பழனித் திருவாயிரம்
பழனித் திருவாயிரம் (18-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பழனியில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மீது பல்வேறு யாப்புக்களால் ஆயிரம் பாடல்களாகப் பாடப்பட்டது. இதன் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
வெளியீடு
பழனித் திருவாயிரம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மகன், திமு. செந்தினாயம் பிள்ளை அவர்களால், உடுமலைப்பேட்டை அ. கிருஷ்ணசாமிப் பிள்ளையின் கிருஷ்ணன் பிரஸ்ஸில் 1915-ல் பதிப்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
ஆசிரியர்
பழனித் திருவாயிரம் நூலை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். வண்ணம் பாடுவதில் வல்லவராக அறியப்பட்டவர். புலவர் புராணம் இயற்றியவர்.
நூல் அமைப்பு
சிற்றிலக்கியத்தின் பல வகைகளை ஒரே நூலில் அமைத்துப் பாடப்பட்ட நூல் பழனித் திருவாயிரம். சாத்துக்கவிகளுக்குப் பின் நூலின் தொடக்கத்தில் உள்ள பாயிரத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து சரஸ்வதி, முருகன் மீதான காப்புப் பாடல்கள் இடம்பெற்றன. வேண்டுகோள், நிகழ்ச்சிக் கூறல், தேற்றம் ஆகியனவற்றைத் தொடர்ந்து நூல் இடம்பெற்றது. இந்நூலில் அந்தாதி, வெண்பா, யமகம், பிள்ளைக்கவி, மஞ்சரி எனப் பல்வேறு வகைமைகளில் அமைந்த ஆயிரம் பாடல்கள் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
பழநித் திருவாயிரத்தில் கீழ்க்காணும் பாடல்கள் இடம்பெற்றன.
| வெண்பாமாலை | 100 பாடல்கள் |
| வெண்பா அந்தாதி | 100 பாடல்கள் |
| அலங்காரம் | 100 பாடல்கள் |
| குருபரமாலை | 51 பாடல்கள் |
| பதிற்றுப்பத்தந்தாதி | 100 பாடல்கள் |
| ஒருபா ஒருபஃது | 10 பாடல்கள் |
| நவமணிமாலை | 81 பாடல்கள் |
| சித்திமாலை | 64 பாடல்கள் |
| நவரசம் | 9 பாடல்கள் |
| நடுஒலியலந்தாதி | 30 பாடல்கள் |
| வகுப்பு | 3 பாடல்கள் |
| வண்ணம் | 1 பாடல் |
| பிள்ளைக்கவி | 100 பாடல்கள் |
| கலம்பகம் | 100 பாடல்கள் |
| யமக அந்தாதி | 100 பாடல்கள் |
| திரிபு மஞ்சரி | 51 பாடல்கள் |
| மொத்தம் | 1000 பாடல்கள் |
|---|
பழநித் திருவாயிரத்தில் ஆயிரம் பாடல்களைத் தொடுத்துப் பழனி ஆண்டவனுக்கு அளித்துள்ளார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Aug-2025, 21:12:17 IST