மீனாட்சி புத்தக நிலையம்
From Tamil Wiki
மீனாட்சி புத்தக நிலையம் (1960) மதுரையில் தொடங்கப்பட்ட பதிப்பு நிறுவனம். செ. செல்லப்பச் செட்டியார் தனது நண்பர் குழந்தையன் செட்டியாருடன் இணைந்து இந்தப் பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். மீனாட்சி புத்தக நிலையம் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் தொடங்கி தமிழண்ணல் வரை பல எழுத்தாளர்கள், தமிழறிஞர்களின் நூல்களை வெளியிட்டது. மீனாட்சி பதிப்பக வெளியீடுகள் சிலவற்றுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது.