ஈழதேவி
From Tamil Wiki
ஈழதேவி (1957-1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால இலக்கிய மாத இதழ். இலங்கை கழுத்துறையில் இருந்து வெளிவந்தது.
வெளியீடு
ஈழதேவி 1957 முதல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்பிரமணியம். நிதி, நிர்வாகம், கழுத்துறை தமிழ்க்கழகத்தின் சார்பில் வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்தவர் நா.பாலசுப்பிரமணியம் (பாலா).
1956-ல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ் இதழை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது உதயணன், பாலா இருவரும் சிற்பியைச் சந்தித்து ஈழதேவியின் தொடர்ச்சியாகவே கலைச்செல்வி இதழைத் தொடங்கினர்.
உசாத்துணை
- தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)
- 'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன்
- கலைச்செல்வி பற்றி அருண்மொழி வர்மன்
✅Finalised Page