under review

திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 42: Line 42:
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY9jhyy.TVA_BOK_0002811/mode/2up?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88&view=theater தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்]
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY9jhyy.TVA_BOK_0002811/mode/2up?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88&view=theater தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|19-Jun-2023, 08:05:15 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Latest revision as of 16:22, 13 June 2024

திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை
திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை - புகைப்பட உதவி: www.dinamani.com

நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை(டிசம்பர் 15, 1869 – நவம்பர் 16, 1938), திருப்பாம்புரம் சிவசுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் திருப்பாம்புரம் சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர். கச்சேரியில் இரு நாதஸ்வரங்களை இணைந்து வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்த முன்னோடிகள்.

பிறப்பு, கல்வி

நடராஜசுந்தரம் பிள்ளை குடும்ப வரைபடம்
நடராஜசுந்தரம் பிள்ளை குடும்ப வரைபடம்

நடராஜசுந்தரம் டிசம்பர் 15, 1869 அன்று திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில் சுவாமிநாத பிள்ளை – பரிபூரணத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார்.

சுவாமிநாத பிள்ளையின் தந்தை குழந்தைவேல் பிள்ளை சாரந்தா இசைக்கலைஞர். சுவாமிநாத பிள்ளையின் தாத்தா சேஷப்பிள்ளை வீணைக்கலைஞர். இவர்கள் மாயவரத்துக்கு அருகே உள்ள கல்யாணசோழபுரம் என்னும் ஊரில் இருந்து திருப்பாம்புரத்துக்குக் குடியேறியவர்கள்.

நடராஜசுந்தரமும் அவரது தம்பி சிவசுப்பிரமணியமும் இஞ்சிக்குடி குமரப்பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றனர். அதன்பிறகு உமையாள்புரம் துரைசுவாமி ஐயர், சாத்தனூர் பஞ்சநாதய்யர் ஆகியோரிடம் கீர்த்தனைகளில் பயிற்சி பெற்றனர். உமையாள்புரம் துரைசுவாமி ஐயர் தியாகராஜரின் சீடர் வழி வந்தவர். சாத்தனூர் பஞ்சநாதய்யர் தீட்சிதரின் சீடர் வழி வந்தவர்.

தனிவாழ்க்கை

நடராஜசுந்தரத்திற்கு ஐந்து மகள்கள், மூன்று மகன்கள்.

மகன்கள்:

  • திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை புல்லாங்குழல் கலைஞர்.
  • திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை பழனி தேவஸ்தான நாதஸ்வர இசைக்கல்லூரியில் தலைவராக இருந்தவர். சோமசுந்தரம் பிள்ளையின் மகன் ஷண்முகசுந்தரம் மதுரை அரசு இசைக்கல்லூரியின் தலைவராக இருந்தவர்.
  • சிவசுப்பிரமணியம் பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை ஆசிரியராக இருந்தவர்.

மகள்கள்:

  • காஞ்சி காமகோடி மடத்தின் நாதஸ்வரக் கலைஞராக இருந்த கும்பகோணம் ரத்தினம் பிள்ளையின் மனைவி செல்லம்மாள்
  • திருச்சேறை நாதஸ்வரக் கலைஞர் வே.சுப்பராய பிள்ளையின் மனைவி ஷண்முகவடிவம்மாள்
  • ஹரித்வாரமங்கலம் கந்தஸ்வாமி பிள்ளையின் முதல் மனைவி காத்யாயனீ அம்மாள்
  • கைச்சின்னம் (கச்சினம்) மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையின் மனைவி சங்கர பார்வதியம்மாள்
  • ஹரித்வாரமங்கலம் கந்தஸ்வாமி பிள்ளையின் இளைய மனைவி வேம்பு அம்மாள்

இசைப்பணி

நடராஜசுந்தரத்திடம் அவரது முன்னோரிடமிருந்து கிடைத்த முத்துஸ்வாமி தீட்சிதர் கீர்த்தனைகளின் சுவடி இருந்தது. அதனால் அதுவரை அதிகம் அறியப்படாத தீட்சிதர் கீர்த்தனைகளின் கருவூலமாக இவர் இருந்தார். தீட்சிதர் வடமொழிக் கீர்த்தனைகளில் 50 பாடல்களை தீட்சிதர் கீர்த்தனப் பிரகாசிகை எனும் பெயரில் முறையான பாட அமைப்பு கொண்ட நூலாக 1930-ல் நடராஜசுந்தரம் பிள்ளை வெளியிட்டார்.

இவரது காலத்துக்கு முன்பு வரை நாதஸ்வரக் கச்சேரியில் ஒரு நாதஸ்வரமும் ஒரு தவிலும் வாசிக்கும் வழக்கமே இருந்தது. முதன் முதலாக இரு நாதஸ்வரங்கள் சேர்ந்து வாசிக்கும் முறைமையை நடராஜசுந்தரம் பிள்ளை, சிவசுப்பிரமணிய பிள்ளை சகோதரர்கள் தொடங்கி வைத்தனர்.

இசைக்கருவிகளின் வாசிப்பில் சாஹித்யத்துக்கு (பாடல் வரிகள்) முக்கியத்துவம் தேவை இல்லை என்னும் எண்ணம் கொண்டு, நாதஸ்வர கலைஞர்கள் சிலர் வெறும் ஸ்வரங்களாக கீர்த்தனைகளைக் கற்று வாசிக்கும் வழக்கம் இருந்தது. பாடல் வரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உரிய பாவத்தோடு வாசித்தவர் திருப்பாம்புரம் சகோதரர்கள்.

ராமநாதபுர சமஸ்தானம், சூணாம்பேடு ஜமீன், தண்ணீர் குன்னம் பண்ணை எனப் பல ஜமீன்களில் முதன்மைக் கலைஞர்களாக இருந்தார்கள். ராமநாதபுரம் பூச்சி ஐயங்கார், புல்லாங்குழல் சரப சாஸ்திரிகள் போன்றோர் இவரது இசைத்திறமை மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார்கள்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருப்பாம்புரம் சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மாணவர்கள்

இரட்டை நாதஸ்வர வித்வான்கள் - திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை, நடராஜசுந்தரம் பிள்ளை

மறைவு

நவம்பர் 16, 1938 அன்று திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை காலமானார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jun-2023, 08:05:15 IST