under review

பெரு விஷ்ணுகுமார்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 19: Line 19:
* [http://www.kavithaigal.in/2022/02/blog-post_93.html?m=1 பெரு விஷ்ணுகுமார் கவிதைகள் - விக்னேஷ் ஹரிஹரன்]
* [http://www.kavithaigal.in/2022/02/blog-post_93.html?m=1 பெரு விஷ்ணுகுமார் கவிதைகள் - விக்னேஷ் ஹரிஹரன்]
* [https://kanali.in/peru-vishnukumar-kavithaikal2/ பெருவிஷ்ணுகுமார் கவிதைகள்: கனலி]
* [https://kanali.in/peru-vishnukumar-kavithaikal2/ பெருவிஷ்ணுகுமார் கவிதைகள்: கனலி]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|23-Sep-2023, 07:29:30 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]

Latest revision as of 16:29, 13 June 2024

பெரு விஷ்ணுகுமார்

பெரு விஷ்ணுகுமார் (பிறப்பு: ஆகஸ்ட் 6, 1995) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

பெரு விஷ்ணுகுமார் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நெய்க்காரப்பட்டி எனும் கிராமத்தில் ஆகஸ்ட் 6, 1995-ல் பெருமாள்சாமி பாலசரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளி படிப்பை நெய்க்காரப்பட்டியில் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பெரு விஷ்ணுகுமாரின் முதல் கவிதை 2014-ல் கல்குதிரை இதழில் வெளிவந்தது. தன் ஆதர்ச கவிஞர்களாக பிரமிள், தேவதச்சன், ரூமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார். முதல் தொகுப்பு 'ழ என்ற பாதையில் நடப்பவன்' மணல்வீடு வெளியீடாக வந்தது.

இலக்கிய இடம்

"ஒரு சூழலில் கவிஞன் முதன்மையாக கவனிக்கப்படுவது புதுமைக்காகவே. நல்ல கவிதையின் அடிப்படைக்குணங்கள் மூன்று, புதுமை அல்லது பிறிதொன்றிலாத தன்மை அதில் முதன்மையானது [novelty]. பெரும்பாலும் அந்த முதல்தகுதிக்காகவே புதியகவிஞர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அதுவே இயல்பானது. ஒரு கவிஞனை வருக என்று சொல்ல அதுவே போதுமானது. பெரு.விஷ்ணுகுமார் அவ்வகையில் முக்கியமான வரவு என்றே நினைக்கிறேன். தனக்கான ஒரு மீமொழி நோக்கி செல்பவனே உண்மையான கவிஞன். பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகளில் அக்கூறுகள் உள்ளன. மூன்றாவதாகவே நாம் கவிஞனை பண்பாட்டின் பதாகையாக நிறுத்தும் அம்சத்தை கருத்தில்கொள்ளவேண்டும். அது கவித்துவதரிசனம் வெளிப்படுவது. அந்த கவித்துவதரிசனமே அவனை அச்சூழலில் மொழியில் பேசப்படும் அனைத்திலிருந்தும் அப்பால் நிறுத்துகிறது. நாம் நம்மைக் கவரும் அத்தனை கவிஞர்களிடமும் அதை எதிர்பார்க்கிறோம். விஷ்ணுகுமாரிடமும் எதிர்பார்க்கலாம்." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதை தொகுப்பு
  • ழ என்ற பாதையில் நடப்பவன் (மணல்வீடு பதிப்பகம்)
  • அசகவ தாளம் (காலச்சுவடு பதிப்பகம்)

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Sep-2023, 07:29:30 IST