யெஸ்.பாலபாரதி
யெஸ்.பாலபாரதி ( ) தமிழில் குழந்தையிலக்கியம் எழுதிவரும் எழுத்தாளர். ஊடகவியலாளர். கற்றல்குறைபாடுள்ள குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வுக்காக களப்பணியாற்றுபவர்
பிறப்பு, கல்வி
யெஸ்.பாலபாரதி இராமேஸ்வரத்தில் 24 ஜனவரி1974ல் ஸ்ரீதரன் - புஷ்பா தேவி இணையருக்கு பிறந்தா. இராமேஸ்வரம் அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வி. இளங்கலை (சமூகவியல்) பட்டப்படிப்பை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முடித்தார்
தனிவாழ்க்கை
யெஸ்.பாலபாரதி ஆர். லக்ஷ்மி பாலகிருஷ்ணனை 2008 ல் மணம்புரிந்துகொண்டார். பா.ல.கனிவமுதன் என்னும் மகன். ஊடகவியலாளராகப் பணிபுரிகிறார்
இலக்கியவாழ்க்கை
யெஸ்.பாலபாரதியின் முதல் படைப்பு: 1994 ல் எழுதி பிரசுரம் ஆன கவிதை. 2000ஆம் ஆண்டு, முதல் புத்தகமான, ஹைக்கூ கவிதை நூல் வெளியானது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்: பாரதி, கு. அழகிரிசாமி, கி.ரா, ஜெயந்தன், ஜி.நாகராஜன், தி. ஜானகிராமன் கந்தர்வன். குழந்தையிலக்கியத்தில் வாண்டுமாமா, தம்பி சீனிவாசன், முல்லைத்தங்கராசு, கல்வி கோபாலகிருஷ்ணன்.
விருதுகள்
மரப்பாச்சி சொன்ன ரகசியம் - நூலுக்கு விகடன் விருது, வாசகசாலை விருது, சாகித்திய அகாதெமி வழங்கிய, பால புரஷ்கார் விருது.
புதையல் டைரி- சிறார் நாவலுக்கு தமிழ்நூல் வெளியிட்டார் & விற்பனையாளர் வழங்கிய விருது, சிறார் இலக்கிய செயற்பாட்டிற்கு குழந்தைகள் தேசிய புத்தகக்கண்காட்சியில் விருது.
நூல்பட்டியல்
கவிதை
இதயத்தில் இன்னும்
நாவல்
அவன் -அது =அவள்
குறுநாவல்
துலக்கம்
சந்துருவுக்கு என்ன ஆச்சு?
சிறுகதை*
சாமியாட்டம்
கட்டுரைகள்
ஆட்டிசம் சில புரிதல்கள்
அன்பான பெற்றோரே!
பிள்ளைத்தமிழ்
சிறார் நூல்கள்
ஆமை காட்டிய அற்புத உலகம்
சுண்டைக்காய் இளவரன்
புதையல் டைரி
மரப்பாச்சி சொன்ன ரகசியம்
சிங்கம் பல்தேய்க்குமா?
சேர்ந்து விளையாடலாம்!
யானை ஏன் முட்டை இடுவதில்லை?
உட்கார்ந்தே ஊர் சுற்ற...
தலைகீழ் புஸ்வாணம்
பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
மந்திரச் சந்திப்பு
மொழிபெயர்ப்பு
நான்காவது நண்பன்
என்னதான் நடந்தது
எல்லைகள்
ஆறு
மொட்டைமாடி உள்ள வீடு
குட்டிப்பாட்டி ]
13. அரசியல் செயல்பாடுகள் ? :
எக்கட்சியிலும் உறுப்பினர் இல்லை. அரசியலில் பெரியாரிய - இடதுசாரி பார்வை உடையவன்.
14. பெயர்: இயற்பெயர்: எஸ்.பாலகிருஷ்ணன். புனைப்பெயர்: