வண்ணநிலவன்
வண்ணநிலவன் டிசம்பர் 15, 1949 ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் பிறந்தார். இயற்பெயர் உ. ராமச்சந்திரன். இவர் எழுத்தாளர், இதழாளர், விமர்சகர், திரைப்பட வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர். தனது படைப்புகளின் வழியாக மானுடப் பேரன்பை மிகுதியாக வெளிப்படுத்தியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
உலகநாதபிள்ளை- இராமலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 15, 1949 ஆம் நாள் திருநெல்வேலியில் பிறந்தார். சுப்புலட்சுமி என்பவரை ஏப்ரல் 07,1977ஆம் நாள் மணந்தார். இவருக்கு ஆனந்த் சங்கர், சசி, உமா ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தன. தற்போது சென்னையில் வசிக்கிறார்.
பணிகள்
கவிஞர் விக்கிரமாதித்யனால் பத்திரிகைத் துறைக்கு அறிமுகமானார். கவியரசு நா.காமராசன் நடத்தி வந்த"சோதனை" பத்திரிகையில் பணியாற்றினார். பின்பு, சோ நடத்திய ‘துக்ளக்’ பத்திரிகையிலும் அதன் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார். இயக்குநர் ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவாகப் பணியாற்றினார்.
படைப்புகள்
நாவல்கள்
- நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1975)
- கடல்புரத்தில் (1977)
- கம்பா நதி (1979)
- ரெயினீஸ் ஐயர் தெரு (1981)
- உள்ளும் புறமும் (1990)
- காலம் (2006)
- எம். எல். (நற்றிணை - 2018)
- By the sea (Indian Writing - 2008)
சிறுகதைத் தொகுப்புகள்
- எஸ்தர் (1976)
- பாம்பும் பிடாரனும்
- தர்மம் (1983)
- தாமிரவருணிக் கதைகள் (1992)
- வண்ணநிலவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு (நற்றிணை - 2013)
- கரையும் உருவங்கள்
- தேடி தேடி கதைகள் (1996)
- யுகதர்மம் (1996)
- இரண்டு உலகங்கள் (காலச்சுவடு - 2021)
- மழைப்பயணம் (சந்தியா - 2019)
- தாசன் கடைவழியாக அவர் செல்வதில்லை (நற்றிணை - 2012)
- முத்துக்கள் பத்து (வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் )
- வண்ணநிலவன் சிறுகதைகள் (ஒலிப்புத்தகம்)
- வண்ணநிலவன் கதைகள் (2001)
கவிதைத் தொகுப்பு
- மெய்ப்பொருள் (1981)
- வண்ணநிலவன் கவிதைகள் (சந்தியா - 2020)
கட்டுரைத் தொகுப்புகள்
- பின்னகர்ந்த காலம் (முதல் பாகம்)
- பின்னகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்) - (சந்தியா - 2019)
- சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் (நற்றிணை - 2014)
- இலக்கியமும் இலக்கியவாதிகளும் (காலச்சுவடு - 2022)
வசனம்
- ‘அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
திரைக்கதை
- ‘அவள் அப்படித்தான்’ திரைக்கதை (நற்றிணை - 2011)
நேர்காணல்
- எண்ணமும் எழுத்தும் (அகநி வெளியீடு - 2021)
- ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் ( நற்றிணை - 2012)
நினைவுக் குறிப்புகள்
- மறக்க முடியாத மனிதர்கள் (காலச்சுவடு - 2019, கிழக்கு - 2012)
விருதுகள்
- இலக்கியச் சிந்தனை விருது
- தமிழ் வளர்ச்சி கழக பரிசு
- ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது
- சாரல் விருது - 2012
இலக்கிய முக்கியத்துவம்
மனிதநேயத்தையும் மானுடப் பேரன்பையும் படைப்புகளின் வழியாகப் பல்வேறு தளங்களில் வெவ்வேறு சூழல்களைக் கட்டமைத்து வெளிப்படுத்தியவர். இவர் உருவாக்கிய கதைமாந்தர்கள் பெரும்பாலும் எளிமையானவர்கள். சமுதாயத்தின் கடுமையான சூழலை எதிர்கொள்ளும் மனஉறுதி படைத்தவர்கள். இவரின் படைப்புகள் வாசகருக்குத் தன்னம்பிக்கையை மிகுதிப்படுத்துகின்றன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
This page is being created by User:Dr.P.Saravanan