under review

பிரபஞ்சன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 48: Line 48:


== இலக்கியம் இடம் ==
== இலக்கியம் இடம் ==
பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை. பிரபஞ்சனின் சாதனை என்பது மானுடம் வெல்லும் நாவல்தான். தமிழ் வரலாற்றுநாவல்கள் பெரும்பாலும் மிகையுணர்ச்சிகளும் சாகசத்தன்மையும் கொண்ட கற்பனாவாதப் படைப்புகள். வரலாற்றை பொற்காலமாகப் புனைந்து உரைப்பவை, வரலாற்று நாயகர்களை கொண்டாடுபவை. மானுடம் வெல்லும் நாவல் எளிய மனிதர்களை வரலாற்றில் வைத்துப் பார்த்தது. வரலாற்றை தரவுகளுக்கு அணுக்கமாக நின்று மிகையுணர்ச்சியோ சாகசமோ இல்லாமல் சித்தரித்தது. ஆகவே விமர்சகர்களால் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்று மதிப்பிடப்பட்டது.   
பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை. பிரபஞ்சனின் சாதனை என்பது [[மானுடம் வெல்லும்]] நாவல்தான். தமிழ் வரலாற்றுநாவல்கள் பெரும்பாலும் மிகையுணர்ச்சிகளும் சாகசத்தன்மையும் கொண்ட கற்பனாவாதப் படைப்புகள். வரலாற்றை பொற்காலமாகப் புனைந்து உரைப்பவை, வரலாற்று நாயகர்களை கொண்டாடுபவை. மானுடம் வெல்லும் நாவல் எளிய மனிதர்களை வரலாற்றில் வைத்துப் பார்த்தது. வரலாற்றை தரவுகளுக்கு அணுக்கமாக நின்று மிகையுணர்ச்சியோ சாகசமோ இல்லாமல் சித்தரித்தது. ஆகவே விமர்சகர்களால் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்று மதிப்பிடப்பட்டது.   


== படைப்புகள்  ==
== படைப்புகள்  ==
Line 55: Line 55:
====== நாவல்கள்  ======
====== நாவல்கள்  ======


* வானம் வசப்படும்
* [[மானுடம் வெல்லும்]]
*வானம் வசப்படும்
* மகாநதி
* மகாநதி
* மானுடம் வெல்லும்
* சந்தியா
* சந்தியா
* காகித மனிதர்கள்
* காகித மனிதர்கள்

Revision as of 21:18, 8 March 2022

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


பிரபஞ்சன்
பிரபஞ்சன்

பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கியவிமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். மதுக்கடை நடத்தியிருந்த சாரங்கபாணியின் மைந்தர். பாண்டிச்சேரியில் பெத்தி செமினார் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பிரபஞ்சன்

பிரபஞ்சன் 1970 ல் பிரமிளா ராணியை மணந்தார். மூன்று மகன்கள். முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் தஞ்சையில் கிடைத்த தமிழாசிரியர் பணியை மறுத்து புதுவை ‘மாலை முரசு’வில் பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு வந்தார். எழுதி வாழ வேண்டும் என்னும் நிலை அவரை இதழாளராக ஆக்கியது. குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றினார். 1990 முதல் அவர் முழுநேர எழுத்தாளனாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதினார். மக்கள் தொலைக்காட்சியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களுக்கான கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டார்.

சென்னையில் அரசு சார்பில் இதழாளர்களுக்காக அளிக்கப்பட்ட பீட்டர்ஸ் காலனி இல்லத்தில் பிரபஞ்சன் பெரும்பாலும் வாழ்ந்தார். குடும்பம் பாண்டிச்சேரியில் இருந்தது. தன் மனைவி மறைவுக்குப்பின் தனியாக வாழ்ந்த பிரபஞ்சனுக்கு மு.வேடியப்பன், பவா செல்லதுரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னெடுப்பில் ‘எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்ற ஒரு நாள் நிகழ்வு 2017 ஏப்ரல் 29 அன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அளித்த ரூ.12 லட்சத்து ஐம்பதாயிரம் பணமும் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற புதுவை முதலமைச்சர், அவருக்கு புதுவை அரசு விழா எடுக்கும் என்று அறிவித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தார். 2018 மே முதல் வாரத்தில் அரசு சார்பில் விழா எடுத்ததோடு, ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார். பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர்பி.என்.எஸ்.பாண்டியன் அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார்.

பிரபஞ்சன்

இதழியல்

பிரபஞ்சன் 1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார்.

அரசியல்

பிரபஞ்சன் இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர் ஆனார். இறுதிக்காலத்தில் திராவிட இயக்கத்திலும் பெரியாரியக் கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பிரபஞ்சன்2

கோடைக் கால விடுமுறைகளின்போது விழுப்புரத்தில் வசித்த தாத்தா வீட்டுக்குச் செல்கையில் அங்கிருந்த அலமாரியில் நிறைந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களை வாசித்துத் தன் ரசனையை ஏதோ ஒருவகையில் வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது பதினான்காம் வயதிலேயே ரோமன் ரோலந்து நூலகத்தில் அவரது அப்பா அவரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டிருக்கிறார். புதுச்சேரியில் பிறந்தவராக இருந்தாலும் தஞ்சையில் பயின்றபோது தஞ்சைவாழ்க்கைமேல் பிரபஞ்சனுக்கு ஈடுபாடு உருவானது. இசையார்வமும் தஞ்சாவூருக்குரிய உணவுப்பழக்கமும் அவருடைய நுண்ரசனைகளில் இறுதிவரை நீடித்தது. கரந்தை தமிழ்ச்சங்கத்தில் பயில்கையில் கீழ்வெண்மணி படுகொலை அவரை இடதுசாரி ஆதரவாளராக ஆக்கியது. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். பின்னர் அன்று உருவான கட்சிசாராத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டார். வானம்பாடி கவிதை இயக்கம் மேல் ஈடுபாடுகொண்டார், வானம்பாடி இதழில் எழுதினார். வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளியீடான வெளிச்சங்கள் தொகுப்பில் அவருடைய கவிதை உள்ளது.ர்

பதினாறு வயது முதல் பிரபஞ்சன் எழுதிக்கொண்டிருந்தார். அவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’ இடதுசாரி இதழான ‘பரணி’ யில் 1961ல் வெளியானது. பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச் சென்றபின் பெரும்பாலும் அவற்றிலேயே எழுதினார். தினமணிக் கதிர் இதழில் தொடராக வந்த வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ 1995ல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்ட நாவல் அது. `வானம் வசப்படும்' அதன் தொடர்ச்சியாக அமைந்த நாவல். பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் மகாபாரதத்தை மறுஆக்கமும் விமர்சனமும் செய்து மகாபாரத மாந்தர்கள் என்னும் நூலை எழுதினார். இராமாயணத்தையும் மறு ஆக்கம் செய்தார்.

நாடகங்கள்

பிரபஞ்சன் நவீன நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய முட்டை எனும் நாடகம் புகழ்பெற்றது.

பிரபஞ்சன்3

விருதுகளும் பரிசுகளும்

  • சாகித்திய அகாதமி விருது (1995)
  • சாரல் விருது (2013)
  • பாரதிய பாஷா பரிஷத் விருது
  • கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
  • இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
  • சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
  • தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
  • தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

மறைவு

டிசம்பர் 21, 2018 ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்தது.

இலக்கியம் இடம்

பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை. பிரபஞ்சனின் சாதனை என்பது மானுடம் வெல்லும் நாவல்தான். தமிழ் வரலாற்றுநாவல்கள் பெரும்பாலும் மிகையுணர்ச்சிகளும் சாகசத்தன்மையும் கொண்ட கற்பனாவாதப் படைப்புகள். வரலாற்றை பொற்காலமாகப் புனைந்து உரைப்பவை, வரலாற்று நாயகர்களை கொண்டாடுபவை. மானுடம் வெல்லும் நாவல் எளிய மனிதர்களை வரலாற்றில் வைத்துப் பார்த்தது. வரலாற்றை தரவுகளுக்கு அணுக்கமாக நின்று மிகையுணர்ச்சியோ சாகசமோ இல்லாமல் சித்தரித்தது. ஆகவே விமர்சகர்களால் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்று மதிப்பிடப்பட்டது.

படைப்புகள்

பிரபஞ்சன் 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.

நாவல்கள்
  • மானுடம் வெல்லும்
  • வானம் வசப்படும்
  • மகாநதி
  • சந்தியா
  • காகித மனிதர்கள்
  • கண்ணீரால் காப்போம்
  • பெண்மை வெல்க
  • பதவி
  • ஈரோடு தமிழர் உயிரோடு
  • அப்பாவின் வேஷ்டி
  • முதல் மழை துளி
  • மகாபாரத மாந்தர்கள்
சிறுகதை தொகுப்புகள்
  • நேற்று மனிதர்கள்
  • விட்டு விடுதலையாகி
  • இருட்டு வாசல்
  • ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
குறுநாவல்கள்
  • ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
  • முட்டை
  • அகல்யா
மொழிபெயர்ப்புகள்
கட்டுரைகள்
  • மயிலிறகு குட்டி போட்டது
  • அப்பாவின் வேஷ்டி
  • தாழப் பறக்காத பரத்தையர் கொடி
நேர்காணல்கள்
  • பிரபஞ்சனின் நேர்காணல்கள்

உசாத்துணை