being created

தூயவன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தூயவன்(எம். எஸ். அக்பர்) == பிறப்பு, கல்வி == எம். எஸ். அக்பர் நாகூரில் சாகு ஒலியுல்லா, ஜொகரான் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவரகள் ஐந்து சகோதரிகள். தத்தை ஒலியுல்லா ஆங்கி...")
 
Line 5: Line 5:


எம். எஸ். அக்பர், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்பு இடை நின்றது.
எம். எஸ். அக்பர், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்பு இடை நின்றது.
அக்பர் இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார்.அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு அவரது எழுத்தார்வத்தை வளர்த்தது.


== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
எம்.எஸ். அக்பர் ஜெய்புன்னிசாவை  செப்டெம்பர் 27, 1968-ல் மணந்து கொண்டார். ஜெய்புன்னிசா 'செல்வி' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதினார். மகன் பாபு  தூயவன், மகள் யாஸ்மின்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
அக்பர் ' தூயவன்' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதினார்.  [[தினத்தந்தி]], [[ராணி வாராந்தரி|ராணி]], [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடன்,]] [[தினமணி கதிர்]]' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் வெளியாகின. னாவர்  எழுதிய 'உயர்ந்த பீடம்'  என்ற சிறுகதை,  விகடன் தன் முத்திரைக்கதைகளுக்கான பரிசுத் தொகையை 500 ரூபாயாக உயர்த்தியபின் அப்பரிசை வென்ற  முதல் முத்திரைக் கதை. இது அவருக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.





Revision as of 21:20, 18 September 2023

தூயவன்(எம். எஸ். அக்பர்)

பிறப்பு, கல்வி

எம். எஸ். அக்பர் நாகூரில் சாகு ஒலியுல்லா, ஜொகரான் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவரகள் ஐந்து சகோதரிகள். தத்தை ஒலியுல்லா ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றினார்.

எம். எஸ். அக்பர், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்பு இடை நின்றது.

அக்பர் இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார்.அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு அவரது எழுத்தார்வத்தை வளர்த்தது.

தனி வாழ்க்கை

எம்.எஸ். அக்பர் ஜெய்புன்னிசாவை செப்டெம்பர் 27, 1968-ல் மணந்து கொண்டார். ஜெய்புன்னிசா 'செல்வி' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதினார். மகன் பாபு தூயவன், மகள் யாஸ்மின்.

இலக்கிய வாழ்க்கை

அக்பர் ' தூயவன்' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதினார். தினத்தந்தி, ராணி, ஆனந்த விகடன், தினமணி கதிர்' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் வெளியாகின. னாவர் எழுதிய 'உயர்ந்த பீடம்' என்ற சிறுகதை, விகடன் தன் முத்திரைக்கதைகளுக்கான பரிசுத் தொகையை 500 ரூபாயாக உயர்த்தியபின் அப்பரிசை வென்ற முதல் முத்திரைக் கதை. இது அவருக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.



விருதுகள், பரிசுகள்

மதிப்பீடு

நூல்கள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.