being created

வாசுகி குணரத்தினம்

From Tamil Wiki
Revision as of 11:42, 20 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "வாசுகி குணரத்தினம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == வாசுகி குணரத்தினம் இலங்கை மட்டக்களப்பு அமிர்தகழியில் செ குணரத்தினத்தின் மகள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வாசுகி குணரத்தினம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

வாசுகி குணரத்தினம் இலங்கை மட்டக்களப்பு அமிர்தகழியில் செ குணரத்தினத்தின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை கவிஞர். வாசுகி ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயத்தில் கற்றார். இடைநிலை, உயர்கல்வியை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப் பாடத்தில் பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வாசுகி குணரத்தினம் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதி வருகிறார். பன்னிரெண்டு வயதில் முதல் கவிதை எழுதினார். இக்கவிதை இலங்கை வானொலியின் சிறுவர் மலரில் ஒலிபரப்பானது. தொடர்ந்து வீரகேசரி, தினக்கதிர் ஆகிய நாளிதழ்களிலும், பெண், உதயம் போன்ற இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களும் சான்றிதழ்களும் பாராட்டும் பெற்றார்.

உசாத்துணை

  • ஆளுமை:குணரத்தினம், வாசுகி: noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.