மாவளத்தான்
மாவளத்தான்
வாழ்க்கைக் குறிப்பு
சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி. அண்ணனுக்கு உதவியாக இவன் ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள் இருந்தவன் நெடுங்கிள்ளி என்னும் சோழ அரசன். மாவளத்தன் என்னும் புலவர் இவன் என்று கருதுவாரும் உண்டு.
தேர்வண் கிள்ளியின் தம்பி வார்கொல் கொடுமரம் மறவர் பெருமான். வார்கோல் என்பது அம்ப. கொடுமரம் என்பது வில். அம்புவில் வீரப் பெருமகன். கடுமான் கைவண் தோன்றல். விரைந்து பாயும் குதிரையைச் செலுத்துவதில் கைவளம் மிக்கவன்.
இலக்கிய வாழ்க்கை
மாவளத்தானைப் பாடிய புலவர்கள் கோவூர் கிழார் தாம்பபல் கண்ணனார்
பாடல் நடை
புறநானூறு 43
எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும் 5
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக! 10
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் 15
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்! 20
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
- புறநானூறு 45
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 5
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.