வி.கனகசபைப் பிள்ளை: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Kanakasabhai.jpg|thumb|கனகசபைப் பிள்ளை]] | [[File:Kanakasabhai.jpg|thumb|கனகசபைப் பிள்ளை]] | ||
வி.கனகசபைப் பிள்ளை ( 25மே 1855 - 21 | வி.கனகசபைப் பிள்ளை ( 25மே 1855 - 21 பெப்ருவரி 1906) தமிழறிஞர், இலக்கிய ஆய்வாளர், பதிப்பாளர், இலக்கிய வரலாற்றசிரியர். தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து காலவரிசைப் படுத்தியவர். | ||
== பிறப்பு, கல்வி. == | == பிறப்பு, கல்வி. == | ||
Line 9: | Line 9: | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
====== பதிப்புப்பணி ====== | |||
கனகசபைப் பிள்ளை நூல்பதிப்பில் ஈடுபாடு கொண்டவர். ஊர் ஊராக ஏட்டுச் சுவடிகளை தேடி அலைந்தார். கிடைத்த சுவடிகளை எழுத்தில் பதிவுசெய்வதற்கென்றே தனியாக அப்பாவுப் பிள்ளை என்பவரை பணியில் அமர்த்திக்கொண்டார். கிட்டதட்ட இருபது வருடங்கள் அப்பாவுப் பிள்ளை கனகசபை அவர்களுடனிருந்து சுவடிகளை பிரதி எடுக்கும் பணியைச் செய்தார்.கனகசபை பிள்ளை தான் சேகரித்த ஏராளமான சுவடிகளை உ.வே.சாமிநாதையருக்கு அளித்து அவருடைய பதிப்பு முயற்சிக்கு உதவினார். | |||
====== வரலாற்றெழுத்து ====== | |||
கனகசபைப் பிள்ளை Madras Review எனும் இதழில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடராக எழுதினார். The Tamils Eighteen Hundred Years Ago என்று இக்கட்டுரைகள் நூலாயின. தமிழ் வரலாற்றை இலக்கியம் வழியாக எழுதும் முன்னோடி முயற்சி இது. ([https://noolaham.org/wiki/index.php/The_Tamils_Eighteen_Hundred_Years_Ago இணைய நூலகம் முழுவடிவம்] ) .இந்நூலை தமிழில் [[கா.அப்பாத்துரை]] மொழியாக்கம் செய்தார். | |||
====== மொழியாக்கம் ====== | |||
வி.கனகசபைப் பிள்ளை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு பழைய இலக்கியங்களான களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழன் உலா ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். | |||
== மறைவு == | |||
கனகசபைப் பிள்ளை 21 பெப்ருவரி 1906, சிவராத்திரி நாளில் தனது 50வது அகவையில் காஞ்சிபுரத்தில் காலமானார். |
Revision as of 17:06, 17 February 2022
வி.கனகசபைப் பிள்ளை ( 25மே 1855 - 21 பெப்ருவரி 1906) தமிழறிஞர், இலக்கிய ஆய்வாளர், பதிப்பாளர், இலக்கிய வரலாற்றசிரியர். தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து காலவரிசைப் படுத்தியவர்.
பிறப்பு, கல்வி.
யாழ்பாணத்தில் மல்லாகம் ஊரைச்சேர்ந்த தமிழறிஞர் விஸ்வநாதம் பிள்ளையின் மகனாக 25 மே 1855 ல் பிறந்தார்.விஸ்வநாதம் பிள்ளை பீட்டர் பெர்சிவல் மற்றும் போல் வின்ஸ்லோ ஆகியவர்களிடம் ஆங்கிலம் கற்றார். அவர்கள் சி.வை. தாமோதரம் பிள்ளையை சென்னைக்கு படிக்க அனுப்பிய போது இவரையும் உடன் அனுப்பி வைத்தனர். சென்னைக்குச் சென்ற விசுவநாதம் பிள்ளை பி.ஏ படித்தபின் சென்னை கோமளேசுவரன் பேட்டையில் அரசுப்பணியேற்று வசித்தார். அவர் மகனாகிய கனகசபை பிள்ளை. சிறு வயது முதல் தந்தையாரிடமே தமிழ் கற்று சென்னையில் பள்ளிக்கல்வியை முடித்து பி.ஏ. பட்டம் பெற்று சட்டப் படிப்பையும் முடித்தார்.
தனிவாழ்க்கை
கனகசபைப் பிள்ளை 1876ல் செல்லம்மாளை மணந்தார். மதுரையில் வழக்கறிஞர் தொழில் பார்க்கையில் தமிழார்வம் கொண்டார். வழக்கறிஞர் தொழில் பிடிக்காமல் தபால்துறையில் அதிகாரியாகப் பதவியில் சேர்ந்தார். 29 ஆம் வயதில் தொடர்ந்து விஸ்வநாதம் பிள்ளை மறைந்தார். தாயும் அவ்வாண்டே இறந்தார். அவருடைய இரு குழந்தைகளும் இளமையில் மறைந்தன.
இலக்கியவாழ்க்கை
பதிப்புப்பணி
கனகசபைப் பிள்ளை நூல்பதிப்பில் ஈடுபாடு கொண்டவர். ஊர் ஊராக ஏட்டுச் சுவடிகளை தேடி அலைந்தார். கிடைத்த சுவடிகளை எழுத்தில் பதிவுசெய்வதற்கென்றே தனியாக அப்பாவுப் பிள்ளை என்பவரை பணியில் அமர்த்திக்கொண்டார். கிட்டதட்ட இருபது வருடங்கள் அப்பாவுப் பிள்ளை கனகசபை அவர்களுடனிருந்து சுவடிகளை பிரதி எடுக்கும் பணியைச் செய்தார்.கனகசபை பிள்ளை தான் சேகரித்த ஏராளமான சுவடிகளை உ.வே.சாமிநாதையருக்கு அளித்து அவருடைய பதிப்பு முயற்சிக்கு உதவினார்.
வரலாற்றெழுத்து
கனகசபைப் பிள்ளை Madras Review எனும் இதழில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடராக எழுதினார். The Tamils Eighteen Hundred Years Ago என்று இக்கட்டுரைகள் நூலாயின. தமிழ் வரலாற்றை இலக்கியம் வழியாக எழுதும் முன்னோடி முயற்சி இது. (இணைய நூலகம் முழுவடிவம் ) .இந்நூலை தமிழில் கா.அப்பாத்துரை மொழியாக்கம் செய்தார்.
மொழியாக்கம்
வி.கனகசபைப் பிள்ளை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு பழைய இலக்கியங்களான களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழன் உலா ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
மறைவு
கனகசபைப் பிள்ளை 21 பெப்ருவரி 1906, சிவராத்திரி நாளில் தனது 50வது அகவையில் காஞ்சிபுரத்தில் காலமானார்.