செப்பறைச் சிதம்பர சுவாமிகள்
From Tamil Wiki
செப்பறைச் சிதம்பர சுவாமிகள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். உரையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிதம்பர சுவாமிகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். சிதம்பரத்திலும் திருநெல்வேலியிலும் செப்பறையிலும் வாழ்ந்தார். தில்லையில் உள்ள சிவஞானத் திருத்தளியை நிறுவினார்.
இலக்கிய வாழ்க்கை
செப்பறைச் சிதம்பர சுவாமிகள் திருவிருத்தத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் உரை எழுதினார். தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பு என்னும் கண்டன நூல் இவரால் எழுதப்பட்டது.
நூல் பட்டியல்
- திருவிருத்தத்த உரை
- சிவப்பிரகாச உரை
- தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பு
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:செப்பறைச் சிதம்பர சுவாமிகள்
✅Finalised Page