under review

சத்யா அமெரிகா சிங்

From Tamil Wiki

சத்யா அமெரிகா சிங் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர். ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சத்யா அமெரிகா சிங் இலங்கை யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்தார். சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவரின் கணவர் அமெரிகா சிங் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்.

இலக்கிய வாழ்க்கை

சத்யா அமெரிகா சிங் ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதினார். 'Touched By Jesus Ma', 'I Promise', 'Ripples of Love' ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் ஆன்மீகம் சார்ந்தவை.

இலக்கிய இடம்

சத்யா தமது தெய்வ தரிசனங்களைத் தமது பாத்திரங்கள் வாயிலாக தமது இலகுவான நுட்பத்துடன் எழுதியிருப்பதாக எழுத்தாளரும் விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரன் மதிப்பிட்டார்.

நூல் பட்டியல்

நாவல்
  • Touched By Jesus Ma
  • I Promise
  • Ripples of Love

உசாத்துணை


✅Finalised Page