புஷ்பதந்தர்
From Tamil Wiki
புஷ்பதந்தர் (சுவிதிநாதர்) சமண சமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கர். சமண சமய நம்பிக்கையின்படி புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகர் நிலைக்கு உயர்ந்தார்.
புராணம்
புஷ்பதந்தர், சுக்ரீவன் - சுப்பிரியா இணையருக்கு, தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவில் உள்ள குக்குந்தூ எனுமிடத்தில் பிறந்தவர். புஷ்பதந்தர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தவர்.
அடையாளங்கள்
- உடல் நிறம்: வெண்நிறம்
- லாஞ்சனம்: முதலை
- மரம்: பவழமல்லி
- உயரம்: 100வில் (300 மீட்டர்)
- முக்தியின் போது வயது: 200000 பூர்வ வருடங்கள்
- முதல் உணவு: ஷாலிப்பூரின் புஷ்பமித்ரா வழங்கிய கீர்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 88 (விதர்ப்)
- யட்சன்: அஜிதன்
- யட்சினி: மகாகாளி
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.