under review

மதுரை சமணப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 1: Line 1:
மதுரையில் சமணமலையின் ([[எண்பெருங்குன்றம்]] மலைகளுள் ஒன்று) இருக்குன்றுகளிலும் சமணசமயக் குரவர்களான ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் வாழ்ந்ததற்கான சான்றுகளை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த சமண முனிவர்களும் கர்நாடகத்தைச்(ஷ்ரவணபெளகொளாவிலிருந்து) சேர்ந்த முனிவர்களும் இங்கு வந்து தங்கியுள்ளனர். இதில் பாண்டிய நாட்டு [[குறண்டி மலை (எண்பெருங்குன்றம்)|குறண்டி மலை]]ப் பள்ளியிலிருந்து வந்த சமணக்குரவர்களின் மாணவர்களே இங்கு அதிக அளவில் செல்வாக்குடன் இருந்துள்ளனர். ஆனால் இவர்களது சங்கம், கணம், கச்சம், அன்வயம் போன்ற சமணர்களுக்கு உரிய பிரிவுகள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.  
மதுரையில் சமணமலையின் ([[எண்பெருங்குன்றம்]] மலைகளுள் ஒன்று) இருக்குன்றுகளிலும் சமணசமயக் குரவர்களான ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் வாழ்ந்ததற்கான சான்றுகளை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த சமண முனிவர்களும் கர்நாடகத்தைச்(சிரவணபெளகொளாவிலிருந்து) சேர்ந்த முனிவர்களும் இங்கு வந்து தங்கியுள்ளனர். இதில் பாண்டிய நாட்டு [[குறண்டி மலை (எண்பெருங்குன்றம்)|குறண்டி மலை]]ப் பள்ளியிலிருந்து வந்த சமணக்குரவர்களின் மாணவர்களே இங்கு அதிக அளவில் செல்வாக்குடன் இருந்துள்ளனர். ஆனால் இவர்களது சங்கம், கணம், கச்சம், அன்வயம் போன்ற சமணர்களுக்கு உரிய பிரிவுகள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.  
== ஆசிரியர்கள் ==
== ஆசிரியர்கள் ==
சமண ஆசிரியர்கள் தேவர், படாரர், அடிகள், பெரியடிகள், பண்டிதர் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.  
சமண ஆசிரியர்கள் தேவர், படாரர், அடிகள், பெரியடிகள், பண்டிதர் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.  
Line 56: Line 56:
==உசாத்துணை==
==உசாத்துணை==
*எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்
*எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சமணத் தலங்கள்]]
[[Category:சமணத் தலங்கள்]]

Latest revision as of 08:04, 12 November 2023

மதுரையில் சமணமலையின் (எண்பெருங்குன்றம் மலைகளுள் ஒன்று) இருக்குன்றுகளிலும் சமணசமயக் குரவர்களான ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் வாழ்ந்ததற்கான சான்றுகளை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த சமண முனிவர்களும் கர்நாடகத்தைச்(சிரவணபெளகொளாவிலிருந்து) சேர்ந்த முனிவர்களும் இங்கு வந்து தங்கியுள்ளனர். இதில் பாண்டிய நாட்டு குறண்டி மலைப் பள்ளியிலிருந்து வந்த சமணக்குரவர்களின் மாணவர்களே இங்கு அதிக அளவில் செல்வாக்குடன் இருந்துள்ளனர். ஆனால் இவர்களது சங்கம், கணம், கச்சம், அன்வயம் போன்ற சமணர்களுக்கு உரிய பிரிவுகள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.

ஆசிரியர்கள்

சமண ஆசிரியர்கள் தேவர், படாரர், அடிகள், பெரியடிகள், பண்டிதர் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள்

மாணவர்கள் தம் ஆசிரியரின் வழிமுறையோடு குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் மாணாக்கர், சட்டன் என்று குறிப்பிடப்படுகின்றனர். இங்கு மாணவர்களாக இருந்தவர்கள் தகுதி பெற்ற பின்பு இப்பள்ளியின் ஆசிரியராக மாறியுள்ளனர்.

குறண்டி அஷ்டோபவாசிபடாரர்

ஆசிரியர் குறண்டி அஷ்டோபவாசி படாரரின் இரண்டு மாணவர்கள் முக்கியமானவர்கள். குணசேனதேவரும், மகாணந்திப் பெரியாரும் இப்பள்ளியின் மூத்த சமணக்குரவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் குணசேனதேவரின் மாணவர்களே இப்பள்ளியில் அதிக அளவில் இருந்துள்ளனர்.

குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணவர் பட்டியல்
  • குணசேனதேவர்
    • கனகவீரப்பெரியடிகள்*
    • தெய்வப்பல தேவர்*
    • வர்த்தமானப் பண்டிதர்
      • குணசேனப்பெரியடிகள் (மாணவர்)*
    • அந்தலையான்*
    • சிங்கடைபுரத்துக் கண்டன்பொற்பட்டன்*
    • அரையங்காவிதி*
    • அந்தலையான் மாசேனன்
    • பெயர் அறியமுடியவில்லை
      • சந்திரபிரபர்(மாணவர்)*
  • மகாணந்திப் பெரியார்

* - குறண்டி மலைப்பள்ளியில் உள்ள திருவுருவங்களைச் செய்தவர்கள்


இவர்களைத் தவிர குறண்டியில் வாழ்ந்த இரண்டு சமணக்குரவர்களும் மதுரைக்காட்டாம்பள்ளியைச் சார்ந்த ஒருவரும் இப்பள்ளியில் இருந்த மூத்த சமணக்குரவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்களில் குறண்டி அபினந்தனப்படாரரின் வழிமுறை பின்வருமாறு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

II. குறண்டி கனகனந்திப்படாரர்
|
அபினந்தனப்பிடாரர்
|
அரிமண்டலப்பிடாரர்
|
அபினந்தனப்பிடாரர்*
III. குறண்டி அமித்தீனமரைகள் கனகந்தி*
IV. மதுரைக் காட்டாம்பள்ளி அரிஷ்டநேமியடிகள்*





மேலே குறிப்பிடப்பட்டவர்களோடு சிரவணபெளகோளாவிலிருந்து வந்த ஆறு சமயக்குரவர்களும் மடம் அமைத்து இப்பள்ளியில் தங்கினர். சமணமலையில் காணும் இவர்களின் பெயர்களைக் கொண்டு நந்திகணம், சேனைகணம், தேவகணம் என்ற பிரிவினைச் சேர்ந்த சமணமுனிவர்கள் இப்பள்ளியில் வாழ்ந்துள்ளனர் என்று அறிய முடிகிறது.

இப்பள்ளியின் தலைவராக அதன் நிர்வாகத்தினை ஏற்று நடத்தியவர் குறண்டி ஆசிரியர் வழி வந்த குணசேனதேவர் என்பது, "இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர்" என்றும் "இப்பள்ளிவுடைய குணசேனதேவர்" என்றும் சமணமலையில் உள்ள ஆறு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. குணசேனதேவரின் தலைமையில் இப்பள்ளி பொ.யு. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியிருக்க வேண்டும் என்று இதனை ஆய்வு செய்த முனைவர் வெ. வேதாசலம் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

  • எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்


✅Finalised Page