சாமுவேல் சத்தியநாதன்
சாமுவேல் சத்தியநாதன் (1860-1906) கல்வியாளர்; எழுத்தாளர்; சமூகப் பணியாளர். கேம்பிரிட்ஜில் பயின்று பட்டம் பெற்றவர். W.T. சத்தியநாதன் - அன்னா சத்தியநாதனின் மகன். கிருபா பாய் - கமலா ஆகியோரின் கணவர். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் தத்துவத் துறைப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். நேஷனல் மிஷினரி சொசைட்டியைத் தோற்றுவித்தவர். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் சென்னை ராஜதானியில் நிலவிய கல்விச் சூழல்கள் குறித்து மிக விரிவாக ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
சாமுவேல் சத்தியநாதன், W.T.சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இணையருக்கு மகனாக, திருநெல்வேலியில், 1860=ல் பிறந்தார். திருநெல்வேலியில் ஆரம்பக் கல்வியையும், சென்னை, வேப்பேரியில் உள்ள ஆங்கிலிகன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் கல்வியையும் நிறைவு செய்தார். 1878-ல், W.T. சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இங்கிலாந்திற்குச் சென்றபோது கேம்பிரிட்ஜில் உள்ள கார்பஸ் க்ரிஸ்டி கல்லூரியில் சாமுவேல் சேர்க்கப்பட்டார். கணிதத்திலும் மன இயல் மற்றும் நீதி சாஸ்திரத்திலும் பயின்று இரண்டு பட்டங்கள் பெற்றார். மேற்கல்வியை நிறைவு செய்துவிட்டு 1883-ல் இந்தியா திரும்பினார்.
கிருபா பாயுடன் திருமண வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.