அனுஷா
From Tamil Wiki
அனுஷா (இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து கவிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அனுஷா இலங்கை அம்பாறை சம்மாந்துறையில் அஸீஸ், ஹாஜரா இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பயின்றார். அமீர் அலியைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள்.
இலக்கிய வாழ்க்கை
அனுஷா கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். வானொலி நிகழ்ச்சிகளிலும் ஊவா சமூக வானொலியின் நிகழ்ச்சிகளிலும் இவரின் படைப்புகள் வெளியாகின. 'கவிதைத் தூறல்கள்' எனும் நூலை 2010-ம் ஆண்டு வெளியிட்டார். பேச்சு, விவாதம் போன்றவற்றிலும் பங்கு கொண்டார்.
நூல் பட்டியல்
- கவிதைத் தூறல்கள்
உசாத்துணை
✅Finalised Page