மௌனி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
Work in process, being created by User:Kalpakam
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) மணிக்கொடி இதழில் எழுதிய தமிழ் எழுத்தாளர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் தறிக்கெட்ட தன்மையை தேர்ந்த மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
எஸ். மணி ஐயர் எனகின்ற இயற் பெயருடைய மௌனி, 1907ம் ஆண்டு, ஜூலை 27, தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியில் பிறந்தார். உயர் நிலைக் கல்வி வரை கும்பகோணத்தில் பயின்றார். பின் 1929ம் ஆண்டு, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவருக்கு மௌனி என்ற புனைபெயரை சூட்டியது மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா.