மனுஷ்ய புத்திரன்
From Tamil Wiki
மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 15, 1968) தமிழில் எழுதிவரும் கவிஞர், பாடலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிக்கையாசிரியர், பதிப்பாளர்.
வாழ்க்கைக்குறிப்பு
மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் அப்துல் ஹமீது, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மார்ச் 15, 1968-ல் பிறந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.
விருதுகள்
- 2002-ல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது.
- 2003-ல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருது பெற்றார்.
- 2004-ல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருது பெற்றார்.
- 2011-ல் அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்பிற்கு கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது வழங்கப்பட்டது.
- 2016-ல் ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது வழங்கியது.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்புகள்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
- என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
- இடமும் இருப்பும் (1998)
- நீராலானது (2001)
- மணலின் கதை(2005)
- கடவுளுடன் பிரார்த்தித்தல்(2007)
- அதீதத்தின் ருசி (2009)
- இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
- பசித்த பொழுது (2011)
- சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
- அருந்தப்படாத கோப்பை (2013)
- தித்திக்காதே [2016]
கட்டுரைத் தொகுப்புகள்
- காத்திருந்த வேளையில் (2003)
- எப்போதும் வாழும் கோடை (2003)
- என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009)
- எதிர் குரல் - பாகம் 4 கை விட்ட கொலைக் கடவுள் (2013)
- எதிர் குரல் - பாகம் 3 குற்றமும் அரசியலும் (2013)
- எதிர் குரல் - பாகம் 2 (2013)
- டினோசர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றன (2013)
- தோன்ற மறுத்த தெய்வம் (2013)
- எதிர் குரல் பாகம் 1 (2013)
இணைப்புகள்
- உயிர்மை வலைதளம்