ந. பெரியசாமி
- பெரியசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பெரியசாமி (பெயர் பட்டியல்)
ந. பெரியசாமி (பிறப்பு: மார்ச் 14, 1971) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலத்தில் தொழிற்கல்வி (ITI) பயின்றார். எம்.ஏ. தமிழ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்லூரியில் பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன்.
இலக்கிய வாழ்க்கை
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 'மொழியின் நிழல்' என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார்.
2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. பின்னர் அச்சிலும் வந்துள்ளது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் இத்தொகுப்பை மொழியாக்கம் செய்துள்ளனர்.
விருது
- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது
- கலகம் விருது
- அசோகமித்ரன் படைப்பூக்க விருது
இலக்கிய இடம்
ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். "எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்" என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச் சொல்கிறார் .
நூல்கள் பட்டியல்
கவிதைத் தொகுப்புகள்
- நதிச்சிறை (2004)
- மதுவாகினி (2012)
- தோட்டாக்கள் பாயும் வெளி (2014)
- குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016)
- கடைசி பெஞ்ச் (2021)
- அகப்பிளவு
கட்டுரை தொகுப்பு
- மொழியின் நிழல் 2021
இணைப்புகள்
- ந.பெரியசாமி: வலைதளம்
- ந.பெரியசாமி: இந்து தமிழ்திசை: கட்டுரைகள்
- எளியது ஆயினும் வலியது கண்டாய் - சு.பொ.அகத்தியலிங்கம்: இளையோருக்கான கவிதைகள்: ந.பெரியசாமி
- காந்தி 152: அவர் எக்காலத்துக்குமானவர்: கவிஞர் ந. பெரியசாமி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Sep-2023, 08:11:14 IST