பிரபு கங்காதரன்
பிரபு கங்காதரன் (பிறப்பு: அக்டோபர் 27, 1982) தமிழில் எழுதிவரும் கவிஞர்.
பிறப்பு, கல்வி
பிரபு கங்காதரன் அக்டோபர் 27, 1982-ல் பேபி, பாலகங்காதரன் இணையருக்கு சீர்காழியில் பிறந்தார். சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சீர்காழி வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக்கல்லூரியில் இயந்திரவியலில்(R & Ac) இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பொறியாளர். 2010-லிருந்து அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிப்ரவரி 12, 2014-ல் மருத்துவ ஆய்வக நிபுணரான உஷாவை மணந்தார். மகள் அமிர்தா.
இலக்கிய வாழ்க்கை
பிரபு கங்காதரனின் முதல் படைப்பு 'அம்புயாதனத்துக் காளி' கவிதைத் தொகுதி 2018-ல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக சாரு நிவேதிதாவைக் குறிப்பிடுகிறார். 2022-ல் 'ஊமத்தை நீலம்' கவிதைத் தொகுப்பு வெளியானது.
நூல்கள்
கவிதைத்தொகுப்பு
- அம்புயாதனத்துக்காளி - 2018
- ஊமத்தை நீலம் - 2022
வெளி இணைப்புகள்
- பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்: பதாகை
- நாகூர் நினைவுகள் – பிரபு கங்காதரன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Oct-2023, 12:48:52 IST