யவனிகா ஸ்ரீராம்: Difference between revisions
Line 12: | Line 12: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
தமிழில் இதுவரை ஏழு கவிதைத்தொகுதிகளும் ஒரு கட்டுரைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரது கவிதைகள் சமகாலத்தில் பின்காலனித்துவ அரசியல் பார்வைகளைக் கொண்டவை. | தமிழில் இதுவரை ஏழு கவிதைத்தொகுதிகளும், ஒரு கட்டுரைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரது கவிதைகள் சமகாலத்தில் பின்காலனித்துவ அரசியல் பார்வைகளைக் கொண்டவை. | ||
தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார். | தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார். |
Revision as of 20:01, 31 May 2022
யவனிகா ஸ்ரீராம்[], கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். அரசியல் மற்றும் பாலுமை சார்ந்த கவிதைகள் எழுதுபவர்.
பிறப்பு மற்றும் கல்வி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பிறந்தார். இயற்பெயர் இளங்கோவன்.
தனி வாழ்க்கை
தனது தந்தையின் குடும்ப வணிகத்தை மேற்கொண்டு தமிழ்நாடு முழுக்க, கிழக்காசிய நாடுகளுக்கும், இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கும் பல தடவை பயணம் செய்தவர்.
இலக்கிய வாழ்க்கை
தமிழில் இதுவரை ஏழு கவிதைத்தொகுதிகளும், ஒரு கட்டுரைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரது கவிதைகள் சமகாலத்தில் பின்காலனித்துவ அரசியல் பார்வைகளைக் கொண்டவை.
தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார்.
விருதுகள்
- பாண்டிச்சேரி மீறல் அமைப்பு வழங்கிய கபிலர் விருது
- விருதாச்சலம் களம்புதிது விருது
- நெய்வேலி லிக்னைட் வழங்கிய சிறந்த படைப்பாளர் விருது
- ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது
படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
- இரவு என்பது உறங்க அல்ல
- கடவுளின் நிறுவனம்
- சொற்கள் உறங்கும் நூலகம்
- திருடர்களின் சந்தை
- காலத்தில் வராதவன்
- தலைமறைவு காலம்
- அலெக்ஸாண்டரின் காலனி
கட்டுரைத் தொகுப்பு
- சந்தையில் விற்க ஒருபொருளும் இல்லை
இலக்கிய இடம்
உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை.
"தொண்ணூறுகளில் மார்க்சிய லட்சியவாதத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு இடதுசாரிக் கவிஞர்களின் ஓர் அணி தமிழில் உருவாகியது. அவர்கள் லட்சியவாத்தை உணர்ச்சிகரமாக கூவி முன் நிறுத்தவில்லை. அறைகூவும் தோரணை அவர்களிடமில்லை. அவர்களை பெரிதும் பாதித்த கவிஞர்கள் ஆத்மா நாம் போன்ற இருத்தலியலை எளிய விளையாட்டுத்தனம் மூலம் முன்வைத்தவர்கள். மொழியாக்கம் வழியாக வந்த ழாக் பிரெவர் போன்ற ஐரோப்பியக் கவிஞர்கள். யவனிகா ஸ்ரீராம், லிபி ஆரண்யா இருவரையும் அவர்களில் முதன்மையானவர்களாகச் சுட்டிக்காட்டலாம்." என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.