under review

நாலைகிழவன் நாகன்

From Tamil Wiki
Revision as of 01:32, 16 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாலைகிழவன் நாகன் (நாகன்) சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். நாலை என்ற சீறூரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

நாலைகிழவன் நாகன் நாலை என்ற பாண்டியநாட்டை ஆட்சி செய்தான். வேளாண் மரபினன் என்பது கிழான் என்ற சொல்லால் அறியலாம். பாண்டியனுக்கு (நுண்பூண் பாண்டியன்) படை வேண்டும்போது படை தந்தும், படையோடெ சென்று வாட்சண்டை புரிந்தும் அரசியல் சூழ்ச்சி வேண்டும்போது உதவியும் வந்ததாக புறநானூற்றின்(179) பாடல் வழியாக அறியலாம். வடநெடுந்தத்தனார் என்ற புலவரால் பாடப்பட்டான்.

உசாத்துணை


✅Finalised Page