under review

மண்டல புருடர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 19: Line 19:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/5 தமிழ் இலக்கிய வரலாறு: பதினாறாம் நூற்றாண்டு: பாகம் 2: 2005: மு. அருணாசலம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/5 தமிழ் இலக்கிய வரலாறு: பதினாறாம் நூற்றாண்டு: பாகம் 2: 2005: மு. அருணாசலம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Sep-2023, 21:24:43 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:40, 13 June 2024

சூடாமணி நிகண்டு

மண்டல புருடர் (பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சூடாமணி நிகண்டு நூலை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மண்டல புருடர் தன்னை 'வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்' எனக் கூறிக்கொண்டார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மண்டல புருடர் சூடாமணி நிகண்டு நூலை இயற்றினார். பல வடசொற்களைத் தமிழ்ச்சொற்களாக ஆக்கிப் பொருளினைத் தொகுத்துக் கூறியுள்ளார். நிகண்டு நூல்கள் பலவற்றில் இவர் இயற்றிய நிகண்டு விருத்தம் என்னும் யாப்பில் உள்ளது. 'பன்னிரண்டாவது பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி' என்னும் பகுதிக்கு சிறப்புப் பாயிரம் எழுதினார். பன்னிரெண்டாவது தொகுதியில் ஆடவர் குணம் நான்கு என்கிறார். ஆசுமதுரம், சித்திரம், வித்தாரம் என நால்வகைக் கவிகளையும் விரித்துக் கூறுகிறார். ஆறுவகை அகச்சமயம், ஆறுவகை புறச்சமயம் என இவர் கூறுவது வைதிக மரபுகளை. இவற்றை நோக்கும் போது சமணம் வேற்றுமையை மறந்து வைதிகத்தை சார்ந்து விட்டதென்று தோன்றுகிறது என்கிறார் மு. அருணாச்சலம்.

சூடாமணி நிகண்டு கூறும் சில சொற்கள்
  • அருகன் பெயர்களுள் முனைவன் என்கிறார்.
  • விதசோகன்: துயரத்தின் நீங்கியவன் என்று பொருளுடைய பகவத் கீதையில் வரும் மொழித்தொடர்.
  • தருமனையும் துரியோதனையும் கூறும்போது குவளைத்தாரன், நந்தியாவர்த்தத் தாமன் என்கிறார்.
  • கன்னன் மணத்துக்கு முன் பிறந்ததால் கானீனன் என்கிறார்.
  • வருணப்பாகுபாட்டை ஒட்டி வேளாளரும், காராளரும் சூத்திரராக உள்ளனர்.
  • பிங்கலந்தையைத் தழுவி அநாரியர் - மிலேச்சர், கூத்தர் - அவிநயர், பல்லவர் - கீழோர் ஆகிய சொற்களைக் கூறுகிறார்.
  • திவாகத்தையும், சிந்தாமணியையும் தழுவி சூளை- வேசை என்கிறார்.

நூல்கள் பட்டியல்

  • சூடாமணி நிகண்டு

வெளி இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2023, 21:24:43 IST