under review

மன்னார்குடி பரமசிவம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(மன்னார்குடி பரமசிவம் பிள்ளை - முதல் வரைவு)
 
No edit summary
Line 35: Line 35:


* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Revision as of 13:09, 20 March 2022

மன்னார்குடி பரமசிவம் பிள்ளை (ஆகஸ்ட் 21, 1929 - ஆகஸ்ட் 23, 1976) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

மன்னார்குடியில் தவிற்கலைஞராக இருந்த ஷண்முகம் பிள்ளை -நாகரத்தினம் அம்மாள் இணையருக்கு ஆகஸ்ட் 21, 1929 அன்று பரமசிவம் பிள்ளை பிறந்தார்.

திருப்பழனம் பொன்னையா பிள்ளை என்பவரிடம் ஏழு வயதில் நாதஸ்வரப் பயிற்சியைத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் குருகுலவாசத்திற்குப் பிறகு ஸ்வாமிமலை கந்தஸ்வாமி பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

பரமசிவம் பிள்ளையுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் - கருணாநிதி (தவில் கலைஞர்), ஸ்வாமிநாதன், ஜெயராமன்.

திருமெய்ஞானம் ஷண்முகசுந்தரம் பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரின் மகள் மிராண்டாளை மணந்தார். இவர்களுக்கு ஆறு மகன்கள், மூன்று பெண்கள் - ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சந்திரசேகரன், சிவகுமார், சந்திரமூர்த்தி, பாலமுரளி, மனோஹரி, தெய்வநாயகி, ஜயசித்ரா.

இசைப்பணி

கந்தஸ்வாமி பிள்ளையிடம் மூன்றாடுகால பயிற்சிக்குப் பின் பரமசிவம் பிள்ளைக்குப் பல கச்சேரி அழைப்புகள் வந்தன. ஆனால் மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை, மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை போல சிறந்த கலைஞராக வேண்டுமென்ற நோக்கத்தில் கச்சேரிகளை ஏற்காது, பரமசிவம் பிள்ளை தீவிர சாதகத்தில் ஈடுபடத் துவங்கினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு கச்சேரி செய்யத் தொடங்கியதுமே புகழ்பெற்ற முண்ணனிக் கலைஞர் ஆனார். மணிக்கணக்கான ராக ஆலாபனைகள், மிகை குறையில்லாத ஸ்வரப் பிரஸ்தாரக் கற்பனைகள் என பெயர் பெற்றார் பரமசிவம் பிள்ளை. 1970ஆம் ஆண்டு டில்லியில் வாசித்த போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுக்களைப் பெற்றார். முதலாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, தொடக்க விழாவில் பரமசிவம் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

மன்னார்குடி பரமசிவம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
  • கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
  • வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை
  • நீடாமங்கலம் ஷண்முகவடிவேல்
  • யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி
  • ஹரித்வாரமங்கலம் பழனிவேல்
  • திருவாழப்புத்தூர் கலியமூர்த்தி
  • தஞ்சாவூர் கோவிந்தராஜன்

மறைவு

மன்னார்குடி பரமசிவம் பிள்ளை தனது நாற்பத்தியேழாம் வயதில் ஆகஸ்ட் 23, 1976 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.