under review

சொல்வளர்காடு (வெண்முரசு நாவலின் பகுதி - 11): Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(13 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:


[[File:51EHjd2KYKL.jpg|thumb|'''சொல்வளர்காடு''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 11)]]
[[File:51EHjd2KYKL.jpg|thumb|சொல்வளர்காடு ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 11)]]
'''சொல்வளர்காடு'''<ref>[https://venmurasu.in/solvalarkaadu/chapter-1 வெண்முரசு - சொல்வளர்காடு - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> ([[வெண்முரசு]]’ நாவலின் பகுதி - 11) பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்கிறது. நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு, பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையைக் கண்டடைவதுடன் நிறைவுபெறுகிறது. பல்வேறு காடுகளில் அமைந்த, வெவ்வேறு அறுதி முடிவுகளை முன்வைக்கும் வேதக்கல்விக் குருகுலங்களின் பெருங்கூட்டமே ‘சொல்வளர்காடு’.
சொல்வளர்காடு<ref>[https://venmurasu.in/solvalarkaadu/chapter-1 வெண்முரசு - சொல்வளர்காடு - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> ('[[வெண்முரசு]]’ நாவலின் பகுதி - 11) பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்கிறது. நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு, பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையைக் கண்டடைவதுடனும் நிறைவுபெறுகிறது. பல்வேறு காடுகளில் அமைந்த, வெவ்வேறு அறுதி முடிவுகளை முன்வைக்கும் வேதக்கல்விக் குருகுலங்களின் பெருங்கூட்டமே 'சொல்வளர்காடு’.
 
== பதிப்பு ==
== பதிப்பு ==
====== இணையப் பதிப்பு ======
====== இணையப் பதிப்பு ======
‘வெண்முரசு’ நாவலின் 11-ஆம் பகுதியான ‘சொல்வளர்காடு’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு செப்டம்பர் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
'வெண்முரசு’ நாவலின் 11-ம் பகுதியான 'சொல்வளர்காடு’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு செப்டம்பர் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
 
====== அச்சுப் பதிப்பு ======
====== அச்சுப் பதிப்பு ======
கிழக்கு பதிப்பகம் சொல்வளர்காட்டை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.
கிழக்கு பதிப்பகம் சொல்வளர்காட்டை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [[ஜெயமோகன்]]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [[ஜெயமோகன்]]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
 
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
சொல்வளர்காட்டில் பாண்டவரின் வனவாசம், சூதாட்டத்திற்குப் பின்னர் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை, இளைய யாதவரின் குருகுலக்கல்வியும் சூதாட்டத்தின் போது துவாரகையில் நடந்தவையும் என மாறி மாறி கதை நகர்த்தப் பட்டுள்ளது. இளைய யாதவரின் குருகுலக்கல்வி மற்றும் துவாரகை சார்ந்தவையும் அஸ்தினபுரி நிகழ்வுகள் சார்ந்தவையும் பிறரின் கண்ணோட்டத்தில் தொகுத்துச் சொல்லப்படுவதாக மாறி மாறி அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவரின் ‘வனவாசம்’ ஒவ்வொரு காடாகச் சொற்களைத் தொகுத்துக்கொள்வதன் வழியாகவே நிகழ்கிறது.
சொல்வளர்காட்டில் பாண்டவரின் வனவாசம், சூதாட்டத்திற்குப் பின்னர் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை, இளைய யாதவரின் குருகுலக்கல்வியும் சூதாட்டத்தின் போது துவாரகையில் நடந்தவையும் என மாறி மாறி கதை நகர்த்தப்பட்டுள்ளது. இளைய யாதவரின் குருகுலக்கல்வி மற்றும் துவாரகை சார்ந்தவையும் அஸ்தினபுரி நிகழ்வுகள் சார்ந்தவையும் பிறரின் கண்ணோட்டத்தில் தொகுத்துச் சொல்லப்படுவதாக மாறி மாறி அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவரின் 'வனவாசம்’ ஒவ்வொரு காடாகச் சொற்களைத் தொகுத்துக்கொள்வதன் வழியாகவே நிகழ்கிறது.  


யாதவர்களின் குடிப் பூசல், துவாரகை சார்ந்த நிகழ்வுகள், யாதவர்களை ஒன்றிணைக்க இளைய யாதவர் செய்யும் பெருங்கொலைகள், அதன் வழியாகப் பலராமர் இளைய யாதவரின் மீது கொள்ளும் அகப்பகை ஆகிய  அனைத்துமே நமக்கு இளைய யாதவரின் மீது கருணையையும் இரக்கத்தையுமே குவியச் செய்கின்றன.
யாதவர்களின் குடிப் பூசல், துவாரகை சார்ந்த நிகழ்வுகள், யாதவர்களை ஒன்றிணைக்க இளைய யாதவர் செய்யும் பெருங்கொலைகள், அதன் வழியாகப் பலராமர் இளைய யாதவரின் மீது கொள்ளும் அகப்பகை ஆகியவை துவாரகை சார்ந்த நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன.  


அஸ்தினபுரி சார்ந்த நிகழ்வுகளுள் பலவற்றைக் ‘காலன்’ என்பவரின் வழியாகவே காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். ‘காலன்’ தான் கண்டவற்றை, தனக்கு எதிர் நின்று உரையாடியவர்களின் உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகளோடும் அப்போது அங்கிருந்த புறச்சூழலோடும் கலந்தே பாண்டவர்களிடம் உரைக்கிறார்.
சூதாட்டக் களம் அமைக்கப்படுதல், அதற்கு வருகை தரும் அரசர்கள், அதற்கான ஒருக்கங்கள்,  ஆகியவை விரிவாகப் பேசப்படுகின்றன. சூதாட்டத்தில் தருமர் தோற்பது, அதன் விளைவாக திரெளபதி அவை நடுவே அவமானப்படுத்தப்படுவது, அதிலிருந்து மீட்கப்படும் தருணம் ஆகியவற்றுடன்    விதுரர் கணிகரைச் சந்திக்கும் சூழல். சகுனி சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய பகடைகளை எரித்துவிடுவது, கணிகர் விதுரரிடம் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்காமல் இருப்பதற்கு மாற்றுத் தண்டனையாக 'வனவாசம்’ குறித்துப் பேசும் உரையாடல்கள், பிதாமகர் பீஷ்மர் சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய ஆயுதசாலையில் துரியோதனனைத் தண்டிப்பது, அஸ்தினபுரியைவிட்டுச் செல்லும் விதுரரின் மனவோட்டம் என பன்னிரு படைக்களம் சம்பவங்களின் கோர்வையாக அமைந்திருக்கிறது.  


பாண்டவர்களுக்கு இடையில் நிகழும் தத்துவம் சார்ந்த உரையாடல்களுள் பீமனின் சொற்கள் மிக முக்கியமானவை. பீமனே நகைச்சுவையின் வழியாகவே தத்துவத்தின் மையத்தை எளிதில் அடையவல்லவர். பீமன் நகைச்சுவைக் குறும்பன்; தேர்ந்த ஞானி; பிரம்மமாகிவந்தவன். அவனால் மட்டுமே அனைத்தையும் கேலியாகவும் உண்மையாகவும் எதிர்கொள்ள முடிகிறது. மனிதர்கள் அணியும் அக முகமூடிகளை அவ்வப்போது கிழித் தெறிபவனாகவும் பீமனே இருக்கிறார். குறிப்பாக, அவர் பலமுறை தர்மனின் அகமுகமூடிகளைக் கிழிக்கிறார். அவருக்கு நிகரானவர் சகாதேவன். ஆனால், அனைத்தையும் சகித்துக்கொண்டு தன்னிலையில் உறைந்து நிற்கிறார். அதனால்தான் பெரும்பாலான இறுதி முடிவுகளைத் தர்மர் சகாதேவனைக் கேட்டே எடுக்கிறார்.  
பாண்டவர்கள் நகர் நீங்கிய பின் அஸ்தினபுரி சார்ந்த நிகழ்வுகள் 'காலன்’ என்பவரின் வழியாக அவர் கண்டவற்றை, தனக்கு எதிர் நின்று உரையாடியவர்களின் உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகளோடும் அப்போது அங்கிருந்த புறச்சூழலோடும் கலந்தே பாண்டவர்களிடம் உரைப்பதாக நாவலில் காட்டப்படுகிறது. தருமனுக்கும் திரெளபதிக்குமான மனப்போராட்டம், திரெளபதிக்கும் இளைய யாதவருக்குமான உரையாடல்,யாதவர் குலப் பூசல் சார்ந்து பலராமருக்கும் இளைய யாதவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்,யுவனாஸ்வன் மாந்தாஸ்யதியைப் பெற்றெடுத்து, தாயுமானவனாக மாறுவது. பாண்டவர்களின் இருப்பினைக் கௌரவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காக குந்திதேவி அஸ்தினபுரியிலேயே தங்கிவிடுவது, வனவாசத்திற்குப் புறப்படும் முன்பாகத் திரௌபதி தம் பிள்ளைகளைத் துரியோதனனின் மனைவி பானுமதியிடம் ஒப்படைப்பது, இளைய யாதவருக்கும் சால்வனுக்கும் இடையே நடக்கும் போரில் இளைய யாதவரின் படையினர் இளைய யாதவருக்கு மாறுபாடாகச் செயல்படுவது, அந்தச் சூழலையும் இளைய யாதவர் வெற்றிகொண்டு, சால்வனை வெற்றிகொள்ளுதல். என சொல்வளர்க்காடு நாடகீயமான பகுதிகளையும் கொண்டிருக்கிறது.  


இளைய யாதவர் தன் கூரிய நடுநிலையான சொற்களால் திரெளபதியின் உச்சந்தலையில் தட்டி, அவளின் மனவெழுச்சியைச் சற்று அடங்கச் செய்துவிடுகிறார். மிக நுட்பமான சொல்லாடல் அது. பிறர் எதிர்பார்க்காத தளத்தில், கோணத்தில் அவர் சிந்தித்துப் பேசுகிறார். ‘சூதாட்டத்தில் உன்னைப் பணையப்பொருளாக வைத்தார்கள், என்பதற்காகவே நீ வஞ்சினச் சூளுரைத்து, மிகப்பெரிய போரைத் தொடங்கி, அதில் எண்ணற்ற உயிர்களைப் பணையமாக வைத்துள்ளாய்’ என்ற கருத்தில் இளைய யாதவர் அவளிடம் பேசுகிறார். சூதாட்டக்களத்தில் அவமானப்படுத்தப்பட்ட திரௌபதியை எளிய பெண்ணாகவே கருதி, அவளின் மீது வாசகர்கள் பெரிதும் இரக்கம் காட்டி நிற்கும்போது (அதே இரக்கத்தைத்தான் திரௌபதியும் அங்கிருந்த எல்லோரிடமும் எதிர்பார்த்தாள்), இளைய யாதவர் அவளிடம், நீ பேரரசி என்றும் அதனாலேயே நீ எளிய பெண் அல்லள் என்றும் கூறுகிறார். இளைய யாதவர் அவளிடம், அரசியல் சார்ந்து எத்தனையோ பேரரசர்கள் அவமானப்படுத்தப் பட்டுள்ளனர், எத்தனையோ அரசர்கள் தலை கொய்யப் பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்து, நீ அரசியலுக்குள் நிலைப்பட்ட பின்னர் ரத்தம் சிந்தவோ, அவமானப்படவோ ஏதும் இல்லை என்ற கோணத்திலும் இதில் ஆண், பெண் எனப் பிரித்து நோக்க வேண்டியதில்லை என்ற கருத்தாக்கத்திலும் அரசு, அரசியல் என்றே இதைப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனைத் தளத்திலும் உரையாடுகிறார். இந்த உரையாடலின் முடிவில் திரௌபதியின் அகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது.
கானக வாழ்வில் புகும் பாண்டவர்கள் ஒவ்வொரு காடாக பயணிப்பதும் அந்தந்தக் காடுகளோடு தொடர்புடைய மெய்மைச் சிந்தனைப் பள்ளிகளில் உரையாடுவதும் என விரியும் நாவல் அதன் வழியே இந்திய நிலத்தில் உருவாகி வந்த வெவ்வேறு மெய்மை தரிசனங்களைக் காட்டுகிறது.


சொல்வளர்காட்டின் ‘வேதக்கல்வியில்  பெண்களின் இடம்’ குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளமைது. திரௌபதி வைரோசனரிடம் கேட்கும் வினாவிலிருந்து, ‘வேதக்கல்வியின் பெண்களின் பங்களிப்பு’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பேசத் தொடங்குகிறார். கார்க்கி, வதவா பிரதித்தேயி, அம்பை காத்யாயனி, சுலஃபை மைத்ரேயி எனத் தொடர்கிறது பெண்களின் வேதக்கல்வி. அவர்கள் பெண்களுக்கான தனித்த வேதக்கல்விப் பாடசாலையை உருவாக்குகிறார்கள். அங்கு ஆண்களுக்கு இடமில்லை என்பதும் தனிச்சிறப்பு.  
சொல்வளர்காட்டின் 'வேதக்கல்வியில் பெண்களின் இடம்’ குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. திரௌபதி வைரோசனரிடம் கேட்கும் வினாவிலிருந்து, 'வேதக்கல்வியின் பெண்களின் பங்களிப்பு’ குறித்து பேசும் நாவல் கார்க்கி, வதவா பிரதித்தேயி, அம்பை காத்யாயனி, சுலஃபை மைத்ரேயி எனத் தொடர்கிறது.


சொல்வளர்காட்டில் பின்வரும் உணர்ச்சிகரமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சுஃபர கௌசிகர் என்ற ‘ஆசுர வேள்வி’ செய்யும் அந்தணர் பற்றிய காட்சி. ‘தனக்கென ஒன்றும் பெறாது தன்னை இழப்பது வேள்வியின் உச்சம்’ என்ற கருத்துக்குச் சான்றாகவே அவரின் வேள்வி நிறைவுகொள்கிறது. அரணிக் கட்டைகளைத் தேடிச்செல்லும் பாண்டவர்கள் மாண்டு (தருமனைத் தவிர) மீண்டும் உயிர்ப்பெறுதல். அவர்கள் மூத்த யட்சர் மணிபத்மரைத் தம் மூதாதையர்களுள் ஒருவராக ஏற்றல்.  
சொல்வளர்காட்டில் முக்கியமான கதை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சுஃபர கௌசிகர் என்ற 'ஆசுர வேள்வி’ செய்யும் அந்தணர் பற்றிய நிகழ்வு வழியே அவருக்கு உதவும் பொருட்டு அரணிக் கட்டைகளைத் தேடிச்செல்லும் பாண்டவர்கள் மாண்டு (தருமனைத் தவிர) மீண்டும் உயிர் பெறுதல், அவர்கள் மூத்த யட்சர் மணிபத்மரைத் தம் மூதாதையர்களுள் ஒருவராக ஏற்றல் ஆகியவை விவரிக்கப்படுகின்றன.


சொல்வளர்காட்டிற்குள் உபகதையாக விரியும் அரசர் சோமகன் பற்றிய செய்தி. சோமகன் என்ற அரசன் பெற்றெடுத்த ‘ஜந்து’ என்ற சௌமதத்தன். குழந்தைகள் மீது தந்தைகொள்ளும் பெரு விழைவுகளைக் காட்டும் காட்சிச் சித்தரிப்பு. ஒருவகையில் அந்தச் சோமகன் வடிவில், நான் திருதராஷ்டிரரைத்தான் பார்த்தேன். எனக்கு, அவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமைகளாக நூறு மகன்கள், பிள்ளைப்பித்து ஆகியன தெரிந்தன.
சொல்வளர்காட்டிற்குள் உபகதையாக விரியும் அரசர் சோமகன் பற்றிய கதை, கோபானர் தருமருக்கு ஹரிசந்திரன் வாழ்க்கையைக் கூறுவது, கிரிஷ்மன் மூன்று தந்தையர் கதையைக் கூறுவது, மிதிலையில் அரசமுனிவர் ஜனகர் தன்னுடைய அமைச்சர் அஸ்வலனரின் ஆலோசனையின்படி, 'பகுதட்சிணைப் பெருவேள்வி’யை நடத்துவது, அதில் பங்கேற்றும் யாக்ஞவல்கியர் தன்னுடைய மெய்யியல் சிந்தனைகளால் கார்க்கி உள்பட அனைவரையும் வெற்றிகொண்டு, 'பாரதவர்ஷத்தின் அந்தண முதல்வர்’ என்று அறியப்படுவது ஆகிய நிகழ்வுகளும் மையஓட்டத்திற்கு இணைக்கதைகளாக வருகின்றன.  


பிதாமகர் பீஷ்மர் சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய ஆயுதசாலையில் துரியோதனனை அடித்துச் சிதைக்கும் காட்சி. உடன்பிறந்தார் மீது எல்லை மீறிச் செயல்படும் ஒவ்வொரு தருணத்திலும் துரியோதனனை யாராவது அடித்துச் சிதைக்கவே விழைகிறார்கள். முன்பு திருதராஷ்டிரர், இப்போது பீஷ்மர். ஆனால், ஒருபோதும் துரியோதனன் அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதில்லை. இயலாது என்பதால் மட்டுமல்ல; அவர்களின் மீது தன்னுள்ளத்தின் ஆழத்தில் கொண்ட பெரும்பற்றின் காரணமாகவும்தான். அதே அளவு  பேரன்பினைத்தான் துரியோதனன் மீதும் திருதராஷ்டிரரும் பிதாமகர் பீஷ்மரும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், இவ்விருவருமே இறுதியில் தன்னுடைய ஆதரவினைத் துரியோதனனுக்கு நல்குகிறார்கள்.
தருமர் இறுதியில் கந்தமாதான மலையில் பிரபஞ்சப் பெருநெருப்பினை எதிர்கொண்டு, அதற்குத் தன்னையே உவந்தளித்து, அகத்திலும் புறத்திலும் எரிந்து, புடம்போடப்பட்ட தங்கமாக மீண்டு வருகிறார்.  
 
== கதை மாந்தர் ==
அஸ்தினபுரியைவிட்டுச் செல்லும் விதுரரின் மனவோட்டம் பற்றிய காட்சிச்சித்திரம். யாருக்கும் தெரியாமல் தனித்தலையும் விதுரர் இறுதியில், அஸ்தினபுரிக்கே திரும்புகிறார். கர்ணன் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும்கூட துரியோதனன் விதுரரையே மீண்டும் அஸ்தினபுரியின் பேரமைச்சராக்குகிறார். துரியோதனனின் உளப்பாங்கினைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. அதனாலேயே வாசகர் உள்ளம் எப்போதும் துரியோதனனுக்கும் சிறிதளவு இடத்தை ஒதுக்கியே வைத்துள்ளது போலும்!.
இளைய யாதவர், தருமர், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் விதுரர், சகுனி, துரியோதனன், குந்தி, பானுமதி, சால்வன், பலராமர், பீஷ்மர், ஹரிசந்திரன், னைகர், கிரிஷ்மன், யுவனாஷ்வன், யாக்ஞவல்கியர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
 
== உசாத்துணை ==
துரியோதனன் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விதுரர் கணிகரைச் சந்திக்கும் சூழல். சகுனி சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய பகடைகளை எரித்துவிடுவதும் இனிச் சூதாடுவதில்லை என்று முடிவு செய்வதும் சிறப்பான தருணங்கள். கணிகர் விதுரரிடம் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்காமல் இருப்பதற்கு மாற்றுத் தண்டனையாக ‘வனவாசம்’ குறித்துப் பேசும் உரையாடல்கள் மிக நேர்த்தியானவை.
* [https://venmurasudiscussions.blogspot.com/ வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)]
 
* [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
யாதவர் குலப் பூசல் சார்ந்து பலராமருக்கும் இளைய யாதவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் சார்ந்த காட்சி. வனவாசத்தில் திரௌபதி தருமரிடம் சினந்து பேசும் சூழல். கணவன்-மனைவிக்குள் எழும் உச்சகட்ட சண்டைக்கு நிகரானது அது. திரௌபதியை மிகத்துணிந்த பெண்ணாகவும் கொற்றவையாகவும் வாசகர் அறியும் தருணம் அது. விதுரர் தன் முற்பிறப்பினை அறியும் காட்சி. அதன் இணைவாகவே பீஷ்மரின் இறுதியும் அவருக்கு அறிவிக்கப்படுகிறது.
*[https://www.jeyamohan.in/149047/ 'சொல்வளர்காடு’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
== அடிக்குறிப்புகள் ==
<references />


மைத்ரேயர் துரியோதனனின் முக்காலத்தையும் அறிந்து பகரும் காட்சி. அப்போது துரியோதனன், ‘நான் வெகுதூரம் சென்றுவிட்டேன். இனித் திரும்பி வருவதற்கு இல்லை’ என்று கூறுகிறான். அந்தத் தருணத்தில் வாசகரின் உள்ளம் துரியோதனனின் பிடிவாதத்தின் மீது வெறுப்புக்கொள்கிறது. அதற்குக் கர்ணன் உடந்தையாக இருக்கிறான் என்பதும் நமக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. இருப்பினும் இருளில் நிற்பவர்களை நம்மால் பார்க்க முடியாது. அதுபோலவே அறத்துக்கு வெளியே நிற்பவர்களையும் நம்மால் பார்க்க முடியாதுதான்.  அதனால், அவ்விருவர் மீதும் வாசகர் இரக்கமே கொள்ளவே நேர்கிறது.


கோபானர் தருமருக்கு ஹரிசந்திரன் வாழ்க்கையைக் கூறும் காட்சி. கிரிஷ்மன் மூன்று தந்தையர் கதையைக் கூறுவது. மிதிலையில் அரசமுனிவர் ஜனகர் தன்னுடைய அமைச்சர் அஸ்வலனரின் ஆலோசனையின்படி, ‘பகுதட்சிணைப் பெருவேள்வி’யை நடத்தும் காட்சி. அதில் பங்கேற்றும் யாக்ஞவல்கியர் தன்னுடைய மெய்யியல் சிந்தனைகளால் கார்க்கி உள்பட அனைவரையும் வெற்றிகொண்டு, ‘பாரதவர்ஷத்தின் அந்தண முதல்வர்’ என்று அறியப்படும் தருணம்.


யுவனாஸ்வன் மாந்தாஸ்யதியைப் பெற்றெடுத்து, தாயுமானவனாக மாறுவது. பாண்டவர்களின் இருப்பினைக் கௌரவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காகவே குந்திதேவி அஸ்தினபுரியிலேயே தங்கிவிடும் காட்சி. வனவாசத்திற்குப் புறப்படும் முன்பாகத் திரௌபதி தம் பிள்ளைகளைத் துரியோதனனின் மனைவி பானுமதியிடம் ஒப்படைக்கும் தருணம். இளைய யாதவருக்கும் சால்வனுக்கும் இடையே நடக்கும் போரில் இளைய யாதவரின் படையினர் இளைய யாதவருக்குத் துரோகம் செய்யும் சூழல். அந்தச் சூழ்ச்சியையும் இளைய யாதவர் வெற்றிகொண்டு, சால்வனை வெற்றிகொள்ளுதல்.
{{Finalised}}


தருமர் இறுதியில் பிரபஞ்சப் பெருநெருப்பினை எதிர்கொண்டு, அதற்குத் தன்னையே உவந்தளித்து, அகத்திலும் புறத்திலும் எரிந்து, புடம்போடப்பட்ட தங்கமாக மீண்டு வருகிறார்.   
{{Fndt|23-Dec-2022, 12:18:12 IST}}


== கதை மாந்தர் ==
இளைய யாதவர், தருமர், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் விதுரர், சகுனி, துரியோதனன், குந்தி, பானுமதி, சால்வன், பலராமர், பீஷ்மர், ஹரிசந்திரன், னைகர், கிரிஷ்மன், யுவனாஷ்வன், யாக்ஞவல்கியர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.


== உசாத்துணை ==
* [https://venmurasudiscussions.blogspot.com/ வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)]
* [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
*[https://www.jeyamohan.in/149047/ ‘சொல்வளர்காடு’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
== இணைப்புகள் ==
<references />
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:54, 13 June 2024

சொல்வளர்காடு ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 11)

சொல்வளர்காடு[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 11) பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்கிறது. நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு, பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையைக் கண்டடைவதுடனும் நிறைவுபெறுகிறது. பல்வேறு காடுகளில் அமைந்த, வெவ்வேறு அறுதி முடிவுகளை முன்வைக்கும் வேதக்கல்விக் குருகுலங்களின் பெருங்கூட்டமே 'சொல்வளர்காடு’.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 11-ம் பகுதியான 'சொல்வளர்காடு’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு செப்டம்பர் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் சொல்வளர்காட்டை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

சொல்வளர்காட்டில் பாண்டவரின் வனவாசம், சூதாட்டத்திற்குப் பின்னர் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை, இளைய யாதவரின் குருகுலக்கல்வியும் சூதாட்டத்தின் போது துவாரகையில் நடந்தவையும் என மாறி மாறி கதை நகர்த்தப்பட்டுள்ளது. இளைய யாதவரின் குருகுலக்கல்வி மற்றும் துவாரகை சார்ந்தவையும் அஸ்தினபுரி நிகழ்வுகள் சார்ந்தவையும் பிறரின் கண்ணோட்டத்தில் தொகுத்துச் சொல்லப்படுவதாக மாறி மாறி அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவரின் 'வனவாசம்’ ஒவ்வொரு காடாகச் சொற்களைத் தொகுத்துக்கொள்வதன் வழியாகவே நிகழ்கிறது.

யாதவர்களின் குடிப் பூசல், துவாரகை சார்ந்த நிகழ்வுகள், யாதவர்களை ஒன்றிணைக்க இளைய யாதவர் செய்யும் பெருங்கொலைகள், அதன் வழியாகப் பலராமர் இளைய யாதவரின் மீது கொள்ளும் அகப்பகை ஆகியவை துவாரகை சார்ந்த நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன.

சூதாட்டக் களம் அமைக்கப்படுதல், அதற்கு வருகை தரும் அரசர்கள், அதற்கான ஒருக்கங்கள், ஆகியவை விரிவாகப் பேசப்படுகின்றன. சூதாட்டத்தில் தருமர் தோற்பது, அதன் விளைவாக திரெளபதி அவை நடுவே அவமானப்படுத்தப்படுவது, அதிலிருந்து மீட்கப்படும் தருணம் ஆகியவற்றுடன் விதுரர் கணிகரைச் சந்திக்கும் சூழல். சகுனி சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய பகடைகளை எரித்துவிடுவது, கணிகர் விதுரரிடம் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்காமல் இருப்பதற்கு மாற்றுத் தண்டனையாக 'வனவாசம்’ குறித்துப் பேசும் உரையாடல்கள், பிதாமகர் பீஷ்மர் சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய ஆயுதசாலையில் துரியோதனனைத் தண்டிப்பது, அஸ்தினபுரியைவிட்டுச் செல்லும் விதுரரின் மனவோட்டம் என பன்னிரு படைக்களம் சம்பவங்களின் கோர்வையாக அமைந்திருக்கிறது.

பாண்டவர்கள் நகர் நீங்கிய பின் அஸ்தினபுரி சார்ந்த நிகழ்வுகள் 'காலன்’ என்பவரின் வழியாக அவர் கண்டவற்றை, தனக்கு எதிர் நின்று உரையாடியவர்களின் உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகளோடும் அப்போது அங்கிருந்த புறச்சூழலோடும் கலந்தே பாண்டவர்களிடம் உரைப்பதாக நாவலில் காட்டப்படுகிறது. தருமனுக்கும் திரெளபதிக்குமான மனப்போராட்டம், திரெளபதிக்கும் இளைய யாதவருக்குமான உரையாடல்,யாதவர் குலப் பூசல் சார்ந்து பலராமருக்கும் இளைய யாதவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்,யுவனாஸ்வன் மாந்தாஸ்யதியைப் பெற்றெடுத்து, தாயுமானவனாக மாறுவது. பாண்டவர்களின் இருப்பினைக் கௌரவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காக குந்திதேவி அஸ்தினபுரியிலேயே தங்கிவிடுவது, வனவாசத்திற்குப் புறப்படும் முன்பாகத் திரௌபதி தம் பிள்ளைகளைத் துரியோதனனின் மனைவி பானுமதியிடம் ஒப்படைப்பது, இளைய யாதவருக்கும் சால்வனுக்கும் இடையே நடக்கும் போரில் இளைய யாதவரின் படையினர் இளைய யாதவருக்கு மாறுபாடாகச் செயல்படுவது, அந்தச் சூழலையும் இளைய யாதவர் வெற்றிகொண்டு, சால்வனை வெற்றிகொள்ளுதல். என சொல்வளர்க்காடு நாடகீயமான பகுதிகளையும் கொண்டிருக்கிறது.

கானக வாழ்வில் புகும் பாண்டவர்கள் ஒவ்வொரு காடாக பயணிப்பதும் அந்தந்தக் காடுகளோடு தொடர்புடைய மெய்மைச் சிந்தனைப் பள்ளிகளில் உரையாடுவதும் என விரியும் நாவல் அதன் வழியே இந்திய நிலத்தில் உருவாகி வந்த வெவ்வேறு மெய்மை தரிசனங்களைக் காட்டுகிறது.

சொல்வளர்காட்டின் 'வேதக்கல்வியில் பெண்களின் இடம்’ குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. திரௌபதி வைரோசனரிடம் கேட்கும் வினாவிலிருந்து, 'வேதக்கல்வியின் பெண்களின் பங்களிப்பு’ குறித்து பேசும் நாவல் கார்க்கி, வதவா பிரதித்தேயி, அம்பை காத்யாயனி, சுலஃபை மைத்ரேயி எனத் தொடர்கிறது.

சொல்வளர்காட்டில் முக்கியமான கதை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சுஃபர கௌசிகர் என்ற 'ஆசுர வேள்வி’ செய்யும் அந்தணர் பற்றிய நிகழ்வு வழியே அவருக்கு உதவும் பொருட்டு அரணிக் கட்டைகளைத் தேடிச்செல்லும் பாண்டவர்கள் மாண்டு (தருமனைத் தவிர) மீண்டும் உயிர் பெறுதல், அவர்கள் மூத்த யட்சர் மணிபத்மரைத் தம் மூதாதையர்களுள் ஒருவராக ஏற்றல் ஆகியவை விவரிக்கப்படுகின்றன.

சொல்வளர்காட்டிற்குள் உபகதையாக விரியும் அரசர் சோமகன் பற்றிய கதை, கோபானர் தருமருக்கு ஹரிசந்திரன் வாழ்க்கையைக் கூறுவது, கிரிஷ்மன் மூன்று தந்தையர் கதையைக் கூறுவது, மிதிலையில் அரசமுனிவர் ஜனகர் தன்னுடைய அமைச்சர் அஸ்வலனரின் ஆலோசனையின்படி, 'பகுதட்சிணைப் பெருவேள்வி’யை நடத்துவது, அதில் பங்கேற்றும் யாக்ஞவல்கியர் தன்னுடைய மெய்யியல் சிந்தனைகளால் கார்க்கி உள்பட அனைவரையும் வெற்றிகொண்டு, 'பாரதவர்ஷத்தின் அந்தண முதல்வர்’ என்று அறியப்படுவது ஆகிய நிகழ்வுகளும் மையஓட்டத்திற்கு இணைக்கதைகளாக வருகின்றன.

தருமர் இறுதியில் கந்தமாதான மலையில் பிரபஞ்சப் பெருநெருப்பினை எதிர்கொண்டு, அதற்குத் தன்னையே உவந்தளித்து, அகத்திலும் புறத்திலும் எரிந்து, புடம்போடப்பட்ட தங்கமாக மீண்டு வருகிறார்.

கதை மாந்தர்

இளைய யாதவர், தருமர், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் விதுரர், சகுனி, துரியோதனன், குந்தி, பானுமதி, சால்வன், பலராமர், பீஷ்மர், ஹரிசந்திரன், னைகர், கிரிஷ்மன், யுவனாஷ்வன், யாக்ஞவல்கியர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Dec-2022, 12:18:12 IST