under review

மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்

From Tamil Wiki
Revision as of 16:19, 2 May 2022 by Ramya (talk | contribs) (Created page with "மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == மதுரையில் மருதங்கிழாரின் மகனாகப் பிறந்தார். ச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் மருதங்கிழாரின் மகனாகப் பிறந்தார். சங்கப் புலவர் சோகுத்தனாரின் உடன் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் குறுந்தொகையில் 332வது பாடல் பாடினார். பாலைத்திணைப் பாடலாக உள்ளது “தலைவன் வரையாமல் வந்தொழுகிய காலத்தில் ஒருநாள் அவன்சிறைப்புறத்தில் நிற்பத் தலைவிக்கு, ’தலைவனுக்கு நின்துயர் நிலையைக்கூறினால் என்?’ என்று தோழி கூறியது.” என்ற துறையின் கீழ் உள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை: 332

வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறுயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி யிழிதரு
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.