under review

சத்திமுத்தப் புலவர்

From Tamil Wiki

சத்திமுத்தப் புலவர் (சக்திமுற்றப் புலவர்) (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தனிப்பாடல் திரட்டில் இவரின் பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

சத்திமுத்தப் புலவர் கும்பகோணத்தை அடுத்த சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தார். மதுரையில் அலைந்து திரிந்தார். வேலூர் ஆத்மநாததேசிகர் 'சோழ மண்டல சதகம்' நூலில் சத்திமுத்தப்புலவர் பற்றிக் குறிப்பிடுவதால் இவரின் காலம் அதற்கு முந்தையதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

சத்திமுத்தப் புலவர் தென் மதுரையில் பட்டினியோடு அலைந்து திரிந்தபோது பாடினார். அது பாண்டிய அரசனின் செவியில் விழுந்தது. அதைக் கேட்டு அவரை அழைத்து பரிசுகள் வழங்கினான். மன்னனையும் வாழ்த்திப் பாடல் பாடினார்.

பாடல் நடை

  • தனிப்பாடல்

நாராய் நாராய் செங்கா னாராய்
பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கா னாராய்
நீயுநின் மனைவியுந் தென்திசைக் குமரியாடி
வட திசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனேசுவர்க் கூரைக் கனகுரற் பல்லி
பாடுபடர்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழிஇப்
பேழையு ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டன மெனுமே

உசாத்துணை


✅Finalised Page