முத்தையா முதலியார்
முத்தையா முதலியார் (திருவேற்காடு முத்தையா முதலியார்) (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முத்தையா முதலியார் பொ.யு. 1761-ல் திருவேற்காட்டில் பிறந்தார். ஐந்து வயதில் இவருக்கு ஏடு தொடங்கப்பட்டது. இருபத்தியொரு வயதில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, மராட்டி, பெர்சிய, லத்தீன் மொழிகளில் நிபுணத்துவம் பெற்றார். சாஸ்திரங்கள் கற்றார்.
பணி
முத்தையா முதலியாரின் மொழிப்புலமை காரணமாக சென்னை ஆளுநர் ஹோபர்ட் (Lord Hobart) தனக்கான மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்த்தினார். இலங்கைத்தீவை ஆங்கிலேயர் தம்வசப் படுத்தியபோது முத்தையா முதலியார் சென்னையிலிருந்து கொழும்புக்குத் துவிபாஷிகராகச்( மொழிபெயர்ப்பாளர்) சென்றார்.
இலக்கிய வாழ்க்கை
முத்தையா முதலியார் தம்மைப் பற்றிய சரித்திரத்தைத் தாமே எழுதினர். ஆளுநர் ஹோபர்ட் பற்றி கவிதைகள் பாடினர். அவற்றில் ஒவ்வொரு வரியின் முதலில் இவர் பெயரும் இறுதியில் ஹோபர்டின் பெயரும் வருமாறு எழுதினார். பேராசிரியர் வில்சன் (Prof. Wilson) மதுரை அரசரைப்பற்றி எழுதிய இதிகாச சரித்திரத்தில் இவரைப் பற்றியும் எழுதினார்.
உசாத்துணை
✅Finalised Page