வி.கிருஷ்ணசாமி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''கிருஷ்ணசுவாமி ஐயர்''' (''Venkatarama Iyer Krishnaswamy Iyer'', சூன் 15, 1863 – டிசம்பர் 28, 1911) இந்திய வழக்கறிஞரும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமாவார். 1912 இல் சென்னைப் பல்கலைக்கழக செனேட்டின் முன் இவரது சிலைநிற...")
 
No edit summary
Line 1: Line 1:
'''கிருஷ்ணசுவாமி ஐயர்''' (''Venkatarama Iyer Krishnaswamy Iyer'', சூன் 15, 1863 – டிசம்பர் 28, 1911) இந்திய வழக்கறிஞரும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமாவார். 1912 இல் சென்னைப் பல்கலைக்கழக செனேட்டின் முன் இவரது சிலைநிறுவப்பட்ட காலகட்டத்தில், அவ்வாறு கடற்கரையில் சிலையமைக்கப்பட்ட இந்தியர்களில் இவர்தான் முதலாமாவர்.. சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்கையில் அவரை வழி அனுப்புவதற்கும், திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளுள் ஒருவர். நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் இவரது கொள்ளுப்பேத்தி ஆவார்.
கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (15 ஜூன் 1863 – 28 டிசம்பர் 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாக காரணமாக அமைந்தவர்.


== இளமை[தொகு] ==
== பிறப்பு, கல்வி ==
ஜூன் 15, 1863 இல் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் வெங்டராம அய்யர், சுந்தரி ஆவர். இவரது தந்தை மாவட்ட முன்சீப்பாக இருந்தவர். கிருஷ்ணசாமி அய்யரின் இளவயதிலேயே அவரது அன்னை காலமானார். தனது பள்ளிப்படிப்பைத் திருவிடைமருதூர் மற்றும் தஞ்சாவூர் எஸ். பி. ஜி. உயர்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை கும்பகோணம் அரசுக் கல்லூரி மற்றும் சென்னை பிரசிடன்சி கல்லூரியிலும் முடித்தார். இந்துப் பத்திரிக்கையின் நிறுவனரின் தமையனார் சீனிவாச ராகவ அய்யங்காரின் அறிவுரைப்படி இவர் சட்டம் படித்தார். சட்டக் கல்வியை சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார்.
மாவட்ட நீதிபதி (முன்சீப்) பதவியில் இருந்த அரிவிழிமங்கலம் வெங்கட்ராம ஐயருக்கு அவருடைய முதல் மனைவி சுந்தரிக்கும் இரண்டாவது மகனாக ஜூன் 15, 1863 இல் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் கிருஷ்ணசாமி ஐயர்.பிறந்தார். சுவாமிநாதன், மகாலிங்கம் கோபாலன் என சுந்தரிக்கு நான்கு மகன்கள். வெங்கட்ராமையர் மறுமணம் செய்துகொண்டார். அதில் ராமையா, சந்திரசேகரன், ராமச்சந்திரன் என்னும் மகன்களும் மீனாட்சி என்னும் மகளும் பிறந்தனர். கிருஷ்ணசாமி ஐயரின் இளவயதிலேயே அவரது அன்னை காலமானார். தனது பள்ளிப்படிப்பைத் திருவிடைமருதூர் மற்றும் தஞ்சாவூர் எஸ். பி. ஜி. உயர்நிலைப்பள்ளிகளிலும் முடித்தார் மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை ராஜதானியிலேயே முதல் மாணவராக வெற்றி பெற்றார். 1877ல் கும்பகோணம் சென்று கல்லூரிப் படிப்பை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றர் .சென்னை பிரசிடன்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். இந்துப் பத்திரிக்கையின் நிறுவனரின் தமையனார் சீனிவாச ராகவ அய்யங்காரின் அறிவுரைப்படி இவர் சட்டம் படித்தார். சட்டக் கல்வியை சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார். இவர் தமையன் சுவாமிநாதையரும் நண்பர் சிவசாமி ஐயரும் இவருடன் சட்டம் பயின்றனர்.1882ல் சட்டத்தில் பட்டம்பெற்றார்


== தொழில்[தொகு] ==
தனிவாழ்க்கை


=== தொடக்க காலம்[தொகு] ===
திருவாலங்காட்டு ராமஸ்வாமி சாஸ்திரிகளின் மகள் பாலாம்பாள் (வாலாம்பாள்) ஐ 1878 ல் கிருஷ்ணசாமி ஐயர் மணம்புரிந்துகொண்டார். தமையன் சுவாமிநாதையர் தஞ்சாவூருக்குச் சட்டத்தொழில் செய்ய சென்றபோது அவருடன் சென்று தானும் உடனிருந்து தொழில் பயின்றார்.1884ல் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆர்.பாலாஜி ராயரிடம் இளையவழக்கறிஞர்களாகச் சேர்ந்தார். 1885ல் வழக்கறிஞர் சன்னத்து பெற்றுக்கொண்டார். தொடக்க காலத்தில் போதிய வழக்குகள் வரவில்லை. சிறிது வறுமையும் இருந்தது.
கிருஷ்ணசாமி அய்யர் 1885 இல் வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடங்கினார். தொடக்ககாலத்தில் வழக்கறிஞர் தொழிலில் அவரால் பெரிய அளவில் முன்னேறமுடியவில்லை. ஆனால் 1888 இல் பிரபலமான வழக்கறிஞரான எஸ். இராமசாமி அய்யங்கார் மாவட்ட முன்சீப்பாக நியமனமானதால் அவர் கிருஷ்ணசுவாமி அய்யரிடம் தனது பணிகளை ஒப்படைத்தார். அதன்பின் கிருஷ்ணசுவாமி அய்யர் தனது வழக்கறிஞர் தொழிலில் சிறக்கத் தொடங்கினார். 1891 இல் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
1888 இல் பிரபலமான வழக்கறிஞரான எஸ். இராமசாமி அய்யங்கார் மாவட்ட முன்சீப்பாக நியமனமானதால் அவர் கிருஷ்ணசுவாமி அய்யரிடம் தனது பணிகளை ஒப்படைத்தார். அதன்பின் கிருஷ்ணசுவாமி அய்யர் தனது வழக்கறிஞர் தொழிலில் சிறக்கத் தொடங்கினார். தஞ்சை,கடலூர், சென்னை ஆகிய ஊர்களில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சர்.எஸ்.சுப்ரமணிய ஐயருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பும் அவருடைய உதவிவழக்கறிஞராக இருந்த பி.ஆர்.சுந்தரம் ஐயருடன் இணைந்து தொழில்செய்ததும் வி.கிருஷ்ணசாமி ஐயரின் வெற்றிக்கு காரணமாகியது.
 
1988ல் சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறிய வி.கிருஷ்ணசாமி ஐயர் மைலாப்பூரில் தெற்கு மாடவீதியில் ஒரு வீட்டில் வசிக்கலானார். பின்னர் லச் சாலையில் இருந்த அஸ்ரமம் என்னும் பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி அங்கே குடியேறினார். அவருடைய வாரிசுகளும் அங்குதான் வாழ்ந்தனர்.  1891 இல் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
 
அரசியல்
 
இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பரில் உருவானதுமே சென்னையில் அதில் இணைந்தவர்களில் வி.கிருஷ்ணசாமி ஐயரும் ஒருவர். ஏற்கனவே மைலாப்பூரில் சில இளைஞர்கள் சேர்ந்து அதீனியம் என்னும் பேச்சரங்கு ஒன்றை நடத்திவந்தனர். அதில் வி.கிருஷ்ணசாமி ஐயர் பங்கேற்றிருந்தார். 1896ல் பங்கிங்ஹாம் கால்வாயை மைலாப்பூர் வழியாக வெட்ட பொறியாளர்கள் திட்டமிட்டபோது இந்த அமைப்பு ஒரு போராட்டக்குழுவாக மாறியது. அதில் வி.கிருஷ்ணசாமி ஐயர் தலைமைப் பங்கெடுத்தார். ஆனால் அப்போராட்டம் வெல்லவில்லை. சென்னையில் பீச் ரயில்நிலையம் உருவாவதையும் இவர்கள் எதிர்த்தனர். சென்னை கடற்கரை அழகும் காற்று வசதியும் அழியும் என எண்ணினர். அப்போராட்டத்தை தலைமை தாங்கியவர் ஜார்ஜ் அர்பத்நாட். அன்று வங்கியாளராக இருந்த அவர் செல்வாக்குள்ள பொதுக்குடிமகனாக அறியப்பட்டிருந்தார். இப்போராட்டங்கள் வழியாக வி.கிருஷ்ணசாமி ஐயருக்கு அரசியலார்வம் உருவானது. கோகலேயை தலைமையாக ஏற்றுக்கொண்டு சென்னையில் காங்கிரஸ் கூட்டங்கள் கூட்டினார். அரசுக்கு நகர் விரிவாக்கம், இந்தியர்களின் உரிமை சார்ந்து மனுக்கள் அளிப்பது அவர்களின் பணியாக இருந்தது
 
டவ்மிகி பிரபு


=== அர்பனாத்னாட்டு வங்கி[தொகு] ===
1906 இல் அர்பனாத்னாட்டு வங்கி மூழ்கியதால் அவ் வங்கியில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் நஷ்டத்துக்குள்ளானார்கள். வங்கியை நடத்தியவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வங்கியின் முக்கிய பங்குதாரர் சிறைப்பட்டார். இதில் கிருஷ்ணசாமி அய்யரின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதன்பின் இந்தியன் வங்கியை உருவாக்க உதவினார்.
1906 இல் அர்பனாத்னாட்டு வங்கி மூழ்கியதால் அவ் வங்கியில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் நஷ்டத்துக்குள்ளானார்கள். வங்கியை நடத்தியவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வங்கியின் முக்கிய பங்குதாரர் சிறைப்பட்டார். இதில் கிருஷ்ணசாமி அய்யரின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதன்பின் இந்தியன் வங்கியை உருவாக்க உதவினார்.



Revision as of 19:52, 1 March 2022

கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (15 ஜூன் 1863 – 28 டிசம்பர் 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாக காரணமாக அமைந்தவர்.

பிறப்பு, கல்வி

மாவட்ட நீதிபதி (முன்சீப்) பதவியில் இருந்த அரிவிழிமங்கலம் வெங்கட்ராம ஐயருக்கு அவருடைய முதல் மனைவி சுந்தரிக்கும் இரண்டாவது மகனாக ஜூன் 15, 1863 இல் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் கிருஷ்ணசாமி ஐயர்.பிறந்தார். சுவாமிநாதன், மகாலிங்கம் கோபாலன் என சுந்தரிக்கு நான்கு மகன்கள். வெங்கட்ராமையர் மறுமணம் செய்துகொண்டார். அதில் ராமையா, சந்திரசேகரன், ராமச்சந்திரன் என்னும் மகன்களும் மீனாட்சி என்னும் மகளும் பிறந்தனர். கிருஷ்ணசாமி ஐயரின் இளவயதிலேயே அவரது அன்னை காலமானார். தனது பள்ளிப்படிப்பைத் திருவிடைமருதூர் மற்றும் தஞ்சாவூர் எஸ். பி. ஜி. உயர்நிலைப்பள்ளிகளிலும் முடித்தார் மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை ராஜதானியிலேயே முதல் மாணவராக வெற்றி பெற்றார். 1877ல் கும்பகோணம் சென்று கல்லூரிப் படிப்பை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றர் .சென்னை பிரசிடன்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். இந்துப் பத்திரிக்கையின் நிறுவனரின் தமையனார் சீனிவாச ராகவ அய்யங்காரின் அறிவுரைப்படி இவர் சட்டம் படித்தார். சட்டக் கல்வியை சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார். இவர் தமையன் சுவாமிநாதையரும் நண்பர் சிவசாமி ஐயரும் இவருடன் சட்டம் பயின்றனர்.1882ல் சட்டத்தில் பட்டம்பெற்றார்

தனிவாழ்க்கை

திருவாலங்காட்டு ராமஸ்வாமி சாஸ்திரிகளின் மகள் பாலாம்பாள் (வாலாம்பாள்) ஐ 1878 ல் கிருஷ்ணசாமி ஐயர் மணம்புரிந்துகொண்டார். தமையன் சுவாமிநாதையர் தஞ்சாவூருக்குச் சட்டத்தொழில் செய்ய சென்றபோது அவருடன் சென்று தானும் உடனிருந்து தொழில் பயின்றார்.1884ல் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆர்.பாலாஜி ராயரிடம் இளையவழக்கறிஞர்களாகச் சேர்ந்தார். 1885ல் வழக்கறிஞர் சன்னத்து பெற்றுக்கொண்டார். தொடக்க காலத்தில் போதிய வழக்குகள் வரவில்லை. சிறிது வறுமையும் இருந்தது.

1888 இல் பிரபலமான வழக்கறிஞரான எஸ். இராமசாமி அய்யங்கார் மாவட்ட முன்சீப்பாக நியமனமானதால் அவர் கிருஷ்ணசுவாமி அய்யரிடம் தனது பணிகளை ஒப்படைத்தார். அதன்பின் கிருஷ்ணசுவாமி அய்யர் தனது வழக்கறிஞர் தொழிலில் சிறக்கத் தொடங்கினார். தஞ்சை,கடலூர், சென்னை ஆகிய ஊர்களில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சர்.எஸ்.சுப்ரமணிய ஐயருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பும் அவருடைய உதவிவழக்கறிஞராக இருந்த பி.ஆர்.சுந்தரம் ஐயருடன் இணைந்து தொழில்செய்ததும் வி.கிருஷ்ணசாமி ஐயரின் வெற்றிக்கு காரணமாகியது.

1988ல் சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறிய வி.கிருஷ்ணசாமி ஐயர் மைலாப்பூரில் தெற்கு மாடவீதியில் ஒரு வீட்டில் வசிக்கலானார். பின்னர் லச் சாலையில் இருந்த அஸ்ரமம் என்னும் பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி அங்கே குடியேறினார். அவருடைய வாரிசுகளும் அங்குதான் வாழ்ந்தனர். 1891 இல் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல்

இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பரில் உருவானதுமே சென்னையில் அதில் இணைந்தவர்களில் வி.கிருஷ்ணசாமி ஐயரும் ஒருவர். ஏற்கனவே மைலாப்பூரில் சில இளைஞர்கள் சேர்ந்து அதீனியம் என்னும் பேச்சரங்கு ஒன்றை நடத்திவந்தனர். அதில் வி.கிருஷ்ணசாமி ஐயர் பங்கேற்றிருந்தார். 1896ல் பங்கிங்ஹாம் கால்வாயை மைலாப்பூர் வழியாக வெட்ட பொறியாளர்கள் திட்டமிட்டபோது இந்த அமைப்பு ஒரு போராட்டக்குழுவாக மாறியது. அதில் வி.கிருஷ்ணசாமி ஐயர் தலைமைப் பங்கெடுத்தார். ஆனால் அப்போராட்டம் வெல்லவில்லை. சென்னையில் பீச் ரயில்நிலையம் உருவாவதையும் இவர்கள் எதிர்த்தனர். சென்னை கடற்கரை அழகும் காற்று வசதியும் அழியும் என எண்ணினர். அப்போராட்டத்தை தலைமை தாங்கியவர் ஜார்ஜ் அர்பத்நாட். அன்று வங்கியாளராக இருந்த அவர் செல்வாக்குள்ள பொதுக்குடிமகனாக அறியப்பட்டிருந்தார். இப்போராட்டங்கள் வழியாக வி.கிருஷ்ணசாமி ஐயருக்கு அரசியலார்வம் உருவானது. கோகலேயை தலைமையாக ஏற்றுக்கொண்டு சென்னையில் காங்கிரஸ் கூட்டங்கள் கூட்டினார். அரசுக்கு நகர் விரிவாக்கம், இந்தியர்களின் உரிமை சார்ந்து மனுக்கள் அளிப்பது அவர்களின் பணியாக இருந்தது

டவ்மிகி பிரபு

1906 இல் அர்பனாத்னாட்டு வங்கி மூழ்கியதால் அவ் வங்கியில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் நஷ்டத்துக்குள்ளானார்கள். வங்கியை நடத்தியவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வங்கியின் முக்கிய பங்குதாரர் சிறைப்பட்டார். இதில் கிருஷ்ணசாமி அய்யரின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதன்பின் இந்தியன் வங்கியை உருவாக்க உதவினார்.

நீதியரசராக[தொகு]

1909 இல் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசரானார். இப் பதவியில் இவர் 15 மாதங்களே இருந்தார். அதன்பிறகு சென்னை மாகாண ஆளுனரின் செயற்குழு உறுப்பினராக பிரித்தானிய இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

பிற செயற்பாடுகள்[தொகு]

சுவாமி விவேகானந்தர்[தொகு]

1893 இல் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சிகாகோ பயணத்திற்கான பணம் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்கையில் அவரை வழி அனுப்புவதற்கும், திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளுள் இவரும் ஒருவர்.

அரசியலில்[தொகு]

பொதுச் செயல்களில் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகக் கிருஷ்ணசாமி அய்யர் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டார். 1907 இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியினரின் மிதவாத மற்றும் அதிவாத நபர்களை ஒருங்கிணைத்தார். இவரது இச் செயல் கோபால கிருஷ்ண கோகலேயால் பாராட்டப்பட்டது.

கல்வி[தொகு]

சாதி வேற்றுமை பாராமல் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், பெண்கல்விக்கும் முக்கியத்துவம் தந்தார். சென்னைப் பல்கலைக்கழக செயற்பாடுகளில் பல கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1893 இல் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சிகாகோ பயணத்திற்கான பணம் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

மெரினா கடற்கரைக்காக போராடியவர்[தொகு]

இவர் 1890 களில் தென்னிந்திய ரயில்வே, மயிலாப்பூரையும் கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றி 1903 இல் வேலை தொடங்கும் சமயம் அதை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினைக் கைவிட்டது.

தமிழ் ஈடுபாடு[தொகு]

திருவாசகம் மீதும் தமிழ் மீதும் அவருக்கு இருந்த பற்றை உ.வே.சா பாராட்டியுள்ளார். இவர் பாரதியாரின் பாடல்களை அச்சிட்டு இலவசமாக வழங்கியவர்.

மரணம்[தொகு]

கிருஷ்ணசுவாமி அய்யர் 1911 இல் காலமானார். மகாத்மா காந்தியால் ’மகாபுருஷர்’ என்று குறிப்பிடப்பட்டார்.

வெளியிணைப்புகள்[தொகு]

  • வி.கிருஷ்ணசுவாமி ஐயர் இணையதளம்