being created

மௌனி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:


=== தனி வாழ்க்கை ===
=== தனி வாழ்க்கை ===
திருமணமாகி 14 வருடங்கள் மௌனி கும்பகோணத்தில் வசித்தார். பின், தன் குடும்ப தொழில் மற்றும் சொத்துக்களை பராமரிக்க சிதம்பரம் சென்று, இறுதி வரை சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். மௌனிக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து குழந்தைகள். மூத்த இரு மகன்களும் விபத்தில் மரணமடைந்து விட்டனர்.  மூன்றாவது மகன் மன நிலை சரியில்லாமல் இருந்து 2004ல் காலமானார். தன் இறுதிக் காலத்தில் மகளுடன் சிதம்பரத்தில் மௌனி வாழ்ந்தார்.
திருமணமாகி 14 வருடங்கள் மௌனி கும்பகோணத்தில் வசித்தார். பின், தன் குடும்ப தொழில் மற்றும் சொத்துக்களை பராமரிக்க சிதம்பரம் சென்று, இறுதி வரை சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். மௌனிக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து குழந்தைகள். மூத்த இரு மகன்களும் விபத்தில் மரணமடைந்து விட்டனர்.  மூன்றாவது மகன் மன நிலை சரியில்லாமல் இருந்து 2004ல் காலமானார். மௌனி, தன் இறுதிக் காலத்தில் மகளுடன் சிதம்பரத்தில் வாழ்ந்தார்.




[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:06, 30 January 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

Work in process, being created by User:Kalpakam

மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) மணிக்கொடி இதழில் எழுதிய தமிழ் எழுத்தாளர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் தறிக்கெட்ட தன்மையை தேர்ந்த மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

எஸ். மணி ஐயர் எனகின்ற இயற் பெயருடைய மௌனி, 1907ம் ஆண்டு, ஜூலை 27, தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியில் பிறந்தார். உயர் நிலைக் கல்வி வரை கும்பகோணத்தில் பயின்றார். பின் 1929ம் ஆண்டு, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவருக்கு மௌனி என்ற புனைபெயரை சூட்டியது மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா.

தனி வாழ்க்கை

திருமணமாகி 14 வருடங்கள் மௌனி கும்பகோணத்தில் வசித்தார். பின், தன் குடும்ப தொழில் மற்றும் சொத்துக்களை பராமரிக்க சிதம்பரம் சென்று, இறுதி வரை சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். மௌனிக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து குழந்தைகள். மூத்த இரு மகன்களும் விபத்தில் மரணமடைந்து விட்டனர். மூன்றாவது மகன் மன நிலை சரியில்லாமல் இருந்து 2004ல் காலமானார். மௌனி, தன் இறுதிக் காலத்தில் மகளுடன் சிதம்பரத்தில் வாழ்ந்தார்.