள்:
மிகவும் இருண்ட மேகமானது, வானில் அதிர்ந்து முழங்கி; குதித்தலாகிய பெய்தலைச் செய்து கழிந்த பின்பு, புகையைப் போலப் புள்ளியாய நுண்ணிய பனித் துளிகள், பூக்களின் உள்ளே நிறையவும்; தம் காதலரைப் பிரிந்துள்ள செயலற்ற மகளிரது; நீர் ஒழுகும் கண்களைப்போலக் காக்கணம் பூ மலரவும்; பஞ்சு போன்ற தலையினையுடைய பூவினையுடையதும் புதர்களிற் படர்வதுமான ஈங்கையது, நெய்யில் தோய்த்தெடுத்தாற் போன்ற நீரால் நனைந்த அழகிய தளிர்கள், இருபிளவாகிய ஈரல் போல, ஈரமுடையனவாய் அசைந்திட; அவரையின் அழகிய பூக்கள் எங்கும் செறிய, அகன்ற வயலிடத்தே கதிர்கள் நீண்ட காய்த்த நெல் கண்ணிற்கு இனிமையுறத் தலை வளைந்திட; வண்டுகள் கிளைகளில் அசையாநிற்கும் முன் பனிக்காலத்து நள்ளிரவில்; சின மிக்க அரசனது பாசறைக்கண்ணே நெடிது மேவி, நமது துன்பினை அறியாத அறன் இல்லாத தலைவர், நமது இத்துயர் நிலையினை நீக்க வருவரோ என்று எண்ணி; அமையாது வீசும் வாடைக்காற்றால், எனது தனிமையை, யான் போகின்றேன்.
குறந்தொகை 35
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.
பொருள்:
தோழி! தலைவர் பிரிந்த நாளில் உடம்பட்டு கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி நுண்ணிய மழை பொழிந்து அழிந்த துளி பொருந்திய தண்ணிய வருதலை உடைய வாடைக் காற்றை உடைய கூதிர்க் காலத்தும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழுதலால் எம்முடைய கண்கள் நிச்சயமாக நாணம் இல்லாதன.
குறந்தொகை 261
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.
பொருள்:
தோழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக பழைய மழை பொழிந்ததாக செவ்வி அழிந்து ஒழுகிய உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில் சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்ணை உடைய எருமை இருள் செறிந்த நடு இரவின் கண் ஐயென்று ஒலிக்கும் அச்சம் உண்டாகின்ற காலத்திலும் என்னுடைய கண்கள் தூங்காவாயின.
நற்றிணை 281
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர்1
அன்பிலர்- தோழி!- நம் காதலோரே.
பொருள்;
தோழீ! நம் காதலர்; மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடு பலியை உண்ணுங் காக்கை; காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வெல்லுகின்ற போரையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற; நல்ல பலவகையாக மிகுந்த பலிக்கொடையொடு போடப்படுகின்ற சொல்லிலடங்காத சோற்றுத் திரளுடனே; அழகிய பலவாகிய புதிய ஊனொடு கலந்து இடப்படுகின்ற பெரிய சோற்றைத் தின்னக் கருதியனவாயிருக்குமாறு; மழைபொருந்திப் பெய்தலையுற்ற மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்தில்; அவர்தாம் நம்மிடத்து முயங்கியிருப்பாராகவும்; நாம் நமக்குண்டாகிய குளிரின் கடுமையால் மிகப்பெரிதும் வருத்தமுற்று; தூங்காதிருந்ததையும் அறிந்தவர் இப்பொழுது நம்மைக் கைவிட்டு அகன்றனர் கண்டாய்; ஆதலின் அவர் நம்மீது சிறிதும் அன்பே இல்லாதவர் அல்லரோ?
நற்றிணை 312
நோகோ யானே, நோம் என் நெஞ்சே-
பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
மாரி நின்ற, மையல் அற்சிரம்-
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்-
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?'
பொருள்;
பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்ததாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று;
உசாத்துணை
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.