வேட்டகண்ணன்
From Tamil Wiki
Revision as of 07:49, 4 November 2023 by Ramya (talk | contribs) (Created page with "வேட்டகண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 389வது பாடலாக உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == வேட்டகண்ணன் வேட்டு...")
வேட்டகண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 389வது பாடலாக உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
வேட்டகண்ணன் வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவர். கண்ணன் என்பது இயற்பெயர்.
இலக்கிய வாழ்க்கை
வேட்டகண்ணன் குறுந்தொகையில் 398வது பாடல் ஒன்று பாடினார். இது குறிஞ்சித்திணைப்பாடல்.
பாடல் வழி அறிய வரும் செய்திகள்
- தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன தலைவனால் மகிழ்ந்து தன் பணியாட்களுக்கு குறும்பூழ் பறைவையை நெய்யில் வறுத்துச் சோற்றுடன் விருந்து படைக்கவேண்டும் என தலைவி மகிழ்வதாக பாடல் உள்ளது.
பாடல் நடை
- குறுந்தொகை 389 (திணை: குறிஞ்சி)
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
'நன்றோ மகனே?' என்றனென்;
'நன்றே போலும்' என்று உரைத்தோனே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: பேயனார் முதலிய 39 புலவர்கள்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.