under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1980: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Internal link name தீபம் to தீபம்;)
(Link text corrected)
 
(One intermediate revision by the same user not shown)
Line 45: Line 45:
|நாபாவின் ரத்தினக்கல்
|நாபாவின் ரத்தினக்கல்
|[[கௌதம நீலாம்பரன்]]
|[[கௌதம நீலாம்பரன்]]
|[[கலைமகள்]]
|[[கலைமகள் (இதழ்)|கலைமகள்]]
|-
|-
|செப்டம்பர்
|செப்டம்பர்

Latest revision as of 13:12, 26 September 2024

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1980

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி நான் கங்கா லட்சுமி ராஜரத்னம் ஆனந்த விகடன்
பிப்ரவரி வைர ஊசி ஆதி குமுதம்
மார்ச் செக்கு மாடுகள் நிர்மல் குமார் இதயம் பேசுகிறது
ஏப்ரல் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் ஏ. சங்கரன் கணையாழி
மே மழை ஞானபானு தீபம்
ஜூன் சில எழுத்துக்களும் சில எதிர்பார்ப்புகளும் அனுராதா ரமணன் ஆனந்த விகடன்
ஜூலை இடப்பெயர்ச்சி மோகனன் தீபம்
ஆகஸ்ட் நாபாவின் ரத்தினக்கல் கௌதம நீலாம்பரன் கலைமகள்
செப்டம்பர் சுமை கூலி எம்.எஸ். பெருமாள் கல்கி
அக்டோபர் காட்சிகள் ஜே.எம். சாலி ஆனந்த விகடன்
நவம்பர் சின்னம்மிணி திருப்பூர் கிருஷ்ணன் தினமணி கதிர்
டிசம்பர் தனிமை இனி நிரந்தரக் குத்தகை பாலகுமாரன் சாவி

1980-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1980 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ‘சின்னம்மிணி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. வல்லிக்கண்ணன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை தீபம் எஸ். திருமலை தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2023, 05:51:48 IST