மருதூர் அரங்கராசன்
முனைவர் மருதூர் அரங்கராசன் இலக்கணம் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி, இலக்கண நூல்களை எழுதியவர்., தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற யாப்பறிந்து பாப்புனைய என்ற நூலை எழுதியவர். முனைவர் பொற்கோ வின் மாணவர்.
பிறப்பு,கல்வி
அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952 இல் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆகியோருக்குப் பிறந்தவர். உயர்நிலைக் கல்வி வரை மருதூரிலும், , புகுமுக வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், இளம் அறிவியல் வகுப்பினைச் சென்னைத் தியாகராயர் கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியப்படிப்பைத் தஞ்சாவூர், பூண்டியில் அமைந்துள்ள திருபுட்பம் கல்லூரியிலும் பயின்றவர். அதன் பிறகு இளம் முனைவர் பட்டத்திற்குப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஆய்வுசெய்தவர். முனைவர் பட்டத்திற்காக முனைவர்.பொற்கோ அவரகளை நெறியாளராகக் கொண்டு வேற்றுமை மயக்கம் என்ற தலைப்பில் ஆய்வுசெய்தவர். இவர்தம் நெறியாளராக இருந்து இலக்கணத் துறையில் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளராக இவரை வளர்த்தெடுத்த பெருமை முனைவர் பொற்கோ அவர்களுக்கு உண்டு. தம்மை நிறைபுலமைச் சான்றோராய் அமைத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் பட்டயம், சான்றிதழ்க் கல்வியைக் கற்றுள்ளார். அவற்றுள் சமற்கிருதம்– பட்டயம், மொழியியல் – சான்றிதழ் , முதுகலை – கல்வியியல், முதுகலை – உயர்கல்வியியல், பள்ளிக்கல்வி – பட்டயம், ஆகியவை குறிப்பிடத்தகுந்தன.