being created

லக்ஷ்மி

From Tamil Wiki
Revision as of 00:14, 9 March 2022 by NVKalpakam (talk | contribs)
லக்ஷ்மி

லக்ஷ்மி (லட்சுமி) (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழ் நாவலாசிரியர். பொதுவாசிப்புக்கான குடும்ப நாவல்களை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட லக்ஷ்மி, மார்ச் 23, 1921 அன்று சீனிவாசன், பட்டம்மாள் (சிவகாமி) தம்பதிக்கு மூத்த மகளாய் பிறந்தார். இவரது தந்தை சீனிவாசன் ஒரு மருத்துவர்.

சிதம்பரம் அம்மாபேட்டையின் திண்ணை பள்ளியிலும் பின்னர் தொட்டியம் ஆரம்ப பள்ளியிலும் ஆரம்ப கல்வி கற்றார். முசிறி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரியின் உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உயர்நிலை கல்வி கற்றார். திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து, பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

லக்ஷ்மி

சென்னையில் மருத்துவராக இருந்த லக்ஷ்மி, இலங்கையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில், தென்னாப்பிரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரும் பத்திரிக்கையாளருமான கண்ணபிரானை சந்தித்தார். 1955ம் ஆண்டு கண்ணபிரானை மணந்து, தென்னாப்பிரிக்காவிற்கு சென்றார். அங்கும் மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் உண்டு. லக்ஷ்மியின் கணவர், 1966ம் ஆண்டு மறைந்த பின்பும், 1977 வரை தென்னாப்பிரிக்காவில் பணியாற்றினார். அதன் பின் சென்னையில் தன் வாழ்வின் இறுதி வரை வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

Book.jpg

லக்ஷ்மியின் முதல் சிறுகதை 'தகுந்த தண்டனையா?' ஆனந்த விகடன் இதழில் 1940ம் ஆண்டு வெளியாகியது. இச்சிறுகதை எழுதும் போது அவர் மருத்துவ கல்லூரி மாணவி. கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் வந்த போது, ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. வாசன் அவர்களை சந்தித்து பெற்ற வாய்ப்பினால் இந்த சிறுகதையை எழுதியதாக லக்ஷ்மி கூறியுள்ளார்.

சில சிறுகதைகளுக்கு பின் அவரது முதல் நாவல் 'பவானி'யும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. படிப்பு முடியும் முன்பே பெண்மனம் நாவலும் எழுதினார். லக்ஷ்மியின் பெரும்பான்மையான நாவல்கள் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்தன. மகப்பேறு மருத்துவரான லக்ஷ்மி, தன் துறை சார்ந்து தாய்மை, குழந்தை மருத்துவம் குறித்து ஆறு நூல்கள் எழுதி இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் வசித்த போது, தன் அனுபவங்களை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார். இந்த கட்டுரைகள் பின்பு தென் ஆப்ரிக்காவில் பல ஆண்டுகள் என்ற தலைப்பில் நூலாக தொகுக்கப் பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பெண்ணான காவிரியின் இந்திய பயண அனுபவங்களை விவரிக்கும் லக்ஷ்மியின் நாவலான 'ஒரு காவிரியை போல', 1984 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இந்த நாவல் குங்குமம் இதழில் தொடராக வெளி வந்தது.

1930களில் பெண் கல்வி மற்றும் இரண்டாம் உலகப் போர் சமூகத்தில் உண்டாக்கிய விளைவுகளின் சித்திரம், லக்ஷ்மியின் சுயசரிதையான 'ஒரு கதாசிரியையின் கதை'யில் உள்ளது. குங்குமம் இதழில் தொடராக வெளியான 'ஒரு கதாசிரியையின் கதை' பின்பு நூல் வடிவில் இரு தொகுதிகளாக பூங்கொடி பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது.

திரைப்பட பங்களிப்பு

லக்ஷ்மியின் 'பெண் மனம்' நாவல் 'இருவர் உள்ளம்' என்ற பெயரிலும், 'காஞ்சனையின் கனவு' நாவல் 'காஞ்சனா' என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளி வந்தன.

இலக்கிய இடம்

நூல்கள்

விருதுகள்

உசாத்துணை







🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.