being created

லக்ஷ்மி

From Tamil Wiki
Revision as of 01:21, 6 March 2022 by NVKalpakam (talk | contribs)
லக்ஷ்மி

லக்ஷ்மி (லட்சுமி) (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழ் நாவலாசிரியர். பொதுவாசிப்புக்கான குடும்ப நாவல்களை எழுதியவர். தொழில் முறை மகப்பேறு மருத்துவர்.

பிறப்பு, கல்வி

திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட லக்ஷ்மி, மார்ச் 23, 1921 அன்று சீனிவாசன், பட்டம்மாள் (சிவகாமி) தம்பதிக்கு மூத்த மகளாய் பிறந்தார். இவரது தந்தை சீனிவாசன் ஒரு மருத்துவர்.

லக்ஷ்மியின் தந்தை சீனிவாசன், சென்னையில் மருத்துவம் படித்து கொண்டு இருந்ததால், லக்ஷ்மி பிறந்து சில ஆண்டுகள் வரை, அவரது அம்மாவின் பெற்றோருடன் சிதம்பரம் அம்மாபேட்டையில் வசித்து வந்தார். லக்ஷ்மியின் தாத்தா முத்துஸ்வாமி ஐயர், லக்ஷ்மியை, அம்மாபேட்டையில் உள்ள ஒரு திண்ணை பள்ளியில் சேர்த்து விட்டார். அதன்பின், லக்ஷ்மியின் குடும்பம் திருச்சிக்கு அருகில், அவர்களது சொந்த ஊரான தொட்டியத்துக்கு இடம் பெயர்ந்ததும், அங்கு இருந்த ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றார்.

உயர்நிலை கல்விக்கு முசிறியில் ஒரு ஆண்கள் பள்ளி மட்டுமே இருந்தது. கடும் முயற்சிக்கு பின், முசிறி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரே மாணவியாக சேர்ந்து, ஐந்து ஃபாரம் வரை படித்தார். மேலும் படிப்பை தொடர பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுமதி மறுத்து விட்டதால், திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரி உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்தார். திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து, பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சென்னையில் மருத்துவராக இருந்த லக்ஷ்மி, இலங்கையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர் கண்ணபிரானை சந்தித்தார். 1955ம் ஆண்டு கண்ணபிரானை மணந்து, அவருடன் தென்னாப்பிரிக்கவிற்கு சென்றார். அங்கும் மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் உண்டு. லக்ஷ்மியின் கணவர், 1966ம் ஆண்டு மறைந்த பின்பும், 1977 வரை தென்னாப்பிரிக்காவில் பணியாற்றினார். அதன் பின் சென்னையில் தன் வாழ்வின் இறுதி வரை வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.