வாசஸ்பதி மிஸ்ரர்
From Tamil Wiki
வாசஸ்பதி மிஸ்ரர் ( பொயு8/9 ஆம் நூற்றாண்டு) வாஸஸ்பதி மிஸ்ரர். இந்திய தத்துவ சிந்தனையாளர். அத்வைத வேதாந்த மரபைச் சேர்ந்தவர். மண்டனமிஸ்ரரின் மாணவர். அத்வைத வேதாந்தத்தில் பாமதி மரபை உருவாக்கியவர். மொழியியலாளர், மீமாம்ச மரபைச் சேர்ந்த இலக்கணநூல்களையும் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
காலம்
வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரரின் சமகாலத்தவர். சங்கரருடன் விவாதித்து பின் அவருடைய மாணவராகி, வேதாந்த தத்துவஞானியாக ஆன மண்டனமிஸ்ரரின் நேரடி மாணவர். சங்கரரை விட ஒரு தலைமுறை இளையவராக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது
கல்வி
வாசஸ்பதி மிஸ்ரரின் தொடக்கக் கல்வி மீமாம்சையைச் சார்ந்தது. பட்டமீமாம்சை அறிஞரான மண்டனமிஸ்ரர் அவருடைய நேரடி ஆசிரியர். சன்
sarva-tantra-sva-tantra.
தனிவாழ்க்கை
வாசஸ்பதி மிஸ்ரர் இன்றைய பிகாரில், மதுபானி என்னும் ஊரில், ஒரு மைதிலி பிராமணக் குடியில் பிறந்தார்.