வைத்தியநாத தம்பிரான்
From Tamil Wiki
வைத்தியநாத தம்பிரான் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வியாக்கிரபாத புராணம் இவர் மொழிபெயர்த்த முக்கியமான படைப்பாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
வைத்தியநாத தம்பிரான் யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் 17-ம் நூற்றாண்டில் பிறந்தார். தமிழ், சமஸ்கிருதத்தில் புலமை உடையவர். ஞானப்பிரகாச சுவாமிகள் காலத்தவர். உடன்பிறந்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் ஊரைவிட்டு நீங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
கண்டி அரசன் முத்துச்சாமி மன்னன் மீது பதிகம் பாடி பரிசில் பெற்றார். சமஸ்கிருதத்திலுள்ள வியாக்கிரபாத சரித்திரத்தினை தமிழில் மொழிபெயர்த்து புராணமாகப் பாடினார்.
இறுதிக்காலம்
தன் இறுதிக்காலத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்தார். அங்கே 17-ம் நூற்றாண்டில் காலமானார்.
நூல்கள் பட்டியல்
- வியாக்கிரபாத புராணம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page