நயனப்பத்து
From Tamil Wiki
நயனப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நயனம் என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும். எனவே, கண்களைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது நயனப்பத்து.[1]
அடிக்குறிப்புகள்
- ↑
பணைமுலை நயனத் தினைப்பப் பத்தால்
அணைவுறப் புகறல் அப்பத் தாகும்- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Dec-2022, 14:34:43 IST