under review

அமதுர் ரஹீம்

From Tamil Wiki

அமதுர் ரஹீம் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், நாடகக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

அமதுர் ரஹீம் கொழும்பில் துவான் தர்மா கிச்சிலான், ரெழியா பீபீ இணையருக்குப் பிறந்தார். தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

ஆசிரியப்பணி

அமதுர் ரஹீம் சிங்கள மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராக அல்ஹிலால் மத்தியக் கல்லூரியில் சிங்கள மொழிப் பிரிவு பாடசாலையில் பணியாற்றினார்.

நாடக வாழ்க்கை

அமதுர் ரஹீம் ரூபவாஹினி, வானொலி நாடகங்களில் நடித்தார். அவை இஸ்லாமிய நிகழ்ச்சி நாடகங்களாகவும், சிங்கள மொழி நிகழ்ச்சி நாடங்களாகவும் இருந்தன. 1986-ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் இளைஞர் இதய நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பது பாத்திரங்களை கொண்ட பத்து நிமிட நாடகத்தினை மிமிக்ரி முறையில் ஒன்பது பாத்திரங்களுக்கும் குரல் கொடுத்து நடத்தினார். புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்தார். வானொலி வர்த்தக சேவையில் (விசித்ராங்ககீ) சிங்கள மொழி நிகழ்ச்சியிலும் 'குருகெதர' நிகழ்ச்சியிலும் விசேட நிகழ்ச்சிகளின் போதும் 'மெல்லிசை', 'கிராமிய சஞ்சிகை', 'இளைய இதயம்' ஆகிய நிகழ்ச்சிகளிலும் பாடினார்.

இலக்கிய வாழ்க்கை

அமதுர் ரஹீம் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதினார். 1991-ம் ஆண்டு 'சஹன' என்ற சிங்களப் பத்திரிகையில் 'வெளிநாட்டுக்கு பணிப் பெண்களாக செல்வோருக்கு பயிற்சிகள் அவசியப்படுவது ஏன்?' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையே சிங்கள மொழியில் இவர் எழுதி முதலாவதாக வெளிவந்த படைப்பு. 'மீப்புர' சிங்கள பத்திரிகையிலும் கட்டுரைகள் பல எழுதினார்.

விருதுகள்

  • 2009-ம் ஆண்டு கலாபூஷண விருது

உசாத்துணை


✅Finalised Page