சம்பந்தர்
From Tamil Wiki
சம்பந்தர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சம்பந்தர் யாழ்ப்பாணம் நல்லூரில் வேலாயுதம் முதலியாரின் மகனாகப் பிறந்தார். நல்லூர் ஆறுமுக நாவலரின் சகபாடி. சரவணமுத்துப்புலவரிடம் கல்வி கற்றார். இலக்கண, இலக்கியங்கள், ஆகமசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார். வேலாயுத முதலியாரிடமும், இருபாலை சேனாதிராய முதலியாரிடமும் கல்வி பயின்றார். ‘ஓவசியர்’ வேலையில் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கதிர்காம கந்தர் மீது கீர்த்தனைகள் பல பாடினார்.
மாணவர்கள்
- சிவசம்புப்புலவர்
- செந்திநாதையர்
உசாத்துணை
✅Finalised Page