under review

அ. முத்துலிங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:கட்டுரையாளர்கள் to Category:கட்டுரையாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்)
(Removed Category:Spc)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 14: Line 14:
[[File:அ.முத்துலிங்கம் இளமையில்.jpg|thumb|அக்கா சிறுகதைத் தொகுப்பில் அ.முத்துலிங்கம்]]
[[File:அ.முத்துலிங்கம் இளமையில்.jpg|thumb|அக்கா சிறுகதைத் தொகுப்பில் அ.முத்துலிங்கம்]]
====== இலங்கைக் காலகட்டம் ======
====== இலங்கைக் காலகட்டம் ======
அ. முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை ''கடைசி கைங்கரியம் ''சுதந்திரன்'' இதழில் 1958-ம் ஆண்டு வெளியானது. பேராசிரியர் கைலாசபதி புதுமைப்பித்தன் முதலான நவீன தமிழ் எழுத்தாளர்களை அ. முத்துலிங்கத்துக்கு அறிமுகம் செய்தார். பேராசிரியர்கள் [[கார்த்திகேசு சிவத்தம்பி]]- [[க. கைலாசபதி]] இருவருக்குமிடையே நடந்த விவாதங்களில் பங்குபெற்று எழுதுவதற்கான ஊக்கத்தைப் பெற்றார். 1964-ல், பேராசிரியர் க.கைலாசபதியின் அணிந்துரையுடன் "அக்கா" என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதில் [[தினகரன் (இலங்கை)]] இதழில் முதல் பரிசைப்பெற்ற ''அக்கா'' சிறுகதை இடம்பெற்றிருந்தது.  
அ. முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை '''கடைசி கைங்கரியம் ''சுதந்திரன்'' இதழில் 1958-ம் ஆண்டு வெளியானது. பேராசிரியர் கைலாசபதி புதுமைப்பித்தன் முதலான நவீன தமிழ் எழுத்தாளர்களை அ. முத்துலிங்கத்துக்கு அறிமுகம் செய்தார். பேராசிரியர்கள் [[கார்த்திகேசு சிவத்தம்பி]]- [[க. கைலாசபதி]] இருவருக்குமிடையே நடந்த விவாதங்களில் பங்குபெற்று எழுதுவதற்கான ஊக்கத்தைப் பெற்றார். 1964-ல், பேராசிரியர் க.கைலாசபதியின் அணிந்துரையுடன் "அக்கா" என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதில் [[தினகரன் (இலங்கை)]] இதழில் முதல் பரிசைப்பெற்ற ''அக்கா'' சிறுகதை இடம்பெற்றிருந்தது.  
====== புலம்பெயர் காலகட்டம் ======
====== புலம்பெயர் காலகட்டம் ======
இலங்கையை விட்டு புலம்பெயர்ந்த அ.முத்துலிங்கம் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் வாழ்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் 1995-ல் ''திகடசக்கரம்'' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு மீண்டும் எழுதவந்தார். அதன் பின் பல சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இரண்டாம் காலகட்ட கதைகள் புலம்பெயர் வாழ்க்கையை கவித்துவமாகவும் மென்மையான நகைச்சுவையுடனும் விவரிப்பவை. அ.முத்துலிங்கத்தின் இலக்கிய இடம் அவற்றினூடாக உருவானது.  
இலங்கையை விட்டு புலம்பெயர்ந்த அ.முத்துலிங்கம் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் வாழ்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் 1995-ல் ''திகடசக்கரம்'' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு மீண்டும் எழுதவந்தார். அதன் பின் பல சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இரண்டாம் காலகட்ட கதைகள் புலம்பெயர் வாழ்க்கையை கவித்துவமாகவும் மென்மையான நகைச்சுவையுடனும் விவரிப்பவை. அ.முத்துலிங்கத்தின் இலக்கிய இடம் அவற்றினூடாக உருவானது.  
Line 26: Line 26:
உலகம் முழுவதிலும் வாழும், தமிழ் மொழியை வளர்க்கும் சிந்தனை கொண்ட ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது வழங்க கனடாவில் 2001-ல் [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] என்னும் அமைப்பு முதன்மையாக இவரால் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுநராகவும் பணியாற்றுகிறார். இதன் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சாதனையாளர்களுக்கு இயல் விருது வழங்கப்படுகிறது.  
உலகம் முழுவதிலும் வாழும், தமிழ் மொழியை வளர்க்கும் சிந்தனை கொண்ட ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது வழங்க கனடாவில் 2001-ல் [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] என்னும் அமைப்பு முதன்மையாக இவரால் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுநராகவும் பணியாற்றுகிறார். இதன் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சாதனையாளர்களுக்கு இயல் விருது வழங்கப்படுகிறது.  


மருத்துவர் விஜய் ஜானகிராமன் உள்ளிட்டோருடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் இருந்து நிதி திரட்டி 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்தார். மேலும் பல பல்கலைகளில் தமிழ் இருக்கை அமைய முயன்றுவருகிறார். நிதி திரட்டல் அனுபவங்களை ''காலைத் தொடுவேன்’'' <ref>[https://www.jeyamohan.in/160187/ காலைத் தொடுவேன் -அ.முத்துலிங்கம்]</ref>என்ற தலைப்பில் அ.முத்துலிங்கம் கட்டுரையாக எழுதியுள்ளார்.
மருத்துவர் விஜய் ஜானகிராமன் உள்ளிட்டோருடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் இருந்து நிதி திரட்டி 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்தார். மேலும் பல பல்கலைகளில் தமிழ் இருக்கை அமைய முயன்றுவருகிறார். நிதி திரட்டல் அனுபவங்களை '''காலைத் தொடுவேன்''' <ref>[https://www.jeyamohan.in/160187/ காலைத் தொடுவேன் -அ.முத்துலிங்கம்]</ref>என்ற தலைப்பில் அ.முத்துலிங்கம் கட்டுரையாக எழுதியுள்ளார்.
== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==
அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் ஈழப்போரும் துயரங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசப்படவில்லை என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்பட்டபோது, "எந்த எல்லை மட்டும் போகவேண்டுமோ அந்த எல்லை மட்டும் போயிருக்கிறேன். ஓர் எழுத்தாளரின் படைப்பை அவர் எழுதியதை வைத்து மதிப்பிட வேண்டும். எழுதாததை வைத்து அல்ல" என்று எதிர்வினையாற்றினார்.<ref>[https://www.vikatan.com/arts/literature/130794-interview-with-writer-muthulingam விகடன் தடம் -நேர்காணல்]</ref>
அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் ஈழப்போரும் துயரங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசப்படவில்லை என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்பட்டபோது, "எந்த எல்லை மட்டும் போகவேண்டுமோ அந்த எல்லை மட்டும் போயிருக்கிறேன். ஓர் எழுத்தாளரின் படைப்பை அவர் எழுதியதை வைத்து மதிப்பிட வேண்டும். எழுதாததை வைத்து அல்ல" என்று எதிர்வினையாற்றினார்.<ref>[https://www.vikatan.com/arts/literature/130794-interview-with-writer-muthulingam விகடன் தடம் -நேர்காணல்]</ref>
Line 42: Line 42:
* ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசு-ஜோதி விநாயகம் நினைவுச்சிறுகதைத் திட்டம் (1997)
* ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசு-ஜோதி விநாயகம் நினைவுச்சிறுகதைத் திட்டம் (1997)
* வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு-அரச இலக்கிய விருது (சாகித்திய விருது)-இலங்கை அரசு (1999)
* வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு-அரச இலக்கிய விருது (சாகித்திய விருது)-இலங்கை அரசு (1999)
* இலக்கிய பங்களிப்பிற்காக 'நாற்பது ஆண்டு தமிழ் இலக்கிய சாதனை விருது’-தமிழர் தகவல் மாத இதழ், கனடா (2006)
* இலக்கிய பங்களிப்பிற்காக 'நாற்பது ஆண்டு தமிழ் இலக்கிய சாதனை விருது'-தமிழர் தகவல் மாத இதழ், கனடா (2006)
* அமெரிக்க உளவாளி - கட்டுரைத்தொகுப்பு-திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கம், இந்தியா (2012)
* அமெரிக்க உளவாளி - கட்டுரைத்தொகுப்பு-திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கம், இந்தியா (2012)
* குதிரைக்காரன் - சிறுகதைத் தொகுப்பு-சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான "விகடன் விருது", விகடன் குழுமம், சென்னை, இந்தியா (2012)
* குதிரைக்காரன் - சிறுகதைத் தொகுப்பு-சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான "விகடன் விருது", விகடன் குழுமம், சென்னை, இந்தியா (2012)
Line 48: Line 48:
* இலக்கிய பங்களிப்பிற்காக-இலக்கிய விருது-மார்க்கம் நகர சபை-ஒன்டாரியோ மாநிலம், கனடா (2014)
* இலக்கிய பங்களிப்பிற்காக-இலக்கிய விருது-மார்க்கம் நகர சபை-ஒன்டாரியோ மாநிலம், கனடா (2014)
*கி.ரா. இலக்கிய விருது (கோவை) 2022
*கி.ரா. இலக்கிய விருது (கோவை) 2022
*கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் ARBOR AWARD '''2025'''
====== இசைக்கோவை ======
====== இசைக்கோவை ======
எழுத்தாளர் முத்துலிங்கத்தையும், புலம்பெயர்தலின் வலியை, போராட்டத்தை சித்தரித்த அவரது  'கடவுள் தொடங்கிய இடம்' நாவலையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் வெற்றிகளையும், சாதனைகளையும்  சிறப்பிக்கும் முகமாக அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக ராஜன் சோமசுந்தரம் 'கடவுள் தொடங்கிய இடம்'  என்ற இசைக்கோவையை உருவாக்கி வெளியிட்டார்<ref>[https://www.youtube.com/watch?v=XU1AnVGPgrg கடவுள் தொடங்கிய இடம்-இசைக்கோவை, ராஜன் சோமசுந்தரம், youtube.com]</ref>.  
எழுத்தாளர் முத்துலிங்கத்தையும், புலம்பெயர்தலின் வலியை, போராட்டத்தை சித்தரித்த அவரது  'கடவுள் தொடங்கிய இடம்' நாவலையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் வெற்றிகளையும், சாதனைகளையும்  சிறப்பிக்கும் முகமாக அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக ராஜன் சோமசுந்தரம் 'கடவுள் தொடங்கிய இடம்'  என்ற இசைக்கோவையை உருவாக்கி வெளியிட்டார்<ref>[https://www.youtube.com/watch?v=XU1AnVGPgrg கடவுள் தொடங்கிய இடம்-இசைக்கோவை, ராஜன் சோமசுந்தரம், youtube.com]</ref>.  
Line 68: Line 69:
*அமெரிக்கக்காரி-காலச்சுவடு பதிப்பகம் (2009)
*அமெரிக்கக்காரி-காலச்சுவடு பதிப்பகம் (2009)
*குதிரைக்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2013)
*குதிரைக்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2013)
*கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) தொகுப்பாசிரியர் க.மோகனரங்கன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
*கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) - தொகுப்பாசிரியர் க.மோகனரங்கன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
*பிள்ளை கடத்தல்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
*பிள்ளை கடத்தல்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
*ஆட்டுப்பால் புட்டு-நற்றினை பதிப்பகம் (2016)
*ஆட்டுப்பால் புட்டு-நற்றினை பதிப்பகம் (2016)
*அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு இரண்டு பாகங்கள்-நற்றினை பதிப்பகம் (2016)
*அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு - இரண்டு பாகங்கள்-நற்றினை பதிப்பகம் (2016)
======ஒலிப்புத்தகம்======
======ஒலிப்புத்தகம்======
* அ.முத்துலிங்கம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்-கிழக்கு பதிப்பகம் (2008)
* அ.முத்துலிங்கம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்-கிழக்கு பதிப்பகம் (2008)
======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======
======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======
*Inauspicious Times 2008 (Short stories by Appadurai Muttulingam translation by Padma Narayanan-Indian Writing-2008)
*Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai Muttulingam - translation by Padma Narayanan-Indian Writing-2008)
*After Yesterday Translated from Tamil Short stories- Translation by Padma Narayanan-Ratna Books; 1st edition–2018
*After Yesterday - Translated from Tamil - Short stories- Translation by Padma Narayanan-Ratna Books; 1st edition-2018
======கட்டுரைகள்======
======கட்டுரைகள்======
*அங்கே இப்ப என்ன நேரம்?-தமிழினி பதிப்பகம் (2004)
*அங்கே இப்ப என்ன நேரம்?-தமிழினி பதிப்பகம் (2004)
Line 86: Line 87:
*தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - நேர்காணல்கள்-கயல் கவின் பதிப்பகம் (2013)
*தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - நேர்காணல்கள்-கயல் கவின் பதிப்பகம் (2013)
*தோற்றவர் வரலாறு-நற்றினை பதிப்பகம் (2016)
*தோற்றவர் வரலாறு-நற்றினை பதிப்பகம் (2016)
*அ.முத்துலிங்கம் கட்டுரைகள் முழுத்தொகுப்பு இரண்டு தொகுதிகள்-நற்றினை பதிப்பகம் (2018)
*அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - முழுத்தொகுப்பு - இரண்டு தொகுதிகள்-நற்றினை பதிப்பகம் (2018)
======நாவல்கள்======
======நாவல்கள்======
*[[உண்மை கலந்த நாட்குறிப்புகள்]]-உயிர்மை பதிப்பகம் (2008)
*[[உண்மை கலந்த நாட்குறிப்புகள்]]-உயிர்மை பதிப்பகம் (2008)
Line 122: Line 123:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
 
[[Category:எழுத்தாளர்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:ஆண்]]
[[Category:ஆண்]]
[[Category:1937ல் பிறந்தவர்கள்]]
 
[[Category:நாவலாசிரியர்]]
[[Category:நாவலாசிரியர்]]
[[Category:கட்டுரையாளர்]]
[[Category:கட்டுரையாளர்]]
[[Category:சிறுகதையாசிரியர்]]
[[Category:சிறுகதையாசிரியர்]]
[[Category:ஈழம்]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 21:36, 8 January 2026

முத்துலிங்கம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துலிங்கம் (பெயர் பட்டியல்)

To read the article in English: A. Muttulingam. ‎

அ.முத்துலிங்கம் நன்றி: அந்திமழை இதழ்
அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம்

அ. முத்துலிங்கம் (ஜனவரி 19, 1937) முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் பண்பாடுகளையும், முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவந்த கதைசொல்லி. கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை உட்பட வெவ்வேறு பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் அமைக்க முன்முயற்சி எடுத்தவர்.

பிறப்பு, கல்வி

அக்கா.அ முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை தொகுப்பு

அ. முத்துலிங்கம் இலங்கை வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் என்னும் சிற்றூரில் அப்பாத்துரை- ராசம்மா இணையருக்கு ஜனவரி 19, 1937-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற பின் இலங்கையில் பட்டயக் கணக்காளர் தேர்விலும் இங்கிலாந்தில் முகாமைத்துவ பட்டயக்கணக்காளர் தேர்விலும் வெற்றி பெற்றார்.

அ.முத்துலிங்கம் மனைவி கமலரஞ்சனியுடன் நன்றி விகடன்

தனிவாழ்க்கை

அ. முத்துலிங்கத்தின் மனைவியின் பெயர் கமலரஞ்சனி. மகன் சஞ்சயன், மகள் வைதேகி. ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் பல நிறுவனங்களில் நிர்வாகியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அ. முத்துலிங்கம் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் சேவைத் திட்ட அலுவலகத்தின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடா நாட்டில் ஒன்டாரியோ மாநிலத்தில் மார்கம் நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார். அ.முத்துலிங்கத்தின் மகன் சஞ்சயன் முத்துலிங்கம் புகழ்பெற்ற இயற்கையியலாளர், பயண ஊடகவியலாளர். வைதேகி சட்டநிபுணர். இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றார்கள்.

இலக்கியவாழ்க்கை

அக்கா சிறுகதைத் தொகுப்பில் அ.முத்துலிங்கம்
இலங்கைக் காலகட்டம்

அ. முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை கடைசி கைங்கரியம் சுதந்திரன் இதழில் 1958-ம் ஆண்டு வெளியானது. பேராசிரியர் கைலாசபதி புதுமைப்பித்தன் முதலான நவீன தமிழ் எழுத்தாளர்களை அ. முத்துலிங்கத்துக்கு அறிமுகம் செய்தார். பேராசிரியர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி- க. கைலாசபதி இருவருக்குமிடையே நடந்த விவாதங்களில் பங்குபெற்று எழுதுவதற்கான ஊக்கத்தைப் பெற்றார். 1964-ல், பேராசிரியர் க.கைலாசபதியின் அணிந்துரையுடன் "அக்கா" என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதில் தினகரன் (இலங்கை) இதழில் முதல் பரிசைப்பெற்ற அக்கா சிறுகதை இடம்பெற்றிருந்தது.

புலம்பெயர் காலகட்டம்

இலங்கையை விட்டு புலம்பெயர்ந்த அ.முத்துலிங்கம் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் வாழ்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் 1995-ல் திகடசக்கரம் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு மீண்டும் எழுதவந்தார். அதன் பின் பல சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இரண்டாம் காலகட்ட கதைகள் புலம்பெயர் வாழ்க்கையை கவித்துவமாகவும் மென்மையான நகைச்சுவையுடனும் விவரிப்பவை. அ.முத்துலிங்கத்தின் இலக்கிய இடம் அவற்றினூடாக உருவானது.

நாவல்கள்

உண்மை கலந்த நாட்குறிப்புகள் இவருடைய முதல் நாவல். (2008) கடவுள் தொடங்கிய இடம் என்னும் நாவல் 2011-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது. அ.முத்துலிங்கத்தின் நாவல்கள் கதைக்கொத்து போன்ற அமைப்பு கொண்டவை.

குறுங்கட்டுரைகள்

தமிழிலக்கியத்திற்கு அ.முத்துலிங்கத்தின் தனிச்சிறப்பான பங்களிப்பு என்று குறுங்கட்டுரை வடிவத்தைச் சொல்லலாம். தன் சொந்தவாழ்க்கை, வாசிப்பு ஆகியவற்றை ஒட்டி அனுபவக்குறிப்பாகவும் அவதானிப்புகளாகவும் மெல்லிய அங்கதத்துடன் எழுதப்படும் அவருடைய கட்டுரைகள் கதைகளுக்கு நிகராகவே படைப்பூக்கம் கொண்டவையாக கருதப்படுகின்றன. புனைவுக்கும் கட்டுரைக்குமான இடைவெளிகளில் அமைந்தவை அவை.

இலக்கியச்செயல்பாடுகள்

அ.முத்துலிங்கம் மார்க்கரெட் அட்வுட் உட்பட இந்திய, அயல்நாட்டு எழுத்தாளர்களிடம் எடுத்த நேர்காணல்கள் வெளியாகியிருக்கின்றன.

அமைப்புப் பணிகள்

உலகம் முழுவதிலும் வாழும், தமிழ் மொழியை வளர்க்கும் சிந்தனை கொண்ட ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது வழங்க கனடாவில் 2001-ல் தமிழ் இலக்கியத் தோட்டம் என்னும் அமைப்பு முதன்மையாக இவரால் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுநராகவும் பணியாற்றுகிறார். இதன் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சாதனையாளர்களுக்கு இயல் விருது வழங்கப்படுகிறது.

மருத்துவர் விஜய் ஜானகிராமன் உள்ளிட்டோருடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் இருந்து நிதி திரட்டி 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்தார். மேலும் பல பல்கலைகளில் தமிழ் இருக்கை அமைய முயன்றுவருகிறார். நிதி திரட்டல் அனுபவங்களை காலைத் தொடுவேன் [1]என்ற தலைப்பில் அ.முத்துலிங்கம் கட்டுரையாக எழுதியுள்ளார்.

விவாதங்கள்

அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் ஈழப்போரும் துயரங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசப்படவில்லை என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்பட்டபோது, "எந்த எல்லை மட்டும் போகவேண்டுமோ அந்த எல்லை மட்டும் போயிருக்கிறேன். ஓர் எழுத்தாளரின் படைப்பை அவர் எழுதியதை வைத்து மதிப்பிட வேண்டும். எழுதாததை வைத்து அல்ல" என்று எதிர்வினையாற்றினார்.[2]

வாழ்க்கை வரலாறுகள், சிறப்பிதழ்கள்

எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60
  • சொல்வனம் இணைய இதழ் பிப்ரவரி 2017-ல் அ. முத்துலிங்கம் சிறப்பிதழாக வெளிவந்தது.
  • ஞானம் கலை இலக்கிய இதழ் ஏப்ரல் 2018 இதழை "எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60" என்ற சிறப்பிதழாக வெளியிட்டது.
  • காலம் அ.முத்துலிங்கம் இதழ் (இணையநூலகம்)

பரிசுகளும் விருதுகளும்

  • பக்குவம்-சிறுகதை-தினகரன் சிறுகதைப் போட்டி-முதல் பரிசு-தினகரன் நாளிதழ், இலங்கை (1961)
  • அனுலா-கல்கி சிறுகதைப் போட்டி-இரண்டாம் பரிசு-கல்கி வார இதழ், சென்னை, இந்தியா (1959-1961)
  • திகடசக்கரம் - சிறுகதைத் தொகுப்பு-லில்லி தேவசிகாமணி நினைவு விருது, லில்லி தேவசிகாமணி நினைவு அறக்கட்டளை, கோயம்புத்தூர், இந்தியா (1995)
  • வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு-சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு-தமிழ்நாடு அரசு, இந்தியா (1996)
  • வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு-சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு-ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (1996)
  • ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசு-ஜோதி விநாயகம் நினைவுச்சிறுகதைத் திட்டம் (1997)
  • வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு-அரச இலக்கிய விருது (சாகித்திய விருது)-இலங்கை அரசு (1999)
  • இலக்கிய பங்களிப்பிற்காக 'நாற்பது ஆண்டு தமிழ் இலக்கிய சாதனை விருது'-தமிழர் தகவல் மாத இதழ், கனடா (2006)
  • அமெரிக்க உளவாளி - கட்டுரைத்தொகுப்பு-திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கம், இந்தியா (2012)
  • குதிரைக்காரன் - சிறுகதைத் தொகுப்பு-சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான "விகடன் விருது", விகடன் குழுமம், சென்னை, இந்தியா (2012)
  • அமெரிக்கக்காரி-புலம்பெயர் தமிழர்களுக்கான தமிழ்ப்பேராய விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது-எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை, இந்தியா (2012)
  • இலக்கிய பங்களிப்பிற்காக-இலக்கிய விருது-மார்க்கம் நகர சபை-ஒன்டாரியோ மாநிலம், கனடா (2014)
  • கி.ரா. இலக்கிய விருது (கோவை) 2022
  • கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் ARBOR AWARD 2025
இசைக்கோவை

எழுத்தாளர் முத்துலிங்கத்தையும், புலம்பெயர்தலின் வலியை, போராட்டத்தை சித்தரித்த அவரது 'கடவுள் தொடங்கிய இடம்' நாவலையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் வெற்றிகளையும், சாதனைகளையும் சிறப்பிக்கும் முகமாக அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக ராஜன் சோமசுந்தரம் 'கடவுள் தொடங்கிய இடம்' என்ற இசைக்கோவையை உருவாக்கி வெளியிட்டார்[3].

காலம் இதழ்

இலக்கிய இடம்

சொல்வனம்

அ.முத்துலிங்கம் வாசிப்பின்பம் அளிக்கும் விதத்தில் கதையை உருவாக்குவதில் தனிக் கவனம் கொள்ளும் எழுத்தாளர். தமிழைப் பொருத்தவரை அவர் கதைசொல்லலில் கி.ராஜநாராயணனுக்கும் குறைத்துச் சொல்லலில் அசோகமித்திரனுக்கும் தொடர்ச்சி என்று விமர்சகர் ஜெயமோகன் சொல்கிறார்.[4] அவருடைய கதைகளில் புன்னகையுடன் கதையைச் சொல்லும் ஒர் ஆசிரியர் இருந்துகொண்டிருக்கிறார். அக்கதைசொல்லி இலக்கிய மேற்கோள்கள், ஆர்வமூட்டும் தகவல்கள், புராணக்கதைகள் ஆகியவற்றை கலந்துகொண்டு கதை சொல்கிறார்.

அ.முத்துலிங்கத்தின் எழுத்து நிலம், பண்பாடு சார்ந்த எல்லைகளைக் கடந்து நிற்கும் ஒன்று. உலகளாவிய பார்வையையும், மானுடப் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டது. புலம்பெயர்ந்தவர்கள் புதிய பண்பாடுகளுடன் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும் அதன் சிக்கல்களும் அவர் கதைகளில் உள்ளன. அதை எளிய வேடிக்கையாக ஆக்குவதில்லை. தீர்ப்புகளை சொல்வதில்லை தன் பண்பாட்டுப்புலம் பற்றிய பெருமிதமும் அவரிடம் இல்லை. உலகுதழுவிய பார்வையுடன் நின்று கதைகளைச் சொல்கிறார். உலகத்தின் வெவ்வேறு இன,மொழி, பண்பாட்டுப்பின்புலம் கொண்ட மக்களை ஒரேவகையான பரிவுடனும் அணுக்கத்துடனும் காட்டுபவை அவருடைய கதைகள்.

நவீன வாழ்க்கையில் இருந்து பெறப்படும் புதிய படிமங்களை அ.முத்துலிங்கத்தின் கதைகள் கையாள்கின்றன. உதாரணம், துணிதுவைக்கும் இயந்திரம் (பூமாதேவி). வாழ்க்கைச் சித்திரங்களை இப்படிமங்கள் வழியாக கவித்துவமாக உருமாற்றுகிறார். "புன்னகையே அ.முத்துலிங்கத்தின் இலக்கியத்தின் அடிப்படை. ஒரு புன்னகைக்கு அப்பால் போகும் ஏதும் இந்த வாழ்க்கையில் இல்லை என்ற பிரக்ஞையில் இருந்து பிறக்கும் கலை அவருடையது. இது வாழ்க்கையின் உக்கிரத்தையோ, சிக்கலையோ, புரிந்து கொள்ள முடியாத முடியாத ஆழத்தையோ பொருட்படுத்தாத மழுங்கலின் விளைவான புன்னகை அல்ல. மாறாக அவர் கதையுலகில் எப்போதும் அடியோட்டமாக அந்த அம்சங்கள் இருந்தபடியேதான் உள்ளன. முரண்பாடுகள், குரூரங்கள் ஆகியவற்றால் ஆனவை அவரது பெரும்பாலான கதைகள் என்றுகூட கூறலாம். இது ஒரு சமநிலை, ஒரு தரிசனம்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • அக்கா-விஜயலட்சுமி புத்தகசாலை (1964)
  • திகடசக்கரம்-காந்தளகம் (1995)
  • வம்சவிருத்தி-மித்ர வெளியிடு (1996)
  • வடக்கு வீதி-மணிமேகலைப் பிரசுரம் (1998)
  • மகாராஜாவின் ரயில் வண்டி-காலச்சுவடு பதிப்பகம் (2001)
  • அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2003 வரை எழுதியவை)-தமிழினி பதிப்பகம் (2003)
  • அமெரிக்கக்காரி-காலச்சுவடு பதிப்பகம் (2009)
  • குதிரைக்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2013)
  • கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) - தொகுப்பாசிரியர் க.மோகனரங்கன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
  • பிள்ளை கடத்தல்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
  • ஆட்டுப்பால் புட்டு-நற்றினை பதிப்பகம் (2016)
  • அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு - இரண்டு பாகங்கள்-நற்றினை பதிப்பகம் (2016)
ஒலிப்புத்தகம்
  • அ.முத்துலிங்கம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்-கிழக்கு பதிப்பகம் (2008)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai Muttulingam - translation by Padma Narayanan-Indian Writing-2008)
  • After Yesterday - Translated from Tamil - Short stories- Translation by Padma Narayanan-Ratna Books; 1st edition-2018
கட்டுரைகள்
  • அங்கே இப்ப என்ன நேரம்?-தமிழினி பதிப்பகம் (2004)
  • பூமியின் பாதி வயது-உயிர்மை பதிப்பகம் (2007)
  • கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - (மதிப்புரைகள் தொகுப்பு)-உயிர்மை பதிப்பகம் (2006)
  • வியத்தலும் இலமே (நேர்காணல்கள்)-காலச்சுவடு பதிப்பகம் (2006)
  • அமெரிக்க உளவாளி-கிழக்கு பதிப்பகம் (2010)
  • ஒன்றுக்கும் உதவாதவன்-உயிர்மை பதிப்பகம் (2011)
  • தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - நேர்காணல்கள்-கயல் கவின் பதிப்பகம் (2013)
  • தோற்றவர் வரலாறு-நற்றினை பதிப்பகம் (2016)
  • அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - முழுத்தொகுப்பு - இரண்டு தொகுதிகள்-நற்றினை பதிப்பகம் (2018)
நாவல்கள்

English Translations

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:29 IST