மாருதி (ஓவியர்)
மாருதி (ஓவியர் மாருதி; வி. ரங்கநாதன்) (ஆகஸ்ட் 28, 1938 - ஜூலை 27, 2023) ஓவியர். இதழ்களில், புத்தகங்கங்களில், காமிக்ஸ்களில் வரைந்தார். மாநாட்டு மலர்கள் உள்பட பல சிறப்பு மலர்களில் பங்களித்தார். ‘வீர மங்கை வேலு நாச்சியார்' நாடகம், ’உளியின் ஓசை' திரைப்படம் போன்றவற்றில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
வி. ரங்கநாதன் என்னும் இயற்பெயரை உடைய மாருதி, ஆகஸ்ட் 28, 1938 அன்று, புதுக்கோட்டையில், டி.வெங்கோப ராவ் - பத்மாவதி பாய் இணையருக்குப் பிறந்தார். புதுகோட்டையில் பள்ளிக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளங்கலை வகுப்புப் படித்தார்.
தனி வாழ்க்கை
மாருதியின் மனைவி பெயர் விமலா. மகள்கள் சுபாஷிணி, சுஹாசினி.
ஓவிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.