முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்: Difference between revisions
Line 18: | Line 18: | ||
== கோயில் அமைப்பு == | == கோயில் அமைப்பு == | ||
கோயில் தரைமட்டத்தில் இருந்து 38 படிகளுக்கு மேல் பாறையில் உள்ளது. | |||
முன் அரங்கில் செம்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் ஐந்தடுக்கு பித்தளை விளக்கு அகியவை உள்ளது. அரங்கு 5 தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆனது. | |||
வடமேற்க்கு வெளிபிராகாரத்தில் பரிவார தெய்வமாக அய்யப்பன் உள்ளார். சிறிய நாகர் சிற்ப்பங்களும் உடன் உள்ளன. மேற்கு வெளிப்பிராகாரத்தில் வாசல் உள்ளது. வாசலை ஒட்டி பூசகர்கள் குளிக்க சிறிய குளம் உள்ளது. தென்மேற்க்கில் நாகர் பரிவார தெய்வமும் அருகே 20 அடி உயரமுள்ள பாறையும் உள்ளது. தெற்கு பிராகாரத்தின் மேற்கு பகுதியில் பக்தர்கள் குளிக்க குளம் ஒன்று உள்ளது. தெற்கு வெளிப்பிராகாரத்தில் வாசல் உள்ளது. தென்கிழக்கில் 5 அடி உயர பாறை உள்ளது. | |||
சுற்றி மதிலால் சூழ்ந்துள்ள ஒரு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் கோவில்கள் உள்ளன. | |||
== வரலாறு == | == வரலாறு == |
Revision as of 00:37, 1 February 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
This page is being created by User:Arulj7978
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் சூலபாணி. ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு தனி கோவில்கள் உள்ளது. பன்னிரண்டு ஆலயங்களில் முதல் ஆலயம் ஆகும்.
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள ஊர் முஞ்சிறை. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பிரிந்து தேங்காய்பட்டணம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது முஞ்சிறை. முஞ்சிறை மேல்நிலை பள்ளியின் எதிரே உள்ள சாலையில் 40 அடி உயர பாறை மேல் உள்ளது ஆலயம்.
மூலவர்
ஆலயத்தின் மூலவர் பெயர் சூலபாணி. மூலவர் லிங்க வடிவில் உள்ளார். சூலத்தை கையில் ஏந்தியவர் என்ற பொருளில் சூலபாணி என்று அழைக்கப்படுகிறார். கி.பி. 1435 காலத்திய கல்வட்டு மூலவரை மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. பிற்கால கல்வெட்டுகளிலும் சூலபாணி என்ற பெயர் காணப்படவில்லை.
தொன்மம்
முஞ்சிறை திருமலை ஆலயம் குறித்து இரண்டு தொன்மக்கதைகள் உள்ளன.
ராமாயண கதை : ராவணன் சீதையை கவர்ந்து செல்கையில் விமானம் பழுதடைந்து தரை இறங்கியது. சீதையை இங்கு தான் முதலில் சிறை வைத்தான் ராவணன். விமானம் பழுது நீக்கப்பட்ட பின்பு சீதையை கொண்டு சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான் ராவணன். சீதை முதலில் சிறை வைக்க பட்ட இடம் முஞ்சிறை என்றானது.
முருகன் கதை : பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை முருகன் சிறை பிடித்து வைத்த இடம் முஞ்சிறை என்றானது. அப்போது பிரம்மனின் முன் தோன்றிய வடிவம் தான் சூலப்பாணி ஆனது.
கோயில் அமைப்பு
கோயில் தரைமட்டத்தில் இருந்து 38 படிகளுக்கு மேல் பாறையில் உள்ளது.
முன் அரங்கில் செம்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் ஐந்தடுக்கு பித்தளை விளக்கு அகியவை உள்ளது. அரங்கு 5 தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆனது.
வடமேற்க்கு வெளிபிராகாரத்தில் பரிவார தெய்வமாக அய்யப்பன் உள்ளார். சிறிய நாகர் சிற்ப்பங்களும் உடன் உள்ளன. மேற்கு வெளிப்பிராகாரத்தில் வாசல் உள்ளது. வாசலை ஒட்டி பூசகர்கள் குளிக்க சிறிய குளம் உள்ளது. தென்மேற்க்கில் நாகர் பரிவார தெய்வமும் அருகே 20 அடி உயரமுள்ள பாறையும் உள்ளது. தெற்கு பிராகாரத்தின் மேற்கு பகுதியில் பக்தர்கள் குளிக்க குளம் ஒன்று உள்ளது. தெற்கு வெளிப்பிராகாரத்தில் வாசல் உள்ளது. தென்கிழக்கில் 5 அடி உயர பாறை உள்ளது.
சுற்றி மதிலால் சூழ்ந்துள்ள ஒரு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் கோவில்கள் உள்ளன.