under review

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர்

From Tamil Wiki

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1857-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1904-ல் 'அழகவல்லி' என்ற நாவலை எழுதினார். 'சுந்தரன் செய்த தந்திரம்' இவரின் இரண்டாவது நாவல். 'எஸ்தாக்கியர் நாடகம்', 'பாலியக் கும்மி' ஆகிய நூல்களை எழுதினார். ஈழநாட்டின் முதல் நாவலெனக் கருதப்படும் ’ஊசோன் பாலந்தை’ கதையை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891-ல் பதிப்பித்தார். 'மேகவர்ணன்', 'தாமோதரன்', 'இரத்தின சிங்கம்', 'சந்திரகாசன் கதை' ஆகிய நாவல்களையும் பதிப்பித்தார்.

இறப்பு

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1921-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • எஸ்தாக்கியர் நாடகம் (1890)
  • பாலியக் கும்மி (1886)
நாவல்கள்
  • அழகவல்லி (1904)
  • சுந்தரன் செய்த தந்திரம் (1905)
பதிப்பித்தவை
  • மேகவர்ணன்
  • தாமோதரன்
  • இரத்தின சிங்கம்
  • சந்திரகாசன் கதை

உசாத்துணை


✅Finalised Page