under review

பத்மகுமாரி

From Tamil Wiki
பத்மகுமாரி

பத்மகுமாரி (பிறப்பு: பிப்ரவரி 3, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், வாசகசாலை, பதாகை, கலகம், கனலி ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • நட்சத்திரம்

இணைப்புகள்


✅Finalised Page